இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (ஒப்பந்த அடிப்படையில் யங் புரொபஷனல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (ஜூன் 6) முடிவடைகிறது. தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ. 1.5 லட்சம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்கள் பின்வருமாறு:

Continues below advertisement

பணி மற்றும்ஊதியம்

இது முழுமையாக ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 1,50,000 நிலையான ஊதியமாக வழங்கப்படும். இதைத் தவிர வேறு எந்த கூடுதல் படிகளோ சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பி.இ / பி.டெக் அல்லது எம்.இ / எம்.டெக் அல்லது எம்.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Continues below advertisement

பணிஅனுபவம்மற்றும்வயதுவரம்பு

தகவல் தொழில்நுட்பத் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட முன் அனுபவம் இருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்களின் வயது 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் (அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி வயது தளர்வுகள் பொருந்தும்).

விண்ணப்பக்கட்டணம்

பொது, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு இன்றி நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதித் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும்முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் RBI-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு: https://rbi.org.in/