மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளான குரூப் 1, குரூப் 2/2A, குரூப் 4 மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் (SI & PC) தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்காக, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகளுக்குப் பயிற்சி அளிக்கத் திறமையான மற்றும் அனுபவமிக்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பயிற்றுநர்களுக்கான நேர்முகத் தேர்வு

இந்தப் பயிற்சி வகுப்புகளில் பயிற்றுநராகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும்.

பயிற்றுநர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் விவரங்கள்

Continues below advertisement

நேர்முகத் தேர்வு நாள் : 10.12.2025 (புதன்கிழமை) 

நேரம்: காலை 11.00 மணி 

இடம் : மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.

நேர்முகத் தேர்விற்கு வரும்போது, பயிற்றுநர்கள் கீழ்க்கண்டவற்றைத் தயாராக எடுத்துவர வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது

* பாடக் குறிப்புகள்: தாங்கள் நடத்த விரும்பும் பாடத்திற்கான விரிவான குறிப்புகள்.

* பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி (PPT): தேவைப்பட்டால், விளக்கக்காட்சிக்கான ஸ்லைடுகள்.

* முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள்: சம்பந்தப்பட்ட தேர்வுகளின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் அவற்றிற்கான விடைகள்.

* மாதிரித் தேர்வு நடத்துவதற்கான கேள்வி மற்றும் பதில்கள்: பயிற்சி மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகள் நடத்தி, அவர்களின் திறனை மதிப்பிட உதவும் கேள்விகள் மற்றும் சரியான விடைகள்.

இது, நேர்முகத் தேர்வின்போது பயிற்றுநர்களின் கற்பிக்கும் திறனையும், பாட அறிவையும் மதிப்பிடுவதற்குப் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்றுநர்களுக்கான  தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளில் (Main Examination) கலந்துகொண்ட அனுபவமிக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்த விருப்பம் இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்றுநர்கள் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

* சுயவிவரப் படிவம்: தங்களது கல்வித் தகுதிகள், பணி அனுபவம், அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற அனுபவம் தொடர்பான முழுமையான சுயவிவரப் படிவம்.

* 5 நிமிட காணொலிக் காட்சி: தாங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தும் முறையை விளக்கும் ஒரு 5 நிமிட காணொலிக் காட்சி (Video). இது அவர்களின் கற்பிக்கும் பாணியையும், தகவல்களைப் புரியவைக்கும் திறனையும் வெளிப்படுத்த உதவும்.

இந்த ஆவணங்களை, studycircledemayil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதோடு, நேர்முகத் தேர்விலும் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்றுநர்கள் தேர்வு குறித்த மேலும் தகவல்களுக்கு

பயிற்றுநர்கள் தேர்வு குறித்த மேலும் ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழ்க்கண்ட WhatsApp எண்ணைத் தொடர்புகொள்ளலாம்:

WhatsApp எண்: 9499055904

இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தரமான பயிற்சி கிடைப்பதோடு, அனுபவம் வாய்ந்த இளைஞர்களுக்குத் தங்கள் அறிவையும் திறனையும் பகிர்ந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அரசு வேலை கனவை நோக்கிப் பயணிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.