மாவட்ட நீதிபதி பதவிக்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன? என்று காணலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க இன்று இரவு வரை கால அவகாசம் இருக்கிறது. 


பணி விவரம்:


மாவட்ட நீதிபதி (Entry Level)


மொத்த பணியிடங்கள் - 50 


Tamil Nadu Judicial Service பிரிவின் கீழ் 50 மாவட்ட நீதிபதி தேர்வு செய்யப்பட உள்ளனர். 


கல்வித் தகுதி:


இதற்கு 10+2 என்ற முறையில் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


2009 -2010 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வழக்கறிஞராக பணி அனுவம் இருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.51,550 கொடுக்கப்படும். (ரூ.51,550 - 1230 - ரூ.58,930 - ரூ.1380 - ரூ.63,070 + Allowance) பின்னர், ஊதிய உயர்வு அளிக்கப்படும். 


விண்ணப்ப கட்டணம்:




தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, வைவா வாய்ஸ் டெஸ்ட் ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு மையங்கள்: 
 
இதற்கு சென்னையில் உள்ள மையத்தில் தேர்வு நடைபெறும்.


முதல்நிலை தேர்வு பாடத்திட்டம்






முதன்மை தேர்வு பாடத்திட்டம் 




 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க  www.tn.gov.in  அல்லது https://www.mhc.tn.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கிய தேதிகள்:


 




விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2023 இரவு 23.00 மணி வரை


வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 02.08.2023


*****


கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துடன் Centre for University and Industry Collaboration (CUIC) இணைந்து Tata Electronics Private Limited-ல்  இளங்கலை Manufacturing Science துறையில் கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணிவிவரம்


கெளரவ விரிவுரையாளர்


கல்வித் தகுதி:


தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,  Electronics and Instrumentation / Electronics / Electronics & Communication, ஆகிய துறைகளில் முதுகலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இந்தப் பிரிவுகளில் முதுகலை பட்டத்துடன் NET /SLET   தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


பணி அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு bucuic2020@buc.edu.in - என்ற இ-மெயில் முகவரிக்கு சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும். அதோடு, நேர்காணல் நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:


BU-CUIC Hall


Bharathiar University,


Coimbatore 641046


தொடர்புக்கு- +91-95971 74445


நேர்காணல் நடைபேறும் தேதி - 01.08.2023


https://docs.google.com/document/d/1a_ZyXjx9hp8hzaqD96BUYd913uLZXQyM/edit- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.


கூடுதல் விவரங்களுக்கு. https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.