சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி (American Diabetes Association) 20 வயதுக்கு உட்பட்டவர்களில் அடுத்த 30 ஆண்டுகளில் 700 சதவிகிதம் வரை நீரிழிவு பாதிப்பு அதிகரிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அது 2,20,000 ஆக உச்சத்தை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களில்தான் அதிகம் இருக்கும் நோய் கட்டுப்பாட்டு மையம் கணித்துள்ள வரையறைக்கு நேர் எதிராக இந்தக் கணிப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுதவிர குழந்தை பருவத்திலும் இளமை பருவத்திலும் பொதுவாக கண்டறியப்படும் வகை 1 நீரிழிவு நோய் 65 சதவீதம் அதிகரித்து 3,06,000 ஆக உயரலாம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. மொத்தத்தில், 2060ம் ஆண்டிற்குள்  20 வயதுக்குட்பட்டவர்களில் 5,26,000 பேருக்கு வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் இதே வயதினரில் 2,13,000 நபர்களில் இந்த எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கணிப்பு மட்டுமே என்றாலும் இது இளைஞர்களுக்கான பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.




இதனைத் தவிர்க்க உணவில் என்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம்?


நீரிழிவுக்கான உணவு என்றாலே எந்தவித சுவையும் இல்லாமல் செய்யப்படும் உணவுதான் நம் நினைவுக்கு வரும். மேலும் வொர்க் ஃப்ரம் ஹோம், வொர்க் ஃப்ரம் ஆபிஸ் என எதுவாக இருந்தாலும் உட்கார்ந்த நிலையிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் வாழ்க்கை முறை என்பதால் பலருக்கு நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்காக குறிப்பாக உங்கள் உணவு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம்..


காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவின்போது பார்லியில் செய்யப்பட்ட ரொட்டியை மூன்று நாட்களுக்கு சாப்பிடுவது, வளர்சிதை மாற்றத்தில் முன்னேற்றம், இன்சுலின் உணர்திறன் மற்றும் பசியின்மை கட்டுப்பாடு மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு குறைவதற்கு வழிவகுக்கும். பார்லியில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பயனுள்ள ஹார்மோன்களை வெளியிடுவதில் நல்ல தாக்கத்தை ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


ஓட்ஸ் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவாகும், எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ஓரிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆய்வின்படி, ஓட்ஸ் நடுத்தர ஜிஎல் 13 ஐக் கொண்டுள்ளது. காலையில் அரை கப் சமைத்த ஓட்மீல் 1 அவுன்ஸ் சாப்பிடுவது முழு தானியங்களுக்கு சமமாக கணக்கிடப்படுகிறது. நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு ஓட்ஸ் ஒரு முக்கியமான முழு தானியத் தேர்வாகும், ஏனெனில் அவை உங்கள் காலை உணவில் சேர்க்க எளிதானவை.


ராகி கடுகு போல தோற்றமளிக்கிறது, ஆனால் அதை உட்கொள்வது பல நோய்களை குணப்படுத்துகிறது. இந்த முழு தானியம் ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகும். இதை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது மிகவும் பயனுள்ள எடை இழப்பு ஆதாரமாகும்.