<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>திருநெல்வேலி இளைஞர்களே, ராணுவத்தில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?</title><atom:link href="https://tamil.abplive.com/jobs/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 06:25:06 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[பட்டதாரிகளுக்குப் புதுச்சேரி ஜிப்மரில் வேலை: மாதம் ரூ.22,000 சம்பளம் - விண்ணப்பிக்கத் தயாரா?]]></title><link>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090</link><comments>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:09:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி&amp;nbsp; ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:&lt;/p&gt;
&lt;h3&gt;பணி விவரம்:&lt;/h3&gt;
&lt;p&gt;ஜிப்மர் நிறுவனத்தில் தற்போது நடைபெற்று வரும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்திற்காக 'கிளினிக்கல் ட்ரையல் கோஆர்டினேட்டர்' (Clinical Trial Coordinator) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;கல்வித் தகுதி:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் (Life Sciences) சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;வயது வரம்பு:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்களின் வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;சம்பளம்:&lt;/h3&gt;
&lt;p&gt;தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ. 22,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;தேர்வு செய்யப்படும் முறை:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) நடத்தப்படும். இதில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/h3&gt;
&lt;p&gt;தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jipmer.edu.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;முக்கியத் தேதிகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 05.05.2026&lt;/p&gt;
&lt;p&gt;மருத்துவத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக விவரங்களுக்கு ஜிப்மர் இணையதளத்தைப் பார்க்கவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/c8c3fb5ae531a4aa0eda3e1fd278c1291726647659469856_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை: ரூ.33,000 சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/jobs/job-opportunity-at-jipmer-puducherry-salary-of-33-000-apply-immediately-257702</link><comments>https://tamil.abplive.com/jobs/job-opportunity-at-jipmer-puducherry-salary-of-33-000-apply-immediately-257702#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 09:24:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/job-opportunity-at-jipmer-puducherry-salary-of-33-000-apply-immediately-257702</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவையாற்றி வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Project Technical Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பணியின் விவரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;ஜிப்மர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் ஐ.சி.எம்.ஆர் (ICMR) திட்டத்தின் கீழ் 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' (Project Technical Assistant) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;கல்வித் தகுதி:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் உயிரியல் (Life Sciences), பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ் அல்லது பயோ கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.எஸ்சி (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு &amp;amp; ஊதியம்: &lt;/strong&gt;விண்ணப்பதாரர்கள் 05.05.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 33,000 ஊதியமாக வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை: &lt;/strong&gt;விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை icmrcrsproject@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மே 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நேர்முகத் தேர்வு: &lt;/strong&gt;விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு வரும் மே 9-ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ENT பிரிவில் நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/f7fac2e4d47e078629aba68642b873411721550748913140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[வீட்டில் இருந்தே மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்! - அரசின் 'சூப்பர் சான்ஸ்' இலவச சான்றிதழ் படிப்புகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/earn-20-000-per-month-right-from-home-the-government-s-golden-opportunity-free-certificate-courses-256901</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/earn-20-000-per-month-right-from-home-the-government-s-golden-opportunity-free-certificate-courses-256901#respond</comments><pubDate>Mon, 20 Apr 2026 09:40:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/earn-20-000-per-month-right-from-home-the-government-s-golden-opportunity-free-certificate-courses-256901</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: இன்றைய டிஜிட்டல் சூழலில், முறையான பணிச் சான்றிதழ்கள் இல்லாதது வேலைவாய்ப்பிற்குப் பெரும் தடையாக இருந்து வருகிறது. இதனைப் போக்க மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் இலவச ஆன்லைன் பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்கள், சாமானிய மக்களுக்கும் புதிய வருமானக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;வீட்டில் இருந்தே மாதம் 20,000 சம்பாதிக்கலாம்!&lt;/h2&gt;
&lt;p&gt;இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரிடம் அபரிமிதமான திறமை (Talent) இருந்தபோதிலும், அந்தத் திறமையை அங்கீகரிக்கும் முறையான சான்றிதழ்கள் இல்லாதது வேலைவாய்ப்பு பெறுவதில் பெரும் தடையாக உள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் இலவச ஆன்லைன் பயிற்சிகளையும், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றன. இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மாதம் 20,000 ரூபாய் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே காண்போம்.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசின் இலவசப் பயிற்சித் தளங்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசின் &quot;ஸ்வயம்&quot; (SWAYAM) மற்றும் &quot;ஸ்கில் இந்தியா&quot; (Skill India) போன்ற இணையதளங்கள் வாயிலாக கணினி இயக்கம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு உள்ளீடு (Data Entry) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தனியாக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.&lt;/p&gt;
&lt;h2&gt;சம்பாதிப்பதற்கான 5 எளிய வழிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஃப்ரீலான்சிங் (Freelancing)&lt;/strong&gt; : அரசு அங்கீகாரம் பெற்ற டேட்டா என்ட்ரி அல்லது எம்.எஸ். ஆபிஸ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள், ஆன்லைன் தளங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களின் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் செய்து கொடுத்து நல்ல வருமானம் ஈட்டலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சுயதொழில் மற்றும் வங்கிக் கடன் :&lt;/strong&gt; அரசின் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு, சுயதொழில் தொடங்க வங்கிகளில் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தையல் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றை இதன் மூலம் தொழில்முறையாக மாற்றலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;டிஜிட்டல் சேவை மையங்கள் :&lt;/strong&gt; அரசின் அனுமதி பெற்று, வீட்டில் ஒரு கணினி மூலம் மக்களுக்குத் தேவையான ஆன்லைன் விண்ணப்பங்களைச் செய்து கொடுக்கும் சேவை மையங்களைத் தொடங்கலாம். இதற்கு அரசுச் சான்றிதழ் கூடுதல் அங்கீகாரத்தைத் தரும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஆன்லைன் கல்வி கற்பித்தல் :&lt;/strong&gt; நீங்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதன் மூலமும், மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலமும் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கார்ப்பரேட் நிறுவனப் பணிகள்:&lt;/strong&gt; பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல, 'ஸ்கில் இந்தியா' திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்களுக்குப் பகுதிநேர மற்றும் ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை அளிக்கின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;விடுமுறை காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;&quot;படித்தால் மட்டும் போதாது, கையில் ஒரு திறமைக்கான சான்றிதழும் இருக்க வேண்டும்&quot; என்பதே அரசின் நோக்கமாகும். தற்போது மே மாத விடுமுறை காலம் என்பதால், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி ஆன்லைன் பயிற்சிகளில் சேர்ந்து சான்றிதழ் பெறலாம். கையில் ஒரு அரசு சான்றிதழ் இருப்பது, வேலைவாய்ப்பு சந்தையில் உங்கள் மீதான நம்பகத்தன்மையை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/c8c3fb5ae531a4aa0eda3e1fd278c1291726647659469856_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறை: 12-வது முடித்தவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி வாய்ப்பு; மே 4-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!]]></title><link>https://tamil.abplive.com/jobs/mayiladuthurai-district-legal-services-authority-volunteer-recruitment-2026-tnn-256710</link><comments>https://tamil.abplive.com/jobs/mayiladuthurai-district-legal-services-authority-volunteer-recruitment-2026-tnn-256710#respond</comments><pubDate>Fri, 17 Apr 2026 16:49:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/mayiladuthurai-district-legal-services-authority-volunteer-recruitment-2026-tnn-256710</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் பணியாற்ற ஆர்வமுள்ள சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) வரவேற்கப்படுவதாக மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாராம்சம் பின்வருமாறு:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நோக்கமும் பணியின் தன்மையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த இந்தத் தேர்வு நடைபெறுகிறது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளை மீட்டெடுத்தல் போன்ற மிக முக்கிய சமூகப் பணிகளுக்காக இந்த தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மீட்கப்படும் குழந்தைகளுக்கு முறையான மறுவாழ்வு அளிப்பதுடன், அவர்களுக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதை உறுதி செய்து, ஒரு பாதுகாப்பான மற்றும் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சட்ட ரீதியான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் பாலமாகச் செயல்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கிய நிபந்தனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தன்னார்வலர் பணியானது முற்றிலும் ஒரு சேவை நோக்கம் கொண்டது என்பதைத் தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு நிரந்தர அரசுப் பணி அல்ல. இது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் இதற்கு அடிப்படைச் சம்பளம் அல்லது மாதாந்திர ஊதியம் எதுவும் கிடையாது. தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் சேவைக்குத் தகுந்தவாறு அரசு நிர்ணயித்துள்ள தினசரி மதிப்பூதியம் (Honorarium) மட்டுமே வழங்கப்படும். எனவே, சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வி மற்றும் வயதுத் தகுதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். எனினும், பட்டதாரிகள் மற்றும் சமூகப் பணி (Social Work), உளவியல் (Psychology) அல்லது அது சார்ந்த துறைகளில் கல்வித் தகுதி பெற்றவர்களுக்குத் தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு உடையவர்கள் இந்தத் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பணிக்காலம் மற்றும் தேர்வு முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்ந்தெடுக்கப்படும் சட்ட தன்னார்வலர்கள் முதற்கட்டமாக ஓராண்டு காலத்திற்குப் பட்டியலிடப்படுவர். அந்த ஓராண்டு காலத்தில் அவர்களின் செயல்பாடுகள், அர்ப்பணிப்பு மற்றும் களப்பணிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் அவர்களின் பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும். நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் மற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இதற்காகத் தனியாக அஞ்சல் வழித் தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற இணையதளமான &lt;a href=&quot;https://mayiladuthurai.dcourts.gov.in/&quot;&gt;https://mayiladuthurai.dcourts.gov.in/&lt;/a&gt;என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, வருகின்ற 04.05.2026 ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது பதிவுத் தபால் (Registered Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக மாற்றத்திற்காகப் பங்காற்ற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/6c0b685db702ecebc2710c640260e35c1776424718876186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[SSC: மத்திய அரசு வேலை: 3,003 காலியிடங்கள்- SSC ஃபேஸ் 14 அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/ssc-selection-post-phase-14-recruitment-registration-begins-for-3-003-posts-details-here-256402</link><comments>https://tamil.abplive.com/jobs/ssc-selection-post-phase-14-recruitment-registration-begins-for-3-003-posts-details-here-256402#respond</comments><pubDate>Tue, 14 Apr 2026 18:17:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/ssc-selection-post-phase-14-recruitment-registration-begins-for-3-003-posts-details-here-256402</guid><description><![CDATA[&lt;p&gt;மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான 'செலக்&amp;zwnj;ஷன் போஸ்ட் ஃபேஸ் 14' (Selection Post Phase 14 - 2026) அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3,003 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப தகுதியான பதவிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 11 முதல் 13ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும்&lt;/strong&gt; &lt;strong&gt;முறை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC-யின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளமான &lt;strong&gt;ssc.gov.in&lt;/strong&gt; மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், மற்றும் ஒவ்வொரு பதவிக்கான தனித்தனி கல்வித் தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எவ்வளவு மதிப்பெண்கள்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கணினி வழியிலான எழுத்துத் தேர்வுஅடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கேள்விகள் கொள்குறி வகையில் அமைந்திருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற, ஆணையம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாகும். அதன்படி:&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;பொதுப் பிரிவினர் - 30%&lt;/li&gt;
&lt;li&gt;ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் - 25%&lt;/li&gt;
&lt;li&gt;எஸ்சி/ எஸ்டி மற்றும் இதர பிரிவினர் - 20% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தேர்வு எப்போது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தத் தேர்வு ஜூன் மாதம் உத்தேசமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் &lt;strong&gt;1800 309 3063&lt;/strong&gt; என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தேர்வர்கள் தொடர்புகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;கடைசி நாள்களில் இணையதளத்தில் ஏற்படும் சர்வர் நெரிசலைத் தவிர்க்க, தகுதியானவர்கள் முன்கூட்டியே உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;கூடுதல் விவரங்களை அறிய: &lt;strong&gt;&lt;a href=&quot;https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf&quot;&gt;https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf&lt;/a&gt; என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/want-to-buy-a-sweet-watermelon-these-tips-are-important-256372&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/27/957ab8aae95e810c1d33d93881c745111751020863675233_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி ஜிப்மரில் வேலை! டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.33,000 சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-monthly-salary-of-33-000-for-degree-holders-apply-immediately-256347</link><comments>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-monthly-salary-of-33-000-for-degree-holders-apply-immediately-256347#respond</comments><pubDate>Tue, 14 Apr 2026 12:16:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-monthly-salary-of-33-000-for-degree-holders-apply-immediately-256347</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), தற்போது காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பணி விவரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;ஜிப்மர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) துறையில் செயல்பட்டு வரும் திட்டப் பணிக்காக 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' (Project Technical Assistant) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியானது முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது (Contract Basis) என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;தகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கல்வித்தகுதி:&lt;/strong&gt; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc Life Sciences / Biotechnology / Nanotechnology / Material Sciences / Biochemistry ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; 05.05.2026 அன்று விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சம்பளம்: &lt;/strong&gt;தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ. 33,000 ஊதியமாக வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/h2&gt;
&lt;p&gt;தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்னஞ்சல் முகவரி:&lt;/strong&gt; icmrcrsproject@gmail.com&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்:&lt;/strong&gt; 05.05.2026&lt;/p&gt;
&lt;h2&gt;தேர்வு செய்யப்படும் முறை:&lt;/h2&gt;
&lt;p&gt;மின்னஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 09.05.2026&lt;/p&gt;
&lt;p&gt;நடைபெறும் இடம்: Department of ENT, JIPMER, Puducherry &amp;ndash; 605006.&lt;/p&gt;
&lt;p&gt;நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஜிப்மர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/29/b3bfcd74fc469cdb5667aeccd500b0541724917715659140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மத்திய அரசுத் துறைகளில் நேரடி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு- என்ன பதவிகள்? விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/upsc-announces-direct-recruitment-for-multiple-government-posts-256141</link><comments>https://tamil.abplive.com/jobs/upsc-announces-direct-recruitment-for-multiple-government-posts-256141#respond</comments><pubDate>Sat, 11 Apr 2026 18:53:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/upsc-announces-direct-recruitment-for-multiple-government-posts-256141</guid><description><![CDATA[&lt;p&gt;மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்னென்ன பதவிகள்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;br /&gt;இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் பல முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் ஏ மற்றும் குரூப் பி அளவிலான பதவிகள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக உதவி இயக்குநர், விஞ்ஞானி, சிறப்பு மருத்துவர்கள், மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் வயது வரம்பு ஆகியவை மாறுபடும். எனவே, விண்ணப்பதாரர்கள் எந்தப் பதவிக்குத் தாங்கள் தகுதியானவர்கள் என்பதை முழுமையாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகளும் உண்டு.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தேர்வு முறை எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நேரடி நியமனப் பணியிடங்களுக்குப் பொதுவாக எழுத்துத் தேர்வு கிடையாது. பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் மூலமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவேளை குறிப்பிட்ட பதவிகளுக்கு அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தால், தேர்வர்களை வடிகட்டுவதற்காகக் கணினி வழியிலான சுருக்கத் தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விண்ணப்பிப்பது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;br /&gt;தகுதியானவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று 'Online Recruitment Application' (ORA) முறையில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு இன்று (ஏப்ரல் 11) தொடங்கிய நிலையில், மே 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதிலும் குறிப்பாகப் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் நெட்பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாக இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, துறை வாரியான காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள upsc.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையைப் படித்துப் பார்க்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/10-simple-strategies-to-reduce-anger-256031&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/08/7db710cdec19e178897aec14f8dcf15a1767858402895874_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ராணுவப் பணிக்கு நாளை தேர்வு: புதுச்சேரி தேர்வு மையங்களின் பட்டியல் மற்றும் கட்டுப்பாடுகள் !]]></title><link>https://tamil.abplive.com/jobs/army-recruitment-exam-at-3-centers-in-puducherry-tomorrow-district-administration-makes-extensive-arrangements-256099</link><comments>https://tamil.abplive.com/jobs/army-recruitment-exam-at-3-centers-in-puducherry-tomorrow-district-administration-makes-extensive-arrangements-256099#respond</comments><pubDate>Sat, 11 Apr 2026 13:22:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/army-recruitment-exam-at-3-centers-in-puducherry-tomorrow-district-administration-makes-extensive-arrangements-256099</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் ராணுவ ஆள்சேர்ப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (CEE) நாளை (ஏப்ரல் 12) நடைபெற உள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;இந்திய ராணுவத்தில் அக்னிவீர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CEE) நாளை (ஏப்ரல் 12) நடைபெறுகிறது. புதுச்சேரியில் இதற்காக 3 பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;3 மையங்களில் தேர்வு:&lt;/h2&gt;
&lt;p&gt;நடப்பு ஆண்டிற்கான ராணுவ ஆள்சேர்ப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். தேர்வர்கள் நெரிசலின்றி தேர்வு எழுத ஏதுவாக, நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள மூன்று தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;அடிப்படை வசதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை மற்றும் மின்சார வசதிகளைத் தடையின்றி வழங்க அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களில் போதிய நிழல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;கடும் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்வு நடைபெறும் மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நிர்வாகத்தின் அறிவுறுத்தல்:&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட் (Admit Card) மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட அசல் அடையாளச் சான்றுகளைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சோதனை நடைமுறைகளை முடிக்கவும் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மையத்திற்கு வர வேண்டும் என ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/20/936708b7895e678743863c5d7bd52bf61734697993136349_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/jobs/jipmer-pondicherry-data-entry-operator-recruitment-interview-08-04-2026-255221</link><comments>https://tamil.abplive.com/jobs/jipmer-pondicherry-data-entry-operator-recruitment-interview-08-04-2026-255221#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 17:55:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/jipmer-pondicherry-data-entry-operator-recruitment-interview-08-04-2026-255221</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரவு உள்ளீட்டாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் வேலைவாய்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியானது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) நிரப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பணியின் விவரங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;பதவியின் பெயர்: தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)&lt;/p&gt;
&lt;p&gt;காலியிடங்கள்: 01&lt;/p&gt;
&lt;p&gt;மாதச் சம்பளம்: ரூ. 20,000&lt;/p&gt;
&lt;h2&gt;கல்வி மற்றும் தகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்:&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;BCA (Bachelor&amp;rsquo;s degree in Computer Applications)&lt;/li&gt;
&lt;li&gt;B.Tech (Biotech)&lt;/li&gt;
&lt;li&gt;B.Sc (Nursing)&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;கூடுதல் தகுதியாகக் கணினியைச் சிறப்பாக இயக்கத் தெரிந்திருப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;வயது வரம்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் 31.03.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;தேர்வு செய்யப்படும் முறை:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தப் பணியிடத்திற்குத் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்காகத் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;நேர்காணல் குறித்த முக்கியத் தகவல்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;நேர்காணல் நடைபெறும் நாள்: 08.04.2026&lt;/p&gt;
&lt;p&gt;நேர்காணல் நடைபெறும் இடம்: சிறுநீரகவியல் துறை (Department of Nephrology), ஜிப்மர் மருத்துவமனை (JIPMER),&lt;br /&gt;புதுச்சேரி &amp;ndash; 605006.&lt;/p&gt;
&lt;h2&gt;விண்ணப்பதாரர்களுக்குக் குறிப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;நேர்காணலுக்கு வரும் நபர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நிழற்பட நகல்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களை ஜிப்மர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/3846c063ecebf96ddab3869ddd95f6871775132715476194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருநெல்வேலி இளைஞர்களே, ராணுவத்தில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/tirunelveli/youth-of-tirunelveli-a-golden-opportunity-to-join-the-army-do-you-know-when-the-last-date-to-apply-is-254571</link><comments>https://tamil.abplive.com/news/tirunelveli/youth-of-tirunelveli-a-golden-opportunity-to-join-the-army-do-you-know-when-the-last-date-to-apply-is-254571#respond</comments><pubDate>Fri, 27 Mar 2026 08:29:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ நெல்லை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tirunelveli/youth-of-tirunelveli-a-golden-opportunity-to-join-the-army-do-you-know-when-the-last-date-to-apply-is-254571</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் &amp;lsquo;அக்னி பாதை&amp;rsquo; என்ற திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் &amp;nbsp;முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டதின் கீழ் பல இளைஞர்கள் பணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/27/80dc0d1deedf744a86b1ccb1cb4bd5201774580327230193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அக்னிவீா் திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கு இந்திய இராணுவத்தில் சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். அக்னிவீா் திட்டத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் சோ்வதற்கு இளைஞா்களை தயாா்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெற்றி நடை முகாம் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையலாம். அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர 1.7.2005 முதல் 1.7.2009-க்குள் பிறந்திருக்க வேண்டும். 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும்.உடல் தகுதி, தோ்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கான தோ்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. எழுத்து தோ்வை தமிழிலும் எழுதலாம். மேலும், விவரங்களுக்கு 9952594351 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தால் அனைத்து வட்டங்களிலும் இத்தோ்வுக்கென நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சியில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/27/dd2a865a50a0d85f75b0ce61dfc6db631774580202231193_original.JPG" width="220"/></item></channel></rss>