தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 50 வயதுக்கு கீழ் உள்ள தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு:


இதுகுறித்து வெளியான அறிக்கையில், "01.07.2024 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள்/முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடமிருந்து, தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவின் கீழ்க் கண்ட பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்படின் நீட்டிக்கப்படலாம்) பணி புரிய, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது எஸ்.எஸ்.சி. தேர்ச்சி பெற்று, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து, ராணுவம், NSG, CAPF. CME/புனே, போன்றவற்றில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவுகளால் நடத்தப்படும் பயிற்சியில் தகுதி பெற்று, இத்துறை மற்றும் பிற தொடர்புடைய பிரிவில் அறிவு மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவற்றுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதிய பயிற்சி அளிக்கும் திறன் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:-


சம்பளம் எவ்வளவு?


(i) ஆய்வாளர்-BDDS (முன்னாள் சுபேதார்/சுபேதார் மேஜர்) பணியிடங்கள் ஊதிய அளவு: 37700-119500 7


(ii) உதவி ஆய்வாளர்-BDDS (முன்னாள் நாயிப் சுபேதார்) பணியிடங்கள் ஊதிய அளவு: 36900-116600 21


(இ) தலைமை காவலர்-BDDS (முன்னாள் ஹவில்தார் / நாயக்) 36 பணியிடங்கள் ஊதிய அளவு: 20600-65500


தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்களுடன் (Biodata) கூடிய விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களுடன் காவல் துறைத் தலைவர், செயலாக்கம், மருதம், எண்.17. போட் கிளப் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு தபால் மூலம் 14.11.2024 க்குள் அனுப்ப வேண்டும்.


தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வு (எழுத்து மற்றும் நடைமுறைத் தேர்வுகள்) போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்புக் கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?