செம மெகா அறிவிப்பு உங்களுக்காகவே வந்திருச்சு... மிஸ் செஞ்சா வருத்தப்படுவீங்க
1429 சுகாதார ஆய்வாளர் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க.

செம மெகா அறிவிப்பு உங்களுக்காகவே வெளியாகி இருக்கு. மாதம் ரூ.71,900 வரை சம்பளம் கிடைக்கும். அட ஆமாங்க. 1429 சுகாதார ஆய்வாளர் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 16, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,500 – ரூ. 71,900 வரை. சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசு வேலைகளில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்த சுகாதார ஆய்வாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பச் செயல்முறை கடந்த 27.10.2025 அன்று தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் வரும் நவம்பர் 16.11.2025 ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் சில அத்தியாவசிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பு (HSC) தேர்வை உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் (Botany) மற்றும் விலங்கியல் (Zoology) பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 10-ம் வகுப்பு (SSLC) தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். மேலும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW) (ஆண்) / சுகாதார ஆய்வாளர் (HI) / சுகாதாரத் துறை ஆய்வாளர் (SI) பாடப் பிரிவின் சான்றிதழையும் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பதாரர்களின் வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10-ம் வகுப்பு தரம்) நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டமாக, சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (CBT - Computer Based Test) அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் SC / SCA / ST / DAP பிரிவினருக்கு: ரூ.300/-, மற்ற பிரிவினருக்கு: ரூ.600/ ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mrb.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடைசி தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள். மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க. சீக்கிரம் அனுப்பிடுங்கள்.





















