ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) பெயரில் சமூக வலைதளங்களில் வெளியான 4 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என பி.ஐ.பி.(PIB) தெரிவித்துள்ளது. 


சமீப நாட்களாக ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியாகின. இதையெடுத்து 4,000 எஸ்.ஐ. , கான்ஸ்டபிள் பணியிடங்கள் (RPF 01/2024 and CEN Number RPF 02/2024) உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. 







போலியான வேலைவாய்ப்பு அறிவிப்பு


இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மத்திய அரசின் உண்மையை ஆராய்ந்து விளக்கம் அளிக்கும் PIB Fact Check எக்ஸ் தளத்தில் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. 


அதில், ரயில்வே அமைச்சம் எஸ்.ஐ., மற்றும் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. உங்களுடைய தனிப்பட்ட தகவல் எதையும் அளிக்க வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளது.