இராஜபாளையம் மக்களுக்கு கிடைத்த மாபெரும் நன்மை.. ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் - முழு விவரம் !
இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும்.
ரூ.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டார்
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இராஜபாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் மருத்துவ சேவையினை குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வசதிகள் என்ன?
அதன்படி, இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் 4 தளங்களுடன் மொத்தம் 9118 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதன்படி தரைத்தளத்தில், பொது மருத்துவ வெளி நோயாளி பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜீ பரிசோதனை மையம், மைய நீராவி தொற்று நீக்கும் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில், அறுவை அரங்குகள் (3 எண்ணம்), எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, முதியோர் மருத்துவ பிரிவு, கண்காணிப்பு பிரிவு, குழந்தை மருத்துவ வெளிநோயாளி பிரிவு, மயக்கவியல் பிரிவும், இரண்டாம் தளத்தில், ஆண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி மற்றும் தொற்று நோள் ஆய்வகமும், மூன்றாம் தளத்தில், பெண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, பெண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும், நான்காம் தளத்தில், பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நேரமும், பண விரயமும் மிச்சமாகும்
இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்பது கிராமப்புற மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது. மருத்துவ சேவைகளுக்கு குறிப்பாக உயர் மருத்துவ சேவைகளுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. தற்போது இந்த பகுதியிலேயே இராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதனால் இப்பகுதி மக்கள் விருதுநகர் வரை செல்லாமல் அருகிலேயே உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற முடியும். இதனால் நேரமும், பண விரயமும் மிச்சமாகும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )























