<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!</title><atom:link href="https://tamil.abplive.com/jobs/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 23:28:14 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[புதிய 125 நாள் ஊரக வேலைத் திட்டம் அமல். மாநில வாரியாக தினக்கூலி எவ்வளவு? முழு பட்டியல்!..]]></title><link>https://tamil.abplive.com/jobs/new-125-day-rural-employment-scheme-implemented-what-are-the-state-wise-daily-wages-here-is-the-full-list-265773</link><comments>https://tamil.abplive.com/jobs/new-125-day-rural-employment-scheme-implemented-what-are-the-state-wise-daily-wages-here-is-the-full-list-265773#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 21:24:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/new-125-day-rural-employment-scheme-implemented-what-are-the-state-wise-daily-wages-here-is-the-full-list-265773</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம் ஜி எனும் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/53e157a728bf7542f0b57ed626319d5c1782921068678193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 2005 ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல்படுத்தபட்டது. இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய பாஜக அரசை அதற்கு மாற்றாக 125 நாட்கள் வேலை வழங்கும் (விபி-ஜி ராம் ஜி) திட்டத்தை கொண்டு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி சட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;100 நாள்கள் வேலை இந்தப் புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாள்களாக உயர்த்தப்பட்டு, இத்திட்டத்துக்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்கையும் சேர்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊரக வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரிசர்வ் வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/68d24addfb7c0d4c1100cd782392e8181782921201103193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், மாநில வாரியாக புதிய ஊரக வேலைத் திட்டத்தில் வழங்கப்படவுள்ள ஊதிய விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியிருகின்றன. அரசு அறிவிப்பின்படி, ஊதிய உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. எந்தவொரு மாநிலத்திலும் தினக்கூலி ரூ.300-க்குக் குறைவாக இருக்காத வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊதிய விகிதங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. கேரளம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், ரூ.360 முதல் ரூ.409 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலைப்பகுதி மாநிலமான சிக்கிமில் ரூ. 450 வரை உயர்த்தப்பட்டுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/68d24addfb7c0d4c1100cd782392e8181782921201103193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!.. IBPS மூலம் 6,715 வங்கி வேலைகள். விவரம் இதோ!..]]></title><link>https://tamil.abplive.com/jobs/a-great-opportunity-for-graduates-6-715-bank-jobs-through-ibps-here-are-the-details-265778</link><comments>https://tamil.abplive.com/jobs/a-great-opportunity-for-graduates-6-715-bank-jobs-through-ibps-here-are-the-details-265778#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 21:13:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/a-great-opportunity-for-graduates-6-715-bank-jobs-through-ibps-here-are-the-details-265778</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,715 துணை மேலாளர் (PO) மற்றும் மேலாண்மை பயிற்சிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு முகமை https://www.ibps.in வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/2d4da6c09f75d0ef7fbf02a24103afd01782920566207193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மொத்த பணியிடங்கள்:&lt;/strong&gt; 6,715&lt;br /&gt;&lt;strong&gt;பதவியின் பெயர்:&lt;/strong&gt; துணை மேலாளர் (PO) / மேலாண்மை பயிற்சி (MT)&lt;br /&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி:&lt;/strong&gt; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).&lt;br /&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்:&lt;/strong&gt; ஜூலை 1, 2026 (இன்று)&lt;br /&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கக் கடைசி நாள்:&lt;/strong&gt; ஜூலை 21, 2026&lt;br /&gt;&lt;strong&gt;முதல்நிலைத் தேர்வு:&lt;/strong&gt; ஆகஸ்ட் 2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் BPS அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ibps.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இணையதளத்தில் உள்ள விரிவான அறிவிப்பைக் கண்டு தெரிந்து கொள்ளலாம். வங்கித் துறையில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/dc96dbffe2d21bcfe1c8e5071d5b19911782920500833193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[மதுரை இளைஞர்களே...  TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767</link><comments>https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 20:05:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767</guid><description><![CDATA[&lt;p&gt;பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வேலைவாய்ப்பு துறையின் சார்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசுப்பணியாளர்&amp;nbsp; &amp;nbsp;தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி TNPSC GR-I முதனிலை (Prelims)&amp;nbsp; தேர்விற்கான அறிவிப்பு&amp;nbsp; 23.06.2026 அன்றும் SSC CGL 2026 தேர்விற்கான அறிவிப்பு 21.05.2026 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து TNPSC GR-I&amp;nbsp; முதனிலைத் தேர்விற்கும் SSC CGL தேர்விற்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பமுள்ள போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல்&amp;nbsp; மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், இரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள RRB Group &amp;ndash;D பணியிடங்களுக்கான தேர்விற்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 04.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மதுரையில் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அனைத்து வகையானப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், வேலைவாய்ப்பு துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான&amp;nbsp;&lt;a href=&quot;https://www.tamilnaducareerservices.in.gov.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=https://www.tamilnaducareerservices.in.gov.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1783002136346000&amp;amp;usg=AOvVaw3cwwUbU8uMuzmyxSkDjdZb&quot;&gt;https://www.&lt;wbr /&gt;tamilnaducareerservices.in.&lt;wbr /&gt;gov.in&lt;/a&gt; என்ற இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf &amp;ndash; வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம், மேலும், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பதிவு காணொளி பாடக்குறிப்புகள் &amp;ldquo;TN Career Services Employment&amp;rdquo; என்ற&amp;nbsp; You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் த.அருண்நேரு தெரிவித்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/948cfc25d7df75cf48cb03cd28aae4101782916470773184_original.png" width="220"/></item><item><title><![CDATA[டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kancheepuram-medical-recruitment-national-tuberculosis-program-laboratory-technician-july-07-last-date-how-to-apply-tnn-265765</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kancheepuram-medical-recruitment-national-tuberculosis-program-laboratory-technician-july-07-last-date-how-to-apply-tnn-265765#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 19:44:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kancheepuram-medical-recruitment-national-tuberculosis-program-laboratory-technician-july-07-last-date-how-to-apply-tnn-265765</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கும் மற்றும் தகுதியான வேலை தேடும் இளைஞர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் கீழே விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான நியமனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துப் பணியிடங்களும் முற்றிலும் தற்காலிகமானவை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானவை ஆகும். தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து காசநோய் தடுப்புப் பணிகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, மேற்பார்வையின் கீழ் இந்த மருத்துவப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடைமுறைகள் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கக் கோரப்படும் காலிப் பணியிடங்களின் விபரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மருத்துவத் துறையைச் சார்ந்த மூன்று முக்கியப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி முதலாவதாக, ஆய்வகப் பணிகளை மேற்கொள்வதற்கான லேபாரட்டரி டெக்னீசியன் (Laboratory Technicians - LT) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இரண்டாவதாக, காசநோயாளிகளின் களப்பணிகள் மற்றும் கண்காணிப்பைக் கவனிப்பதற்காக டிபி ஹெல்த் விசிட்டர் (TB Health Visitor) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூன்றாவதாக, நோயாளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக கவுன்சிலர் (Counsellor) பணியிடங்களும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளில் தொடர்புடைய கல்வித் தகுதியும் தகுந்த அனுபவமும் உள்ள நபர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kancheepuram.nic.in என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்விதத் தவறும் இன்றித் துல்லியமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன் பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரரின் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்துத் தேவையான ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். மிக முக்கியமாக, இந்த ஆவண நகல்கள் அனைத்திலும் விண்ணப்பதாரர் தங்களின் சுய சான்றொப்பமிட்டு (Self-Attested) இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி மற்றும் இறுதி நாள் விபரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, (புற்றுநோய் வளாகம்), காஞ்சிபுரம் &amp;ndash; 631501 என்பதாகும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரடியாகச் சென்றோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ தங்கு தடையின்றி அனுப்பி வைக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் &lt;strong&gt;06.07.2026&lt;/strong&gt; ஆகும். அன்றைய தினம் மாலை &lt;strong&gt;5:45 மணிக்குள்&lt;/strong&gt; தகுதியான விண்ணப்பங்கள் அனைத்தும் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றடைய வேண்டும் என்றும், அதற்கு மேல் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/69763e2526b85493802577cbbeab98a717829147058761319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[படிப்பு 12-வது.. சம்பளம் ₹50,000 வரை! நாகை கலெக்டர் அறிவித்த சூப்பரான அரசு இலவச பயிற்சி திட்டம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-district-collector-announcement-tahdco-free-training-program-tnn-265655</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-district-collector-announcement-tahdco-free-training-program-tnn-265655#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 22:31:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-district-collector-announcement-tahdco-free-training-program-tnn-265655</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சுயதொழில் மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கிலும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது ஜவுளித்துறையில் உள்ள பிரம்மாண்ட வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழங்கப்படும் அதிநவீனப் பயிற்சிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய காலகட்டத்தில் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை (Textile and Apparel Industry) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிபுணத்துவம் பெற்று, தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையில் பின்வரும் இரு முக்கியப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்திப் பயிற்சி (Diploma in Textile Industry Course):&lt;/strong&gt; இப்பயிற்சியின் மூலம் நவீன ஜவுளி உற்பத்தியின் அடிப்படைகள், ஆடை வடிவமைப்பு முறைகள் மற்றும் தொழில்துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் விரிவாகக் கற்றுத்தரப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சி (Certificate in Textile Painting, Dyeing &amp;amp; Printing Course): &lt;/strong&gt;ஆடைகளை அழகுபடுத்தும் கலைநயம் மிக்க பிரிவான சாயம் போடுதல், துணிகளில் வண்ண ஓவியங்கள் வரைதல் மற்றும் நவீன அச்சிடுதல் (Printing) தொழில்நுட்பங்கள் குறித்த செயல்முறைப் பயிற்சிகள் இதில் அடங்கும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பயிற்சித் திட்டத்தில் இணைந்து பயனடைய விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சமூகத் தகுதி :&lt;/strong&gt; விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி:&lt;/strong&gt; குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு (12th Standard) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆண்டு வருமானம்:&lt;/strong&gt; குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 3.00 இலட்சத்திற்குள் (ரூபாய் மூன்று லட்சம்) இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயிற்சி காலம் மற்றும் தங்கும் வசதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பயிற்சிகளுக்கான மொத்த கால அளவு நான்கு மாதங்கள் (4 Months) ஆகும். இப்பயிற்சிகள் அனைத்தும் தமிழகத்தின் முன்னணி தொழில் நகரமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வைத்து தகுதியான பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், கோயம்புத்தூரில் தங்கிப் படிப்பதற்கான முழு விடுதிச் செலவு மற்றும் உணவுச் செலவினங்கள் அனைத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும் என்பதால், ஏழை எளிய மாணவர்கள் எவ்வித கட்டணமுமின்றி இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாதம் ரூ. 50,000 வரை வருமானம் ஈட்ட அரிய வாய்ப்பு!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நான்கு மாத காலப் பயிற்சியினை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் முடிக்கும் இளைஞர்களுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனத்தின் மூலமாகவே தகுதியான நபர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கிய அம்சம்:&lt;/strong&gt; இப்பயிற்சியை முடித்து வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்களுக்கு, அவர்களின் திறமையின் அடிப்படையில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ. 25,000/- முதல் ரூ. 50,000/- வரை ஈட்டுவதற்கான பிரகாசமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இது இளைஞர்களின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்குப் பெருந்துணையாக அமையும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஆர்வமுள்ள தகுதியுடைய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான &lt;a href=&quot;http://www.tahdco.com&quot;&gt;www.tahdco.com &lt;/a&gt;என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பயிற்சித் திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து கூடுதல் விபரங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அலுவலக முகவரி:&lt;/strong&gt; அறை எண்: 321 மற்றும் 327, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம். தொலைபேசி எண்: 04365-250305&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, உயர்தரப் பயிற்சியினைப் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/c028cb8167fe6bcc8fe8d66ce0ae0c001782838848496186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/upsc-recruitment-2026-applications-open-for-105-group-a-and-b-posts-265343</link><comments>https://tamil.abplive.com/jobs/upsc-recruitment-2026-applications-open-for-105-group-a-and-b-posts-265343#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 12:01:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/upsc-recruitment-2026-applications-open-for-105-group-a-and-b-posts-265343</guid><description><![CDATA[&lt;p&gt;யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 105 குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 17-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பணியிட&lt;/strong&gt; &lt;strong&gt;விவரங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதில் மொத்தம் 105 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவி இயக்குநர், ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III, சட்ட அதிகாரி, விஞ்ஞானி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகள் அடங்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும். பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், பிஎச்.டி அல்லது மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு துறைசார்ந்த முன் அனுபவமும் அவசியம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஊதியம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அந்தந்த பதவிகளுக்கான ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த மாத சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தேர்வு&lt;/strong&gt; &lt;strong&gt;முறை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் கொண்டு தகுதியானவர்கள் முதலில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஒருவேளை குறிப்பிட்ட பதவிகளுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதன் பின்னர் நேர்காணல் நடத்தப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விண்ணப்பக்&lt;/strong&gt; &lt;strong&gt;கட்டணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.25 மட்டுமே. பெண்கள், எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இக்கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முக்கிய&lt;/strong&gt; &lt;strong&gt;தேதிகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: &lt;strong&gt;ஜூலை&lt;/strong&gt;&lt;strong&gt; 17 (&lt;/strong&gt;&lt;strong&gt;இரவு&lt;/strong&gt;&lt;strong&gt; 11:59 &lt;/strong&gt;&lt;strong&gt;மணி&lt;/strong&gt; &lt;strong&gt;வரை&lt;/strong&gt;&lt;strong&gt;)&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;li&gt;சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கக் கடைசி தேதி: &lt;strong&gt;ஜூலை&lt;/strong&gt;&lt;strong&gt; 18&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;ஆர்வமுள்ளவர்கள்&amp;nbsp;&lt;strong&gt;upsconline.nic.in&lt;/strong&gt;&amp;nbsp;என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு UPSC தளத்தை அணுகலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a href=&quot;https://cdn.testbook.com/1782465451569-UPSC%20Reccruitment.pdf/1782465444.pdf&quot;&gt;https://cdn.testbook.com/1782465451569-UPSC%20Reccruitment.pdf/1782465444.pdf&lt;/a&gt; என்ற இணைப்பை க்ளிக் செய்து பணியிடங்கள், பதவி பெயர், கல்வித் தகுதி, தேர்வு முறை, ஊதிய விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெறலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/what-color-clothes-should-you-wear-when-going-to-the-temple-265258&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/2946491c9768abe808c8bcabecdbbb861782628199522332_original.png" width="220"/></item><item><title><![CDATA[மத்திய அரசு வேலை: மிஸ் பண்ணிடாதீங்க... கடைசி நாள் ஜூலை 2ம் தேதி உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/central-government-job-don-t-miss-out-the-last-date-is-july-2nd-apply-immediately-tnn-265326</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/central-government-job-don-t-miss-out-the-last-date-is-july-2nd-apply-immediately-tnn-265326#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 09:54:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/central-government-job-don-t-miss-out-the-last-date-is-july-2nd-apply-immediately-tnn-265326</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; AAICLAS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு. இந்திய விமான நிலைய சரக்கு சேவை நிறுவனமான AAICLAS (AAI Cargo Logistics &amp;amp; Allied Services Company Ltd) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant (Security) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய அரசு நிறுவனமான இதில் மொத்தம் 62 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விமான நிலைய வாரியான காலியிடங்கள் மற்றும் பணியிடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பதி, திருச்சி, மதுரை, புவனேஸ்வர் மற்றும் உதய்பூர் ஆகிய விமான நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி &amp;ndash; 23 காலியிடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதய்பூர் &amp;ndash; 12 காலியிடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதுரை &amp;ndash; 09 காலியிடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருப்பதி &amp;ndash; 09 காலியிடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புவனேஸ்வர் &amp;ndash; 09 காலியிடங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதியும் வயது வரம்பும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அரசு விதிகளின்படி வயது தளர்வு விபரம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்&lt;br /&gt;SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள்&lt;br /&gt;முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): 5 ஆண்டுகள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாதச் சம்பளம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆண்டுதோறும் சம்பள உயர்வுடன் கூடிய கவர்ச்சிகரமான ஊதியம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதல் வருடம்: ரூ.21,500/-&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாம் வருடம்: ரூ.22,000/-&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூன்றாம் வருடம்: ரூ.22,500/-&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிப் பட்டியல் (Short Listing) அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தொடர்ந்து நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ST / SC / பெண்கள் / EWS பிரிவினர்: ரூ.100/-&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதர பிரிவினர் (Others): ரூ.500/-&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை (How to Apply)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆர்வமுள்ளவர்கள்&amp;nbsp; 02.07.2026 வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு &lt;strong&gt;(https://www.aaiclas.aero/career)&lt;/strong&gt; செல்லவும். அதில் &amp;ldquo;Advertisement No.2 of 2026 for Assistant (Security)&amp;rdquo; என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய பயனராக இருந்தால், முதலில் உங்கள் விவரங்களைப் பதிவு (Registration) செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர், பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு 'Login' செய்து விண்ணப்பப் படிவத்தை துல்லியமாக நிரப்பவும். கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் மற்றும் உங்களுடைய அண்மைக்கால புகைப்படத்தைப் பதிவேற்றவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பத்தை 'Submit' செய்யவும். இறுதி விண்ணப்பப் படிவத்தை எதிர்காலத் தேவைக்காக PDF வடிவில் பதிவிறக்கம் (Download) செய்து அச்சுப் பிரதி எடுத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கியக் குறிப்பு:&lt;/strong&gt; விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருப்பதை விண்ணப்பதாரர்கள் முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/7908b186b7a72848e73cebe94d279a0f1782620543680733_original.png" width="220"/></item><item><title><![CDATA[TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !]]></title><link>https://tamil.abplive.com/jobs/trb-assistant-professor-exam-result-irregularities-investigation-complaint-tnn-265306</link><comments>https://tamil.abplive.com/jobs/trb-assistant-professor-exam-result-irregularities-investigation-complaint-tnn-265306#respond</comments><pubDate>Sat, 27 Jun 2026 21:18:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/trb-assistant-professor-exam-result-irregularities-investigation-complaint-tnn-265306</guid><description><![CDATA[&lt;p&gt;'கட் அண்ட் காப்பி' (Cut &amp;amp; Copy), செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது வேற ஏதேனும் மென்பொருள் மூலம் இது செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது?. தேர்வர்கள் மன உளைச்சலில் செய்வதரியாது புலம்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;TRB மூலம் உதவி பேராசிரியர் (Assistant Professor) தேர்வு &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;TRB மூலம் உதவி பேராசிரியர் (Assistant Professor) தேர்வு என்பது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர் தேர்வானது நடைபெற்றது. சுமார் 2708 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக கடந்த திமுக ஆட்சி காலத்தில் 5 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டது. அப்போதே இந்த தேர்வில் குளறுபடி இருப்பதாக பிரச்னைகள் வெடித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அவசர கதியில் கடுமையான குளறுபடியுடன் வெளியானது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் முழுமையாக தேர்வின் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;br /&gt;&amp;nbsp;முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்ற சிலருக்கு விவரிப்பு (Descriptive) தாளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த மதிப்பெண் பெற்ற சிலருக்கு விவரிப்பு தாளில் அதிக மதிப்பெண்கள் கிடைத்ததாக தேர்வர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் 2017 நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான உதவி பேராசியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் இருப்பதாக ஏற்பட்ட தேர்வு பிரச்னை முழுமையாக விசாரணை முடியாத சூழலில், தற்போது வெளியாயிருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குமே அதே பிரச்னைகள் எழுந்துள்ளது. அவசர கதியில் திடீரென உதவி பேராசிரியர் தேர்வு ரிசல்ட்&amp;nbsp; கடுமையான குளறுபடியுடன் வெளியாகியுள்ளதாக புகார் வாசிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தேர்வர்கள் மன உளைச்சலில் செய்வதரியாது புலம்புகின்றனர்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்வு முடிவுகளில் தாள் - II ல் &amp;nbsp;ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் 50க்கு 49 முதல் 0 வரை. உதாரணத்திற்கு ஒரு தேர்வர் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்று தன்னுடைய முதன்மைத் தாளில் (தாள் - I) 150 க்கு 111 மதிப்பெண் பெற்றிருக்கிறார். ஆனால் தாள் - II ல் அவர் பெற்ற மதிப்பெண் பூஜ்ஜியம்(0). விடைத்தாள்கள் உண்மையில் மதிப்பீடு செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது?. ஒருவேளை 'கட் அண்ட் காப்பி' (Cut &amp;amp; Copy), செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது வேற ஏதேனும் மென்பொருள் மூலம் இது செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது?. தேர்வர்கள் மன உளைச்சலில் செய்வதரியாது புலம்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;முழுமையான விசாரணை வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் அதிமுக ஆட்சியில் 2017 ஆண்டு &amp;nbsp;அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கான உதவி பேராசிரியர் பணிக்கு நடை பெற்றமுறைகேட்டுகளை விட இப்போதும் திமுக ஆட்சியில் நடைபெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் சந்தேகங்களை எழுப்பி தமிழ்நாட்டை பரபரப்பாக்கியுள்ளது. தமிழ் பாடத்தில் பக்கம் 84 முதல் 87 வரை உள்ள தேர்வர்களில் Part B ல் 81மதிப்பெண் எடுத்தவர்கள் அனைவருமே PART C ல் 12 மதிப்பெண் எடுத்துள்ளனர். 87 பக்கத்திலிருந்து PART B ல் 81 மதிப்பெண் எடுத்தவர்கள் PART C ல் 11.50 எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக தேர்வர்கள் அதிர்ந்துள்ளனர். தாள் I, தாள் II மற்றும் தாள் III என மூன்று முடிவுகளையும் ஆய்வு செய்தால் இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புகள் வரலாமென சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வு முடிவுகளை முழுமையான விசாரணை செய்து, தவறுகள் நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/27/afc744d60b78bcc3928f0c195b9476751782575096494184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! எஸ்பிஐ வங்கியில் 1,500 'PO' பணியிடங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/jobs/a-jackpot-for-diploma-and-degree-holders-1-500-po-vacancies-at-sbi-tnn-265165</link><comments>https://tamil.abplive.com/jobs/a-jackpot-for-diploma-and-degree-holders-1-500-po-vacancies-at-sbi-tnn-265165#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 15:17:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/a-jackpot-for-diploma-and-degree-holders-1-500-po-vacancies-at-sbi-tnn-265165</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் காலியாக உள்ள 1,500 ப்ரொபேஷனரி ஆபீசர் (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வங்கித்துறையில் கால்பதிக்கக் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இது ஒரு சவாலான மற்றும் மிகச்சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய அரசு வேலைக்கு இணையான பணிப் பாதுகாப்பு, கௌரவமான சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் நிறைந்த பணி என்பதால், இத்தேர்வுக்கு நாடு முழுவதும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி மற்றும் இறுதியாண்டு மாணவர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் (Any Degree) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு:&lt;/strong&gt; நடப்பு கல்வியாண்டில் தங்களது இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், வங்கி விதிக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு மற்றும் தளர்வுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் 01.04.2026 அன்றைய தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு வழக்கமான வயது வரம்பு தளர்வுகள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மூன்று கட்ட தேர்வு முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியான விண்ணப்பதாரர்கள் கடுமையான மற்றும் வெளிப்படையான 3 கட்ட தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதற்கட்டத் தேர்வு (Preliminary Examination): தகுதி காண் தேர்வு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதன்மைத் தேர்வு (Main Examination): விரிவான எழுத்துத் தேர்வு மற்றும் விவரிப்புத் தேர்வு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உளவியல் மதிப்பீடு மற்றும் நேர்காணல்: குழு விவாதம்/பயிற்சி (Group Exercises) மற்றும் இறுதி நேர்காணல் (Interview).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழகத்தில் தேர்வு மையங்கள் எங்கு?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் தங்களது சொந்த மாநிலத்திலேயே தேர்வு எழுத ஏதுவாகப் பரவலான மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதற்கட்டத் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதன்மைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 முக்கிய நகரங்களில் மட்டுமே முதன்மைத் தேர்வுகள் நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிப்பது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று &quot;SBI PO Recruitment 2026&quot; என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் போது தங்களது சுயவிவரங்கள், கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றைச் சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். முக்கியமாக, முதற்கட்ட மற்றும் முதன்மைத் தேர்வு மையங்களை தேர்வர்கள் மிகவும் கவனமாகத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கிய தேதிகள்&lt;/strong&gt;:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்லைன் விண்ணப்பப் பதிவுத் தொடக்கம்: ஜூன் 18, 2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 08, 2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தேர்வில் இறுதிப் பட்டியலின்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் உள்ள எஸ்பிஐ கிளைகளில் பணியமர்த்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியான பட்டதாரிகள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/26655f7aaadb67d52f84c351e2b5490c1782467131265733_original.png" width="220"/></item><item><title><![CDATA[5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-free-training-tnpsc-ssc-rrb-trainer-selection-tnn-264937</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-free-training-tnpsc-ssc-rrb-trainer-selection-tnn-264937#respond</comments><pubDate>Wed, 24 Jun 2026 12:55:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-free-training-tnpsc-ssc-rrb-trainer-selection-tnn-264937</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகளைச் சிறப்பாக நடத்துவதற்கு, திறமையான மற்றும் முன் அனுபவமிக்க பயிற்றுநர்கள் (Trainers) தேர்வு செய்யப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB) ஆகியவை தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள், அதிக கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாத நிலை உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தவிர்க்கும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வப் பயிலும் வட்டம் (Study Circle) மூலமாக கீழ்க்கண்ட முக்கிய தேர்வுகளுக்கு முற்றிலும் இலவசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;TNPSC Group 1:&lt;/strong&gt; (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகள்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;SSC CGL:&lt;/strong&gt; (மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;RRB ALP:&lt;/strong&gt; (ரயில்வே தேர்வு வாரியத்தின் உதவி லோகோ பைலட் தேர்வுகள்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காகப் புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயிற்றுநர்களுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகும். எனவே, இந்தப் பயிற்சி வகுப்புகளுக்குப் பாடம் நடத்த வரும் பயிற்றுநர்கள் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முன் அனுபவம்:&lt;/strong&gt; போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களாகவும், குறிப்பாக மேற்கண்ட தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுகளில் (Main Exams) கலந்துகொண்ட அனுபவமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கற்பிக்கும் திறன்:&lt;/strong&gt; மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை நடத்தும் திறனும், தேர்வுகளை எதிர்கொள்ளும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஊதிய விவரம்:&lt;/strong&gt; தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பயிற்றுநர்களுக்கு, அவர்கள் நடத்தும் வகுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கௌரவ மதிப்பூதியம் (Honorarium) வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு (Interview) மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேதி: 01.07.2026 (புதன்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேரம்: காலை 10.30 மணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மயிலாடுதுறை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வர வேண்டியவை; நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வரும் விண்ணப்பதாரர்கள், தங்களின் கற்பித்தல் திறனை நிரூபிக்கும் வகையில் கீழ்க்கண்டவற்றைத் தயார் நிலையில் எடுத்து வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. பாடக்குறிப்புகள் (Lesson Notes):&lt;/strong&gt; தாங்கள் பாடம் நடத்தத் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பிற்கான தெளிவான குறிப்புகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி (PPT):&lt;/strong&gt; பாடத்தை டிஜிட்டல் முறையில் விளக்குவதற்கான கணினி வழி விளக்கக்காட்சி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;3.முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள் (Previous Year Question Papers):&lt;/strong&gt; சம்பந்தப்பட்ட தேர்விற்கான கடந்த கால கேள்வித்தாள்களின் தொகுப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;4.மாதிரித் தேர்வு (Mock Test):&lt;/strong&gt; மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்துவதற்கான புதிய கேள்விகள் மற்றும் அதற்கான சரியான பதில்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் முன்பதிவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட தகுதிகள் இருந்து, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞகள், நேர்முகத் தேர்வுக்கு முன்னதாகவே தங்களது விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மின்னஞ்சலில் அனுப்ப வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போட்டித் தேர்வுகளில் (முதல்நிலை / முதன்மைத் தேர்வுகள்) தங்களுக்கு உள்ள அனுபவம் மற்றும் கல்வித் தகுதி குறித்த முழுமையான சுயவிவரப் படிவம் (Resume/CV)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாங்கள் ஏதேனும் ஒரு பாடத்தை மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பில் நடத்துவது போன்று பதிவு செய்யப்பட்ட 5 நிமிட காணொளி காட்சி (5-Minute Demo Video)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவற்றை studycircledeomayil@gmail.com என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மின்னஞ்சல் அனுப்பிய பிறகே, குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் நேரடி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தொடர்புக்கு: &lt;/strong&gt;இந்த வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்றுநர் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர், 9499055904 என்ற WhatsApp எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த, போட்டித் தேர்வுகளில் அனுபவமிக்க இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்ட முன்வர வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/24/543d7191c4ea2b71e867b145c27700b31782285859268186_original.jpg" width="220"/></item></channel></rss>