Diabetics: சர்க்கரை வியாதி இருக்கவங்க ஓட்ஸ் சாப்பிடலாமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது

நீரிழிவு நோய் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒன்று. உடலின் உற்பத்தியாகும் இன்சுலினை பயன்படுத்த முடியாமல் போவதாலும் அதனால் ரத்தத்தில் குளூகோஸ் அதிகம் காணப்படுவதாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் இது போன்ற நிலையை குளூகோஸ் பராமரிப்பால் கட்டுக்குள் வைக்கலாம். அதற்கு என உணவினைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடவேண்டியது அவசியம். குறிப்பாக ஓட்ஸ் சாப்பிட நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஓட்ஸ் நல்லதா?
Just In




சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா? நீரிழிவு நோய்க்கு ஓட்ஸை உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓட்ஸ் முக்கியமாக உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலில் உணவின் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கவும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கவும் உதவுகின்றன." என்கின்றனர்.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் பெருமளவில் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது. நீரிழிவு நோயாளிகளின் உடல் மற்றும் மன நலன்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுதல் போன்றவை இந்த நாளின் மையமாக உள்ளது.
நீரிழிவு நோய்:
நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையேல் நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும். நீரிழிவும் நோயும் அப்படியே! இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது பசிப்பது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, பெரும்பாலும் சோர்வான உணர்வு இருக்கும், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும், காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை உள்ளிட்டவைகள் இவற்றின் அறிகுறிகளாக சொல்கிறது மருத்துவ உலகம்.
சிகிச்சை:
நீரிழிவு நோய்க்கான அறிகுகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துரை அணுகு அதை கண்டறிவது முக்கியம். இன்றைய மருத்துவ உலகில் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. இயற்கை முறையில், மருந்துகள் இல்லாமலேயே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். அவை என்னவெனப் பார்க்கலாம்.
உடற்பயிற்சி:
ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )