தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்


மக்கள் திரள் பேட்டியாளர் (Mass Interviewer in Public Health and Preventive Medicine)


சமூக இயல் வல்லுநர், சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை (Social Case Work Expert in Prisons & Correctional Department )


கல்வித் தகுதி


திரள் பேட்டியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் Anthropology/ Sociology / Economics / Home Science / Social Work ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.


சமூக இயல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்க Social Work or Social Service / Social Science / Criminology / Sociology / Andragogy படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


 மக்கள் திரள் பேட்டியாளர் (Mass Interviewer in Public Health and Preventive Medicine) - ரூ.19,500 - 71,900/-


சமூக இயல் வல்லுநர், சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை (Social Case Work Expert in Prisons & Correctional Department ) - ரூ.35,600 - ரூ.1,30,800/- 


வயது வரம்பு விவரம்


 




விண்ணப்பக் கட்டணம்: 


நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150


எழுத்துத் தேர்வு - ரூ.100


தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்: 




ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:


விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.


எழுத்துத் தேர்வு மையங்கள்:


இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்: 


 





எப்படி விண்ணப்பிப்பது?


www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கியமான நாட்கள்:





 


விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2023


அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/tamil/18_2023__TAM.pdf- என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.