தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


பருவகால பட்டியல் எழுத்தர் -80 


பருவகால காவலர்-80


மொத்த பணியிடங்கள்- 160 


பணியிடம்: இராணிப்பேட்டை


பணி குறித்த கூடுதல் விவரம்: 



  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிக்காக இன சுழற்சி அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கல்வித் தகுதி:


பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு இளங்க்லை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பருவகால காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 




வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 


ஊதியம் விவரம்:


 Seasonal Bill Clerk - Rs.5285 + (DA) Rs.3499/- TA Rs.120/-


 Seasonal Watchman - Rs.5218 + (DA) Rs.3499/- TA Rs.160/-


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுகொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


முதுநிலை மண்டல மேலாளர், 
மண்டல அலுவலகம், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நான்காவது ‘ஏ’பிளாக், 
இராணிப்பேட்டை  


விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.05.2023




 மேலும் வாசிக்க.


Mansoor Ali Khan:‘சரக்கு’ படத்தில் நடித்த பிறகுதான் ‘லியோ’ படத்தில் நடிப்பேன்- மன்சூர் அலிகான்


ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு