மேட்டூர் அணையில் அரசு வேலை: மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! முழுவிவரம் உள்ளே !
மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சேலம்: மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் அரசு வேலை
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை இனசுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்திற்கு தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், மீன்பிடி வலைபின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சு வலை வீசுதல் மற்றும் பழுதடைந்த வலைகளை சரிசெய்தல் ஆகிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும், மீன்வளத்துறையின்கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்று பெற்றிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இட ஒதுக்கீடு முறை
இரண்டு பணியிடம் ஆதிதிராவிடர் (இருபாலர்) முன்னுரிமை அற்றவர், ஒரு பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (இருபாலர்) முன்னுரிமை அற்றவர், ஒரு பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (பெண்) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி கற்றமைக்கான சான்றிதழ்), ஒரு பணியிடம் பிற்படுத்தப்பட்டோர் (பெண்) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி கற்றமைக்கான சான்றிதழ்), ஒரு பணியிடம் பிற்படுத்தப்பட்டோர் (இருபாலர்) முன்னுரிமை பெற்றவர் (ஆதரவற்ற விதவை), ஒரு பணியிடம் பொதுப்போட்டி (பெண்) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி கற்றமைக்கான சான்றிதழ்), ஒரு பணியிடம் பொதுப்போட்டி (இருபாலர்) முன்னுரிமை பெற்றவர் (கலப்பு திருமணம்) என இனசுழற்சி அடிப்படையில் எடுக்கப்படுகிறது. தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் அதே இனசுழற்சி ஒதுக்கீட்டில் ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர்.
ஊதியம் விவரம் மற்றும் தேவையான ஆவணங்கள்
ஊதியம் ரூ.15900 - ரூ.58500 நிலை 2 ஆகும். 01.07.2025 அன்று ஆதிதிராவிடர் -37 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 34 வயதுக்குள்ளும் மற்றும் இதர வகுப்பினர் - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது நிருபண சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இந்த விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்), 5/596, ஔவையார் தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தருமபுரி - 636 705 (கூடுதல் விவரங்களுக்கு - தொலைபேசி எண்.04342-233923, 93848 24308, 79046 97121) என்ற அலுவலக முகவரிக்கு 3110.2025 பிற்பகல் 4.00 மணிக்குள் கிடைக்கதக்க வகையில், இம்முகவரிக்கு விண்ணப்ப உறையின் மேல் மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல்” என எழுதி அனுப்பிட வேண்டும். மேலும், விபரங்களுக்கு https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.





















