<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?</title><atom:link href="https://tamil.abplive.com/jobs/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 01:34:20 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/jobs/govt-jobs-sbi-junior-associate-1538-vacancies-official-notification-apply-270546</link><comments>https://tamil.abplive.com/jobs/govt-jobs-sbi-junior-associate-1538-vacancies-official-notification-apply-270546#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 18:01:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/govt-jobs-sbi-junior-associate-1538-vacancies-official-notification-apply-270546</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,538 ஜூனியர் அசோசியேட் (Junior Associate - Customer Support and Sales) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விண்ணப்ப தேதி&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in அல்லது sbi.co.in/careers என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று மட்டுமே தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கல்வித்தகுதி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தேர்வு முறை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;ol class=&quot;ng-star-inserted&quot;&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;முதல்நிலைத் தேர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;முதன்மைத் தேர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;உள்ளூர் மொழித் தேர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;வயது வரம்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு கோரும் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு உண்டு.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இது 100 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகை தேர்வாகும். ஆங்கில மொழி, நியூமெரிக்கல் எபிலிட்டி மற்றும் ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கான மொத்த கால அளவு 1 மணி நேரம். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;முதன்மைத் தேர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இது 200 மதிப்பெண்களுக்கான தேர்வாகும். பொது மற்றும் நிதி விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட், ரீசனிங் மற்றும் கணினி அறிவு ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 2 மணி 40 நிமிடங்கள் ஆகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;உள்ளூர் மொழித் தேர்வு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;குறிப்பிட்ட மாநில காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை நன்றாக எழுத, படிக்க, பேச மற்றும் புரிந்துகொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான தனித் தேர்வும் நடத்தப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;ஊதிய விவரம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;br class=&quot;ng-star-inserted&quot; /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இந்த ஜூனியர் அசோசியேட் பணிக்கான தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதன் ஊதிய விகிதம் ரூ.17,900-1000/3-20,900-1230/3-24,590-1490/4-30,550-1730/7-42,600-3270/1-45,930-1990/1-47,920 என்ற அடிப்படையில் இருக்கும். மேலும், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும் வங்கி விதிமுறைகளின்படி வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், மாநில வாரியாக பிரிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இதுதொடர்பான அறிவிக்கையை தேர்வர்கள்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;a href=&quot;https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Backlog_Detailed_Advt_ENG.pdf&quot;&gt;https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Backlog_Detailed_Advt_ENG.pdf&lt;/a&gt; என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/how-many-years-will-a-sim-card-work-270539&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/19/ca6d8e0ef0c210108836f45ee113e323177918258052178_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!]]></title><link>https://tamil.abplive.com/jobs/ibps-bank-clerk-11-403-vacancies-last-date-to-apply-is-august-21-270545</link><comments>https://tamil.abplive.com/jobs/ibps-bank-clerk-11-403-vacancies-last-date-to-apply-is-august-21-270545#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 17:49:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/ibps-bank-clerk-11-403-vacancies-last-date-to-apply-is-august-21-270545</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியில் சேர விரும்புவோருக்கு அரிய வாய்ப்பாக, நாடு முழுவதும் 11,403 காலிப்பணியிடங்களுக்கு IBPS விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/2debef54c93545ef3b93d58dec064efa1786191527292193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் (Customer Service Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் 11,403 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 675 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக ஆட்சேர்ப்பு நடைபெறுவதால், ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பில் பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் &amp;amp; சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்கேற்கின்றன. இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கணினி இயக்கத் திறன் கட்டாயம். மேலும், கணினி தொடர்பான டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2026 ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உள்ளிட்ட வயது தளர்வுகள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு இரண்டு கட்டங்களாக முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து 100 கேள்விகளுடன் நடத்தப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் 200 மதிப்பெண்கள் கொண்ட முதன்மைத் தேர்வில் பங்கேற்கலாம். அதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது/நிதி அறிவு தொடர்பான 155 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத் தேர்வு கிடையாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/9e8bc532c7832de62b1e60a5f625da8e1786191443181193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் 0.25 மதிப்பெண் நெகட்டிவ் மார்க் கழிக்கப்படும்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுப் பிரிவு, ஓ.பி.சி. மற்றும் இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.850, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதத்திலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் முதல்நிலைத் தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திருப்பூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் மையங்கள் செயல்படும். வங்கி பணியில் சேர விரும்பும் தகுதியான பட்டதாரிகள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/9e8bc532c7832de62b1e60a5f625da8e1786191443181193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்]]></title><link>https://tamil.abplive.com/jobs/do-you-hold-a-diploma-or-a-degree-in-chemical-engineering-apply-to-bpcl-immediately-270379</link><comments>https://tamil.abplive.com/jobs/do-you-hold-a-diploma-or-a-degree-in-chemical-engineering-apply-to-bpcl-immediately-270379#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 15:14:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/do-you-hold-a-diploma-or-a-degree-in-chemical-engineering-apply-to-bpcl-immediately-270379</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, நாட்டில் உள்ள 2-வது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்ன்ஷியன், பிராசஸ் ஆபரேட்டர் போன்ற பிரிவுகளில் மொத்தம் 154 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BPCL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;BPCL வேலைவாய்ப்பு&amp;nbsp;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;நிறுவனம் - Bharat Petroleum Corporation Limited (BPCL) / பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;வேலை வகை - மத்திய அரசு வேலை (Central Govt Jobs)&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;பணியிடங்கள் விவரம்&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்தம் - 154&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;பிராசஸ் டெக்னிஷியன் (Process Technician) - 60 பணியிடங்கள்&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;பிராசஸ் ஆபரேட்டர் (Process Operator/Operator) - 64&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;டெக்னிஷியன் / ஆபரேட்டர் (கெமிக்கல்) (Technician/Operator) - 13&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;டெக்ன்ஷியன் (எலக்ட்ரிக்கல்) (Technician, Electrical)- 17&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி :&lt;/strong&gt; கெமிக்கல் என்ஜினியரிங் / கெமிக்கல் டெக்னலாஜி, டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அவசியம். இல்லாவிடில் அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாத சம்பளம்:&lt;/strong&gt; தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியைப் பொறுத்து மாதம் ₹26,500 முதல் ₹34,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் நிறுவன விதிகளின்படி DA, HRA, மருத்துவ வசதி, PF, விடுப்பு உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்BPCL வேலைவாய்ப்பு&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.08.2026&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;பணியிடம் - மும்பை மற்றும் கொச்சி&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்ப கட்டணம் - ரூ.590&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரப்பூர்வ இணையதளம் - https://www.bharatpetroleum.in&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி (SC / ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(PwBD (OBC) 13 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படியும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதாவது, கணினி அடிப்படையிலான சோதனை (CBT) திறன் / தேர்ச்சித் தேர்வு (Skill / Proficiency Test - SPT)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை (Pre-Employment Medical Examination)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆவண சரிபார்ப்பு (Document Verification)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bharatpetroleum.in/images/files/bpcl-kr-and-mr-non-mgmt-rect-notification-july-26.pd&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/5f74ba60dc411e55fe648fa79647b0191786095549022193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-questions-nurse-positions-abolition-medical-colleges-tamil-nadu-270016</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-questions-nurse-positions-abolition-medical-colleges-tamil-nadu-270016#respond</comments><pubDate>Tue, 4 Aug 2026 11:11:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-questions-nurse-positions-abolition-medical-colleges-tamil-nadu-270016</guid><description><![CDATA[&lt;div&gt;செவிலியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், காலி பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து விட்டு காலியிடங்களை ஒழிப்பதா? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;div&gt;&amp;rsquo;&amp;rsquo;தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்துவிட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம்தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பதுதான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும்தான் அரசு &amp;nbsp;மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், &amp;nbsp;அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.&lt;/div&gt;
&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருக்கும் இடங்களையும் ஒழிப்பதா?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;br /&gt;தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500&amp;amp;க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் &amp;nbsp;தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது &amp;nbsp;தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத் &amp;nbsp;தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு &amp;nbsp;வழங்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் &amp;nbsp;தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்&amp;rsquo;&amp;rsquo;.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;இவ்வாறு அன்புமணி தெரிவித்துளார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-is-the-cheapest-tata-electric-car-269958&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/02/3ea8dff53e9bea36ad6e895cb76bed6017803771352091321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/job-alert-in-kanchipuram-kanchipuram-district-health-society-mlhp-recruitment-2026-tnn-269975</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/job-alert-in-kanchipuram-kanchipuram-district-health-society-mlhp-recruitment-2026-tnn-269975#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 19:37:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/job-alert-in-kanchipuram-kanchipuram-district-health-society-mlhp-recruitment-2026-tnn-269975</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Apply for Kanchipuram Health Department MLHP vacancy 2026:&lt;/strong&gt; காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, தேசிய நலக் குழுமத்தின் கீழ் இயங்கும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலமாக இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid-Level Health Provider - MLHP) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள் விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தற்காலிகப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தை https://kancheepuram.nic.in என்ற காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் (Self-Attestation) செய்து இணைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.08.2026 அன்று மாலை 05.45 மணிக்குள், &quot;நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் &amp;ndash; 631 501&quot; என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கடைசி நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/16/ee2d00aacf147b5a6cfe1184db6c1fe61768558701354487_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/madurai-pm-shri-kendriya-vidyalaya-pgt-teacher-recruitment-269913</link><comments>https://tamil.abplive.com/jobs/madurai-pm-shri-kendriya-vidyalaya-pgt-teacher-recruitment-269913#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 13:30:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/madurai-pm-shri-kendriya-vidyalaya-pgt-teacher-recruitment-269913</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;மதுரை பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா (PM SHRI KV) பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இந்த ஆசிரியர் நியமனங்கள் முற்றிலும் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் நடைபெற உள்ளன. இதற்கான நேரடி நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பணியின் விவரங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், பொருளியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;கல்வித் தகுதி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt; விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். &lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அத்துடன் பி.எட் முடித்திருப்பது கட்டாயம்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு பி.எட் கட்டாயமில்லை; எனினும் B.E/ B.Tech (CS/ IT), MCA அல்லது M.Sc (CS) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். &lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பாடம் நடத்தும் திறனும், கணினியைக் கையாளும் திறனும் பெற்றிருப்பது அவசியம்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;வயது வரம்பு மற்றும் ஊதியம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;நேர்காணலில் பங்கேற்போரின் வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்குத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) விதிமுறைகளின்படி மாத தொகுப்பூதியமாக ரூ. 27,500 வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;நேர்காணல் நடைபெறும் முறை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழுமையான சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பப் படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;நேர்காணல் நாளான ஆகஸ்ட் 7 அன்று காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முன்பதிவு நடைபெறும். அதன் பின்னரே நேர்காணல் தொடங்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;நேர்காணலில் பங்கேற்க பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.&amp;nbsp; முழுமையான விவரங்களை மதுரை கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கதன் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தொலைபேசி எண்கள்: 0452 -2531361&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/fenugreek-reduces-belly-fat-there-are-many-more-benefits-269904&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/6450e34ae6f2f161384dc7223d33b2ea1711962613496522_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?]]></title><link>https://tamil.abplive.com/jobs/242-vacancies-a-great-opportunity-for-graduates-want-to-know-where-tnn-269702</link><comments>https://tamil.abplive.com/jobs/242-vacancies-a-great-opportunity-for-graduates-want-to-know-where-tnn-269702#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 19:10:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/242-vacancies-a-great-opportunity-for-graduates-want-to-know-where-tnn-269702</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு கொண்ட பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இஸ்ரோ நிர்வாகப் பிரிவில் காலியாக உள்ள 242 பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சிறப்பான வாய்ப்பு என்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களில் உதவியாளர் பதவிக்கு 120 பணியிடங்களும், மேல்நிலை எழுத்தர் பதவிக்கு 76 பணியிடங்களும், இளநிலை நேர்முக உதவியாளர் பதவிக்கு 22 பணியிடங்களும், சுருக்கெழுத்தர் பதவிக்கு 24 பணியிடங்களும் என மொத்தம் 242 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பட்டதாரிகளுக்கு சிறப்பான வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உதவியாளர் மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதனுடன் கணினியைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இளநிலை நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கு பட்டப்படிப்புடன், சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். மேலும், சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 60 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால், கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இஸ்ரோவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் இஸ்ரோவில் பணிபுரிவது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள் ஏவுதல், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உலக அளவில் இந்தியாவின் திறனை உயர்த்தி வரும் நிறுவனத்தில் நிர்வாகப் பணியில் சேருவதற்கு இந்த அறிவிப்பு சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மத்திய அரசின் முக்கிய நிறுவனத்தில் கிடைக்கும் அருமையான வேலைவாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உரிய முறையில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு என்ன என்று தெரியுங்களா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 28 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. அதன்படி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால், வயது தளர்வுக்கு தகுதியானவர்கள் தங்களுக்கான விதிமுறைகளை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் நேரடியாக பணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்களின் தகுதியை மதிப்பிடும் வகையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, பணியின் தன்மைக்கு ஏற்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வு நடைமுறை, பாடத்திட்டம், தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொண்டு தயாராக வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இஸ்ரோ போன்ற முக்கியமான மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகி, தங்களது கல்வித் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்ற பணியிடத்தை தேர்வு செய்து விண்ணப்பிப்பது பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆகஸ்ட் 16 கடைசி நாள்... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில் இணையதளத்தில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்க்க, முன்கூட்டியே விண்ணப்பிப்பது சிறந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.isro.gov.in சென்று வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை முழுமையாக படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வாய்ப்பை தவறவிடாதீர்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பட்டப்படிப்பு முடித்து நல்ல அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்தியாவின் முன்னணி விண்வெளி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரியும் இந்த வாய்ப்பு மிகவும் சிறப்பான வேலைவாய்ப்பாகும். மொத்தம் 242 பணியிடங்கள் இருப்பதால், தகுதியானவர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது மற்றும் தேவையான திறன்களை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இஸ்ரோவில் சிறப்பான பணி, மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு, பட்டதாரிகளுக்கு ஏற்ற நிர்வாகப் பணியிடங்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வேலைவாய்ப்பை தகுதியுள்ள இளைஞர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 242 பணியிடங்கள் இருக்கு. பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு. ஆகஸ்ட் 16- வரைக்கும் காத்திருக்காம உடனே விண்ணப்பியுங்கள்!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/31/20a1c8fbc3a09c62a0ba0ec2d00e1e581785505048891733_original.png" width="220"/></item><item><title><![CDATA[வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு]]></title><link>https://tamil.abplive.com/jobs/direct-recruitment-of-sportspersons-in-the-income-tax-department-only-2-days-left-to-apply-tnn-269444</link><comments>https://tamil.abplive.com/jobs/direct-recruitment-of-sportspersons-in-the-income-tax-department-only-2-days-left-to-apply-tnn-269444#respond</comments><pubDate>Wed, 29 Jul 2026 15:41:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/direct-recruitment-of-sportspersons-in-the-income-tax-department-only-2-days-left-to-apply-tnn-269444</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணியாற்ற அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விளையாட்டு சாதனைகளும் கொண்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பின் மூலம் ஸ்டெனோகிராபர், டாக்ஸ் அசிஸ்டென்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) உள்ளிட்ட மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பணியில் சேர விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஸ்டெனோகிராபர் (Grade-II)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து (Shorthand) எழுதும் திறனும், நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கில தட்டச்சுத் திறனும் அவசியம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை ஊதியம் வழங்கப்படும். வயது 18 முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;டாக்ஸ் அசிஸ்டென்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக, ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8,000 எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 27 ஆண்டுகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விளையாட்டு தகுதி அவசியம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு முழுமையாக விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறுவதால், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் பெற்றுள்ள விளையாட்டு சாதனைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்களின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் முதற்கட்டத் தேர்வு நடைபெறும். மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறன் மதிப்பீட்டிற்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாக பூர்த்தி செய்து, கல்வி, வயது மற்றும் விளையாட்டு சாதனைச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அஞ்சல் முகவரி:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Deputy Commissioner of Income Tax&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1st Floor, Aayakar Bhawan&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Rajaswa Vihar&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Bhubaneswar &amp;ndash; 751007&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 31 ஜூலை 2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாட்டில் திறமையை வெளிப்படுத்திய இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இந்த அறிவிப்பு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/29/85063f01be230c4cb593efef279991181785319747308733_original.png" width="220"/></item><item><title><![CDATA[பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? ]]></title><link>https://tamil.abplive.com/jobs/a-great-opportunity-for-graduates-salary-up-to-63-000-per-month-do-you-know-where-tnn-269441</link><comments>https://tamil.abplive.com/jobs/a-great-opportunity-for-graduates-salary-up-to-63-000-per-month-do-you-know-where-tnn-269441#respond</comments><pubDate>Wed, 29 Jul 2026 14:36:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/a-great-opportunity-for-graduates-salary-up-to-63-000-per-month-do-you-know-where-tnn-269441</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (NICL) காலியாக உள்ள 500 அசிஸ்டென்ட் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாடு முழுவதும் உள்ள கிளைகளில் பணியாற்ற தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டிற்கு 49 பணியிடங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தமிழ்நாட்டிற்கு 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் மகாராஷ்டிரம் 57, மேற்கு வங்கம் 46, ராஜஸ்தான் 36, கேரளம் 35, குஜராத் 34, கர்நாடகம் 30, உத்தரப்பிரதேசம் 24, டெல்லி 20 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு இதுதாங்க!!!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026 ஜூலை 1-ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2 ஜூலை 1996-க்கு முன்போ அல்லது 1 ஜூலை 2005-க்கு பிறகோ பிறந்தவர்கள் தகுதியற்றவர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு செய்யப்படும் அசிஸ்டென்ட் பணியாளர்களுக்கு மாதம் ரூ.63,000 வரை ஊதியம் வழங்கப்படும். பணியிடம் மற்றும் இதர சலுகைகளின் அடிப்படையில் சம்பளத்தில் மாறுபாடு இருக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகள் &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகள் மற்றும் பிராந்திய மொழித் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முதல்நிலை ஆன்லைன் தேர்வு (Preliminary Examination)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதன்மை ஆன்லைன் தேர்வு (Main Examination)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிராந்திய மொழித் திறன் தேர்வு (Regional Language Test)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அனைத்து கட்டங்களிலும் தகுதி பெறுபவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.850 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் சில தகுதியான பிரிவினருக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடைசி தேதி எப்போ தெரியுங்களா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 18 ஜூலை 2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்: 7 ஆகஸ்ட் 2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதற்கட்டத் தேர்வு: 27 ஆகஸ்ட் 2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதன்மைத் தேர்வு: 30 அக்டோபர் 2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்க: National Insurance Company Limited அதிகாரப்பூர்வ இணையதளம். கால தாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க நண்பர்களே.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/29/419c7c0305c5bbd50b77dd01e4fda5881785315928739733_original.png" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?]]></title><link>https://tamil.abplive.com/jobs/govt-job-alert-kanchipuram-collectorate-recruitment-2026-apply-online-for-14-posts-tnn-269233</link><comments>https://tamil.abplive.com/jobs/govt-job-alert-kanchipuram-collectorate-recruitment-2026-apply-online-for-14-posts-tnn-269233#respond</comments><pubDate>Mon, 27 Jul 2026 18:56:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/govt-job-alert-kanchipuram-collectorate-recruitment-2026-apply-online-for-14-posts-tnn-269233</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் வறுமையை ஒழிக்கும் வகையிலும், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களான காஞ்சிபுரம்-2, குன்றத்தூர்-3, உத்திரமேரூர்-2, வாலாஜாபாத்-4, ஸ்ரீபெரும்புதூர்-3 ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் (BC) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதி மற்றும் பிற நிபந்தனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன், குறைந்தபட்சம் 3 மாத MS Office கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் (Computer Science) / கணினி பயன்பாடுகள் (Computer Applications) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 35 அதற்குள்ளாக இருக்க வேண்டும். மேலும், SHG அல்லது PLF-ல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த இருப்பிடத்தைக் கொண்டவராக இருக்க வேண்டும். அத்துடன், இருசக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது, நன்னடத்தை சான்று சமர்ப்பிப்பது மற்றும் முன்னாள் TNSRLM, புதுவாழ்வு திட்டம், IFAD திட்டம் அல்லது பிற மாநில அரசுத் திட்டங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணியாற்றும்போது பணிநீக்கம் செய்யப்படாதவராக இருக்க வேண்டும் என்பன முக்கிய நிபந்தனைகளாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.08.2026 அன்றைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 502. மேலும் dpiu_kpm@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 07.08.2026-க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/a77092d57ab21e2ccaf23e3fd875e64f17846122468891329_original.jpg" width="220"/></item></channel></rss>