திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்



  • தட்டச்சர்

  • உதவி மின்பணியாளர் 

  • காவலர்

  • பெருக்குபவர்


மொத்த பணியிடம் - 7


பணி குறித்த கூடுதல் விவரம்



  • தட்டர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • உதவி மின்பணியாளர் பணிக்கு எலக்ட்ரிக்கல் துறையில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். 

  • காவலர், பெருக்குபவர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • தட்டச்சர் - ரூ.18,500-58,600/-

  • உதவி மின்பணியாளர் ரூ.16,600-52,400/-

  • காவலர் ரூ.15,900-50,400/-

  • பெருக்குபவர் ரூ.15,900-50,400/-


வயது வரம்பு:


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி?


https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=25706 - மற்றும் https://hrce.tn.gov.in//hrcehome/index.php - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். திருவானைக்கோவிலில் உள்ள அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுகொள்ளலாம். விண்ணப்பத்தை அஞ்சலிலும் அனுப்பலாம்; நேரில் அலுவலகத்திற்கு சென்றும் அளிக்கலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண், மற்றும் - பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர் / செயல் அலுவலர். ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005" என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இந்தப் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கவனிக்க...



  • விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று 18, வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

  • இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். 

  • ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

  • விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல்  கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் {Attested Xerox Copy Only)பெற்று அனுப்பப்பட வேண்டும்.

  • தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், பணியிடமாறுதல் செய்யப்படுவார்.

  • பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள்:



  • பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல்

  • ஆதார்அட்டை நகல்

  • இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்றுநகல் 
    கல்வி சான்று நகல் (கலம் 11 மற்றும் 12 ல் உள்ளவாறு)

  • நன்னடத்தைச்சான்று (கலம் 14- ல் உள்ளவாறு)

  • நன்னடத்தைச்சான்று (கலம் 15 ல் உள்ளவாறு)

  •  அனுபவ சான்று நகல்

  • சுயவிலாசமிட்ட ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


உதவி ஆணையர்/செயல் அலுவலர்,


அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,


திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம்,


திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005


விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.05.2023