<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>“கோடையில் கரும்பு ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்: உடல் சோர்வுக்கு உடனடி தீர்வு” தெரிஞ்சுக்கோங்க!</title><atom:link href="https://tamil.abplive.com/health/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 17:51:57 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[10 ஆண்டாக மருத்துவர்கள் பற்றாக்குறை; பொது சுகாதாரக் கட்டமைப்பில் கடும் பாதிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/shortage-of-doctors-for-10-years-severe-impact-on-public-health-infrastructure-263001</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/shortage-of-doctors-for-10-years-severe-impact-on-public-health-infrastructure-263001#respond</comments><pubDate>Sun, 7 Jun 2026 14:41:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/shortage-of-doctors-for-10-years-severe-impact-on-public-health-infrastructure-263001</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக மருத்துவப் பணிகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால்,&amp;nbsp;அரசு வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் கடுமையான மருத்துவர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள்,&amp;nbsp;புதிய பிரிவுகள் மற்றும் பல்வேறு மருத்துவ சேவைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. படுக்கைகள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப மருத்துவர்,&amp;nbsp;செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;2015-க்கு பிறகு புதிய அரசு மருத்துவர் பணியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாக்கப்படாத நிலையில்,&amp;nbsp;கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும்,&amp;nbsp;மருத்துவ சேவையை வழங்க தேவையான மனிதவள கட்டமைப்பு விரிவுபடுத்தப்படவில்லை. இதனால் தற்போதுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது அதிகப்படியான பணிச்சுமை திணிக்கப்படும் நிலை தொடர்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;2 மடங்கு அதிகம் தேவை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்திய பொது சுகாதார தரநிலைகள்படி,&amp;nbsp;தற்போது உள்ள எண்ணிக்கையை விட குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிகமான மருத்துவர்,&amp;nbsp;செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இதனை அரசு மருத்துவர்கள் சங்கங்களும்,&amp;nbsp;பொது சுகாதார நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;புதிதாக கட்டப்பட்டுள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை,&amp;nbsp;கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை,&amp;nbsp;வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவமனைகளில்,&amp;nbsp;தனித்தனி புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அயல்பணிக்கு அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். புதிய மருத்துவமனைகளுக்கு தேவையான புதிய பணியிடங்களை உடனடியாக உருவாக்குவது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல்,&amp;nbsp;அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வுக்காக போராடி வருகின்றனர். அரசாணை எண்&amp;nbsp;354-ஐ மறு ஆய்வு செய்து,&amp;nbsp;மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை ஊதியப்பட்டை-4&amp;nbsp;அடிப்படையில்&amp;nbsp;13&amp;nbsp;ஆண்டுகள் பணிக்காலத்தில் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும். இது மருத்துவர்களின் பணித்திறனையும் சேவை மனப்பான்மையையும் மேலும் உயர்த்தும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நிரந்தர சட்ட மற்றும் நிர்வாகத் தீர்வுகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான&amp;nbsp;50&amp;nbsp;சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு மருத்துவர்களுக்குரிய இடங்கள் பிற தொகுப்புகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் நிரந்தர சட்ட மற்றும் நிர்வாகத் தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ள செவிலியர் பணியிடங்களை குறைந்தபட்சம் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/wZ2VIBmfAFY?si=CAIP7B82f7TAA6C-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புரவு பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை கைவிட்டு,&amp;nbsp;நிரந்தர பணியிடங்களை உருவாக்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்னென்ன தேவை?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முதல் நிலை பரிந்துரை மையங்களாக செயல்படும் அரசு வட்ட மருத்துவமனைகளில்&amp;nbsp;24&amp;nbsp;மணி நேர எக்ஸ்ரே சேவை வழங்க மூன்று ஷிப்டுகளுக்கும் தேவையான எக்ஸ்ரே தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சேவைகள் அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட்டு,&amp;nbsp;அதற்குத் தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ரேடியாலஜி மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,&amp;nbsp;நீதிமன்ற வழக்குகளால் நியமனங்கள் தடைபட்டுள்ளன. இதற்கான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடித்து,&amp;nbsp;சுகாதார ஆய்வாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும்,&amp;nbsp;உள்கட்டமைப்பு மேம்பாடு,&amp;nbsp;தேசிய தரச்சான்றிதழ் (NQAS)&amp;nbsp;பெறுதல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை கவனிக்க தனித்துவமான மேலாண்மைக் குழு அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே அதிக பணிச்சுமையில் உள்ள மருத்துவர்களை நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து,&amp;nbsp;முழுமையாக நோயாளிகளுக்கான மருத்துவ சேவையில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவையை உறுதி செய்யவும் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு அவசர முன்னுரிமையுடன் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்&amp;rsquo;&amp;rsquo; என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/these-are-the-honda-two-wheelers-that-give-mileage-of-more-than-50-km-262732&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/16/90657a0d6c37d5cf7392941fd5a9abeb1771232982297487_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Female Fertility; லேட் மேரேஜ், லேட் பிரக்னன்சி... பயமுறுத்தும் மீம்ஸ் உண்மையா? மருத்துவர்களின் விளக்கம்]]></title><link>https://tamil.abplive.com/health/female-fertility-is-it-difficult-for-women-to-get-pregnant-after-this-age-experts-answer-262475</link><comments>https://tamil.abplive.com/health/female-fertility-is-it-difficult-for-women-to-get-pregnant-after-this-age-experts-answer-262475#respond</comments><pubDate>Tue, 2 Jun 2026 18:18:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/female-fertility-is-it-difficult-for-women-to-get-pregnant-after-this-age-experts-answer-262475</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்தில், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு 90 சதவீத பெண்களின் கருப்பைகள் சுருங்கிவிடுகின்றன என்ற மீம்ஸ்களும் செய்திகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது பல பெண்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாமதமாகத் திருமணம் செய்துகொள்பவர்கள் அல்லது தொழில் காரணமாகக் கர்ப்பத்தைத் தள்ளிப்போடுபவர்கள் இந்த விஷயத்தில் மேலும் பதற்றமடைகின்றனர். இருப்பினும், பீதியடைவதை விட, இந்த விஷயத்தை நிதானமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வயதாகும்போது சினைப்பைகள் சுருங்குகின்றனவா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் மில்லியன் கணக்கான கருமுட்டைகளுடன் பிறக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வயதாக ஆக இந்த எண்ணிக்கை இயற்கையாகவே குறைகிறது. அவர்கள் பருவமடையும் நேரத்தில், கருமுட்டைகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைகிறது. 30 வயதிற்குப் பிறகு இந்தக் குறைவு வேகமெடுக்கத் தொடங்குகிறது என்று கருவுறுதல் நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/knQa9zQN4sg?si=PfG7GpnG9kRsnm6Y&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;35 வயதிற்குப் பிறகு என்ன நடக்கும்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;35 வயதிற்குப் பிறகு, கருமுட்டைகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் குறையக்கூடும். இதனால் கருத்தரிக்க அதிக காலம் ஆகலாம். சில பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம். 40 வயதிற்குப் பிறகு இயற்கையாகக் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் மேலும் குறைகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் அர்த்தம் 35 அல்லது 40 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது முற்றிலும் சாத்தியமற்றது என்பதல்ல. ஏனெனில் இப்போதெல்லாம், பல பெண்கள் இந்த வயதில்கூட, இயற்கையாகவோ அல்லது கருவுறுதல் சிகிச்சைகளின் உதவியுடனோ கர்ப்பம் தரிக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாழ்க்கை முறையும் முக்கியமானதுதான்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் கருவுறுதலைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் . புகைப்பிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற காரணிகள் கருமுட்டைகளின் தரத்தைப் பாதிக்கலாம். மேலும், பிசிஓஎஸ், தைராய்டு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கலாம். எனவே, இந்தப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தி, அவற்றிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;என்னென்ன சோதனைகள் செய்யப்படும்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு பெண்ணிடம் எவ்வளவு கருமுட்டைகள் உள்ளன என்பதைக் கண்டறிய AMH சோதனை போன்ற சோதனைகள் செய்யப்படுகின்றன. இது ஒரு பெண்ணின் கருமுட்டை இருப்பை மதிப்பிட மருத்துவர்களுக்கு உதவுகிறது. இருப்பினும், AMH சோதனை மட்டும் கருவுறுதலை முழுமையாகத் தீர்மானிப்பதில்லை. வயது, உடல்நிலை, ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;35 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒரு வருடமாக முயற்சி செய்தும் கருத்தரிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களாக முயற்சி செய்தும் கருத்தரிக்கவில்லை என்றால், கருவுறுதல் நிபுணரை அணுக வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, சமூக ஊடகங்களில் வரும் தலைப்புச் செய்திகளுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், கருவுறுதல் பிரச்சனைகள் எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சிலருக்கு 40 வயதிற்குப் பிறகும் நல்ல கருவுறுதல் திறன் இருக்கலாம். மற்றவர்களுக்கு இளவயதிலேயே பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால்தான், வயதுடன் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முறையான மருத்துவ ஆலோசனையும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; &amp;nbsp;இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் வல்லுநர்களால் பகிரப்பட்டுள்ளன. இது பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறுங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/side-of-effects-eating-excess-mangoes-262344&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/28/018f9fb18a5f24195ecdf6b644bc3e061779941450185874_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்.. மருத்துவமனை பக்கமே செல்லாத 8% பெண்கள்.. ஆய்வில் அதிர்ச்சி!]]></title><link>https://tamil.abplive.com/health/nfhs-6-survery-says-8-percentage-women-in-tamilnadu-did-not-visit-a-hospital-during-pregnancy-262143</link><comments>https://tamil.abplive.com/health/nfhs-6-survery-says-8-percentage-women-in-tamilnadu-did-not-visit-a-hospital-during-pregnancy-262143#respond</comments><pubDate>Sun, 31 May 2026 10:14:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/nfhs-6-survery-says-8-percentage-women-in-tamilnadu-did-not-visit-a-hospital-during-pregnancy-262143</guid><description><![CDATA[&lt;p&gt;கர்ப்ப காலங்களில் பெண்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செல்வது தொடர்ச்சியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார் 8% பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது. இது மகப்பேறுக்கு முந்தைய குழந்தை பராமரிப்பு விகிதம் பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கருவுறுதல் விகிதம் 0.1 சதவிகிதமும், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் விகிதம் ஆகியவற்றிலும் சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அந்த கணக்கெடுப்பில் கடைசியாக 2019-2021ல் நடந்த ஆய்வில் 95.8% பெண்கள் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை ஒன்றில் கலந்துகொண்டது தெரியவந்தது. ஆனால் 2023-24ல் இது 92.2% ஆக குறைந்திருக்கிறது. அதேசமயம் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகளை மேற்கொண்ட பெண்களின் விகிதம் 90.6 சதவிகிதத்தில் இருந்து 87.6% ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த ஒப்பீடு 86.2 சதவிகிதமாக உள்ள நிலையில் கிராமப்புறப் பெண்கள் 88.6 சதவிகிதமாக உள்ளது தெரிய வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையின் இயக்குநர் சோமசுந்தரம், &amp;ldquo;ஏறக்குறைய 99.7 சதவிகிதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளது. அதேசமயம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு சதவிகிதம் 2 சதவிகிதம் அதிகரித்துள்ள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்கள் கிட்டதட்ட 3.3 சதவிகிதம் குறைந்து விட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;CV shanmugam speech I &amp;rdquo;தயங்காம சொல்லுங்க! என்னால முடிஞ்சத செய்றேன்&amp;rdquo; உணர்ச்சிவசப்பட்ட CV சண்முகம்&quot; src=&quot;https://www.youtube.com/embed/RIlzvOR3SdY&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நாங்கள் சவால்களையும் குறைபாடுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதற்கான தீர்வுகளை கண்காணித்து வருகிறோம் எனவும் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளின் விகிதம் 60.2 சதவிகிதத்தில் இருந்து 54.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேசமயம் ஆறு மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் சதவிகிதம் 0.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் இதே வயதுடைய குழந்தைகள் 45 சதவிகிதம் பேருக்கு இன்னும் பிரத்யேக தாய்ப்பால் ஊட்டப்படவில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றது. 12-23 மாத வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதும் குறைந்துள்ளது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நீரிழிவு, உடல் பருமன் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து தொடர்பான பிரச்னைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் வரை சுகாதார காப்பீடு இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது 60.3 சதவிகிதம்&amp;nbsp; நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு பிந்தைய உடல்நல பராமரிப்பு குறித்த பிரச்னைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுகாதார வசதிகளில் பல மாநிலங்களை விட முன்னணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் தாய்மார்களுக்கான சுகாதாரம் தொடர்பான பிரச்னையில் புதிய சவால்கள் உருவாகி வருவது மாநில அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-to-the-body-if-you-consume-ginger-and-lemon-together-262079&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/31/bd18e707c8a2b598080d0d650ab18d8717802025111631322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurai ; “கண்ணுக்குள் சென்ற கம்பி, குச்சி… பார்வையை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்களின் அதிசயம்!”]]></title><link>https://tamil.abplive.com/health/madurai-wire-stick-that-went-into-the-eye-miracle-of-the-madurai-government-doctors-who-saved-the-sight-tnn-259941</link><comments>https://tamil.abplive.com/health/madurai-wire-stick-that-went-into-the-eye-miracle-of-the-madurai-government-doctors-who-saved-the-sight-tnn-259941#respond</comments><pubDate>Mon, 11 May 2026 19:57:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/madurai-wire-stick-that-went-into-the-eye-miracle-of-the-madurai-government-doctors-who-saved-the-sight-tnn-259941</guid><description><![CDATA[&lt;p&gt;சிறுவன் மற்றும் முதியவரின் கண்ணுக்குள் சென்ற கம்பி, குச்சியை பார்வை பாதிப்பு இல்லாமல் அகற்றிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரிமோட் அண்டனாவில் இருந்த கம்பி வலது கண்ணுக்குள் சென்றுள்ளது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை அடுத்த இ.கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் - சுகன்யா தம்பதியினரின் 10 வயது மகன் அஹன் கடந்த 3 ஆம் தேதி வீட்டில் ரிமோட் காரை வைத்து விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரிமோட் அண்டனாவில் இருந்த கம்பி வலது கண்ணுக்குள் சென்றுள்ளது. முதல்கட்டமாக உள்ளூரில் உள்ள மருத்துவமனைகளில் கண்ணில் உள்ள கம்பியை அகற்ற முயற்சித்த போது முயற்சி மேலும் சிக்கலானது, சுருள் கம்பியாக கண்ணுக்குள் இருந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைபடி மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது, 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கண் அறுவை சிகிச்சைக்கு பின் பார்வை இழப்பின்றி சுருள் கம்பி அகற்றப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;குச்சி இடது கண்ணுக்கு கீழ் குத்தி மூளைக்கு சென்றது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்கிற 50 வயது முதியவர் சாலை விபத்தில் சிக்கிக் கொண்ட போது குச்சி இடது கண்ணுக்கு கீழ் குத்தி மூளைக்கு சென்றது, தேனி மருத்துவக் கல்லூரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் முருகன் மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நரம்பியல் துறை மருத்துவர்கள் உதவியுடன் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளப்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில் முருகன் கண்ணுக்கு கீழ் இருந்த 6.7 செ.மீ அளவிலான குச்சி அகற்றப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சிக்கலான கண் அறுவை சிகிச்சை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர் கூறுகையில் &quot;சிக்கலான கண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு மேற்க் கொண்டு உள்ளது. கண்ணில் பாதிப்புகள் ஏற்பட்டால் நாமே அதை சரி செய்ய முயற்சிக்காமல் மருத்துவ சிகிச்சை வழியாக தீர்வு காண வேண்டும்&quot; என கூறினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/11/c787d69f8d899848d0a2518f3e3a5d2b1778509595225184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-cm-vijay-daily-diet-menu-fitness-secret-biryani-to-sakkarai-pongal-259922</link><comments>https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-cm-vijay-daily-diet-menu-fitness-secret-biryani-to-sakkarai-pongal-259922#respond</comments><pubDate>Mon, 11 May 2026 17:11:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-cm-vijay-daily-diet-menu-fitness-secret-biryani-to-sakkarai-pongal-259922</guid><description><![CDATA[&lt;p&gt;முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 51 வயதிலும் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாகப் பராமரித்து வருகிறார். அவரது இந்த சுறுசுறுப்பிற்கும், இளமையான தோற்றத்திற்கும் அவர் பின்பற்றும் சீரான உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர் ஒரு நாளில் என்னென்ன உணவுகளைச் சாப்பிடுகிறார் என்பது குறித்துப் பார்க்கலாமா?&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;காலை&lt;/strong&gt; &lt;strong&gt;உணவு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முதலமைச்சர் விஜய் தனது நாளைத் தொடங்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதனைத் தொடர்ந்து காலை உணவாக, மிகவும் எளிமையான தென்னிந்திய உணவுகளான இட்லி அல்லது தோசையுடன் சட்னி சாப்பிடுவதையே அவர் அதிகம் விரும்புகிறார். வழக்கமாக 2 இட்லி, தேங்காய் சட்னி என்பது அவரின் ஃபேவரிட்டாக உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மதிய&lt;/strong&gt; &lt;strong&gt;உணவு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;br /&gt;மதிய வேளைகளில், பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளையே அவர் தேர்ந்தெடுக்கிறார். 200 கிராம் பிரவுன் ரைஸ், காய்கறிகள் மற்றும் புரதச்சத்துக்காக சிக்கன் அல்லது ஃப்ரெஷ் மீன் ஆகியவை அவரது மதிய உணவில் இடம்பெறும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சீட் டே&lt;/h2&gt;
&lt;p&gt;அதேசமயம், விஜய்க்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மட்டன் பிரியாணி. படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும்போதோ அல்லது சிறப்பு நாட்களிலோ அவர் பிரியாணியை விரும்பிச் சாப்பிடுகிறார். அதேபோல சிக்கன் குழம்பில் தோய்த்த மொறுமொறுப்பான தோசை அவரின் அடுத்த ஃபேவரிட் உணவு.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாலை&lt;/strong&gt; &lt;strong&gt;நேரச்&lt;/strong&gt; &lt;strong&gt;சிற்றுண்டி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாலை நேரங்களில் பசி எடுத்தால், ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை விஜய் முற்றிலும் தவிர்த்து விடுகிறார். அதற்குப் பதிலாக, பாதாம், வால்நட் போன்ற உலர் பருப்பு வகைகள் மற்றும் ஆப்பிள், மாதுளம்பழம், ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பழங்களையே சிற்றுண்டியாக எடுத்துக்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இரவு&lt;/strong&gt; &lt;strong&gt;உணவு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இரவு நேரங்களில் உணவு செரிமானம் ஆக எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் லைட்டான உணவுகளையே அவர் உண்கிறார். பெரும்பாலும் சப்பாத்தி, காய்கறி சாலட் அல்லது சூப் போன்றவையே அவரது இரவு உணவாக இருக்கும். தூங்குவதற்கு முன்பு அதிகமாகச் சாப்பிடுவதை அவர் தவிர்த்து விடுகிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிடித்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;இனிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பொதுவாக உணவு விஷயத்தில் விஜய் மிகவும் கண்டிப்பாக இருந்தாலும், இனிப்பு வகைகளில் அவருக்கு ஒரு தனி விருப்பம் உண்டு. குறிப்பாக, சர்க்கரைப் பொங்கல் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர். தனக்கு விருப்பமான நேரங்களில் அவர் சர்க்கரைப் பொங்கலை விரும்பிச் சாப்பிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;எவ்வளவுதான் பிடித்த உணவாகவே இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவதுதான் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் ஆரோக்கிய ரகசியம். அத்துடன் துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதுமே அவரது பிட்னஸ் சீக்ரெட்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/these-are-common-mistakes-people-make-when-losing-weight-259864&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/11/19011e1700e49f7dc9de669e147a904f1778499445312332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தர்பூசணி சாப்பிட்டவர்கள் குடும்பத்துடன் மரணம்; வாட்டர் மெலன்தான் காரணமா? மருத்துவர் விளக்கம்]]></title><link>https://tamil.abplive.com/health/family-members-die-after-eating-watermelon-was-watermelon-the-cause-doctor-explains-259737</link><comments>https://tamil.abplive.com/health/family-members-die-after-eating-watermelon-was-watermelon-the-cause-doctor-explains-259737#respond</comments><pubDate>Sat, 9 May 2026 18:31:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/family-members-die-after-eating-watermelon-was-watermelon-the-cause-doctor-explains-259737</guid><description><![CDATA[&lt;p&gt;இதுகுறித்து பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கொடுத்துள்ள விளக்கம்:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;மும்பை நகரில் கடந்த 25 சில நாட்களுக்கு முன்னர், குடும்பத்துடன் வாட்டர் மெலன் சாப்பிட்ட நால்வர் அடுத்தடுத்து மரணமடைந்தது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதுபற்றிப் பல கோணங்களில் ஆய்வு நடந்து வந்த சூழ்நிலையில்&lt;/p&gt;
&lt;p&gt;- வாட்டர் மெலானில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமா?&lt;/p&gt;
&lt;p&gt;- வாட்டர் மெலானில் ஏதேனும் கலப்படம் இருந்து அதனால் மரணமா? என்றும் விசாரணை நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டம் சார்ந்த மருத்துவத் தடயவியல் துறையின் முதற்கட்ட அறிக்கையின்படி, பிரேதக் கூறாய்வின்போது உள்ளுறுப்புகளான மூளை/குடல்/ இதயம் ஆகியன &quot;பச்சை&quot; நிறம் பூண்டிருந்ததை எடுத்துக் கூறியது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விஷம் வைத்த உணவா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதன் வழியாக &amp;nbsp;வாட்டர் மெலானில் எந்த பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. மாறாக இது ஏதோ ஒரு உயிருக்கு ஊறு விளைவிக்கும் விஷப் பொருளை சாப்பிட்டதால் ஏற்பட்ட விளைவு என்ற முடிவு எட்டப்பட்டது. வாட்டர் மெலானில் கிருமித் தொற்றோ அல்லது கலப்படமோ காரணமில்லை என்று கருதப்பட்டு, இது விஷம் வைத்த உணவை உண்டதால் ஏற்பட்ட மரணங்கள் என்ற முடிவு எட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போது மருத்துவத் தடயவியல் துறையினரின் அடுத்த கட்ட அறிக்கையில், மரணமடைந்தவர்களின் பிரேதங்களின் உள்ளுறுப்புகளில் குறிப்பாக இரைப்பையில் இருந்தும் அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த வாட்டர் மெலானின் மாதிரிகளிலும் &quot;ஜிங்க் ஃபாஸ்பைடு&quot; (ZINC PHOSPHIDE) எனும் விஷத்தன்மை கொண்ட ரசாயனப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதன் வழி &amp;nbsp;வாட்டர் மெலான் மீது சுமத்தப்பட்ட களங்கம் முடிவுக்கு வந்துள்ளது. வாட்டர் மெலான் மீது எந்தப் பிரச்சனையும் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இனி, விஷத்தன்மை உள்ள பொருளை தற்கொலை எண்ணத்துடன் சாப்பிட்டார்களா? அல்லது இவர்களை கொல்லும் நோக்குடன் இவர்களது உணவில் கலக்கப்பட்டதைத் தெரியாமல் சாப்பிட்டார்களா? அல்லது எலிகளைப் கொல்லும் நோக்கில் எலி மருந்து வைத்திருந்த உண்வை &amp;nbsp;அறியாமல் சாப்பிட்டார்களா? என்ற வாதங்கள் மட்டுமே இனி நமக்கானது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எலிக் கொல்லி மருந்து&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஜிங்க் பாஸ்பைடு பொதுவெளியில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் &quot;எலிக் கொல்லி மருந்தாக&quot; விற்கப்படுகிறது. பசை வடிவிலும், கட்டி வடிவிலும், மாவு வடிவிலும் கிடைக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பெரும்பான்மை மரண நிகழ்வுகளில் இந்த எலி மருந்து என்பது சுய தீங்கு / தற்கொலை நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எலி மருந்தை உட்கொண்ட பின் உடலுக்குள் செல்லும் ஜிங்க் பாஸ்பைடு உடலின் நீர்ச்சத்துடனும் இரைப்பையில் இருக்கும் அமிலத்துடனும் ரசாயன வினை புரிந்து பாஸ்பைன் (PHOSPHINE) எனும் அபாயகரமான வாயுவை வெளியிடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வாயு, ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மூலை முடுக்கெங்கும் சென்று செல்களின் ஆற்றல் உற்பத்தி தளங்களான மைட்டோ கான்ட்ரியாக்களை மூச்சு விட இயலாமல் செய்து கொல்கின்றது.&lt;/p&gt;
&lt;p&gt;இதன்வழி, முக்கிய உறுப்புகளான சிறுநீரகங்கள், இதயம், மூளை, நுரையீரல் என அனைத்துமே முடங்கும் நிலை உருவாகிறது.&amp;nbsp;ரத்த ஓட்ட முடக்கம், அதி தாழ் ரத்த அழுத்த நிலை, இதய தசை அழற்சி,&amp;nbsp;நுரையீரலில் நீர் தேங்குதல், இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு என்று குறிவைக்கும் இடமெல்லாம் தீங்கு செய்வது மட்டுமே அறிந்த விஷம் இது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; 100% வரை மரணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த விஷத்தை உட்கொண்டோரில் 37- 100% வரை மரணத்தை அளிக்கக் கூடிய கொடிய விஷமாக இது இருக்கிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளான ஆர்கனோ பாஸ்பேட்டுகளுக்கு என பிரத்யேக முறிவு மருந்துகள் ( அட்ரோபின் + ஆக்சைம்கள்) உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால், ஜிங்க் பாஸ்பைடு, மஞ்சள் பாஸ்பரஸ் உள்ளிட்ட இந்த எலிக் கொல்லி மருந்துகளுக்கு பிரத்யேக முறிவு மருந்துகள் கிடையாது. சுவாசத்தை தக்க வைக்க செயற்கை சுவாசக் கருவி, ரத்த அழுத்தத்தை தக்க வைக்க உயிர்காக்கும் மருந்துகள், சிறுநீரகங்களை காக்க டயாலசிஸ் என்று அதி தீவிர சிகிச்சைகளை கூட்டாக வழங்கிட வேண்டியிருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாழிகையும் மரணத்திற்கு அருகில் கொண்டுய்க்கும் கொடு விஷமிது. அதனால்தான் தமிழ்நாட்டில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்து அரசு ஆணை பிறப்பித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த எலி மருந்தை குறிப்பாக ஜிங்க் பாஸ்பைடு கொண்டு எலி கொல்லி மருந்தை கொல்வதற்காக மறைமுகமாக பயன்படுத்த முடியுமா? முடியாது என்பதே பதில், காரணம் இந்த எலி மருந்தில் உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அதீத கார சுவை கொண்ட பொருளான&amp;nbsp;டெனடோனியம் பென்சோவேட் (Denatonium Benzoate) கலக்கப்பட்டுள்ளது.யாரேனும் தெரியாமல் வாயில் வைத்தால் கூட அதற்கு மேல் சாப்பிடாமல் துப்பி விட வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அறியாமல் சாப்பிட்டிருக்க முடியாது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வாட்டர் மெலானில் இருக்கும் இனிப்பை விட இந்த ரசாயனத்தின் கார சுவை மிக மிக மிக அதிகம். எனவே, அறியாமல் இதை சாப்பிட்டிருக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கடுத்த படியாக, இந்த ஜிங்க் பாஸ்பைடை வாட்டர் மெலானில் கலந்திருப்பதால், ஜிங்க் பாஸ்பைடு + வாட்டர் மெலானில் உள்ள நீர் / ஈரப்பதம் சேர்ந்து வேதியியல் வினை புரிந்து பாஸ்பைன் வாயுவை வெளிவிடும். பாஸ்பைன் வாயு குமட்டும் அளவு நாற்றமடிக்கும் வாயுவாகும.&lt;/p&gt;
&lt;p&gt;கெட்டுப்போன மீன்/ பூண்டு நாற்றம் அடிக்கும் வாயு. எனவே, வாட்டர் மெலான் பழத்தை வெட்டும் போதே நாற்றம் அடிக்கும். பிறகு எப்படி அதை மறைமுகமாக வழங்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;மூன்றாவது, வணிக ரீதியாக விற்கப்படும் எலி மருந்துகளில் உணவில் கடந்தாலும் உடனடியாக அடையாளம் தெரிய வேண்டும் என்பதால்&amp;nbsp;நீலம்/ பச்சை/ இளஞ்சிவப்பு நிற சாயம் சேர்க்கப்படுகிறது. வாட்டர் மெலானில் கலந்தாலும் முழுவதும் அந்த சாய நிறத்தைக் கொண்டு வரும் வாய்ப்பு அதிகம்.&lt;/p&gt;
&lt;p&gt;எனவே,&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு உணவில் கலக்கப்பட்ட விஷம்&lt;/p&gt;
&lt;p&gt;- சுவையிலும் அதிக காரமாகவும்&lt;/p&gt;
&lt;p&gt;- நாற்றமெடுக்கக்கூடியதாகவும்&lt;/p&gt;
&lt;p&gt;- நிறத்திலும் சாயத்தின் நிறம் சேர்க்க கூடியதாகவும் இருப்பதால்&amp;nbsp;பொதுவாக ஜிங்க் பாஸ்பைடு விஷம் பிறரை மறைமுகமாகக் கொல்வதற்கு பயன்படுத்த உகந்ததல்ல என்பதால் வாட்டர் மெலனில் எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/if-you-take-this-every-day-you-will-stop-smoking-soon-259698&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/08/86a52202744c2fe641609edd1cb5d0de1778244325755339_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !]]></title><link>https://tamil.abplive.com/education/madurai-district-8-578-candidates-are-participating-in-the-neet-exam-at-14-exam-centers-in-tnn-259004</link><comments>https://tamil.abplive.com/education/madurai-district-8-578-candidates-are-participating-in-the-neet-exam-at-14-exam-centers-in-tnn-259004#respond</comments><pubDate>Sun, 3 May 2026 12:50:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/madurai-district-8-578-candidates-are-participating-in-the-neet-exam-at-14-exam-centers-in-tnn-259004</guid><description><![CDATA[&lt;p&gt;தேர்வு மையத்தின் வெளியில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனைகளுக்கு பின்பு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.&lt;/p&gt;
&lt;div&gt;&lt;strong&gt;நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, MBBS, BDS., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புக்கான 2026ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை. மதுரை மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் 8,578 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். நீட் தேர்வு மையங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை தேர்வு அறையில் மாணவ - மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;strong&gt;பல்வேறு கட்டுப்பாடுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, தேர்வர்கள் அனைவரும், தெளிவான தண்ணீர் பாட்டில்களை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் அரை கை கொண்ட, வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். முழுக்கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிய அனுமதி இல்லை. ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்கக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தைக் கொண்டும் ஷூக்கள் அணியக் கூடாது. தேர்வர்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ ஆபரணங்களையோ அணிந்து வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் மத அல்லது கலாச்சார ரீதியான குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வரும் தேர்வர்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;உச்சகட்ட செக்கிங்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொபைல் போன்கள், ப்ளூடூத் கருவிகள், இயர்போன்கள், மைக்ரோஃபோன்கள், பேஜர்கள், கால்குலேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ் மற்றும் எரேசர் உள்ளிட்ட எந்த ஸ்டேஷனரி பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லக் கூடாது. பர்சுகள், கூலிங் கிளாஸ்கள், ஹேண்ட் பேக்குகள், பெல்ட்கள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்படாது. தேர்வர்கள் தங்களது அட்மிட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;14 தேர்வு மையங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என&amp;nbsp; தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 14 தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் உள்ள நீட்தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் தேர்வர்களின் நலன் கருதி கடும் வெயிலின் தாக்கம் காரணமாக தேர்வு மையத்தின் வெளியில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனைகளுக்கு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/03/f7718c0fba43c7af3fb769948f02f33f1777792794072184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கோடை வெயில் சூட்டை தணிக்க ஜூஸ் குடிக்க செல்லும் முன் இந்த 10 விசயத்தை கவனிக்கவும் !]]></title><link>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</link><comments>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 23:32:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</guid><description><![CDATA[&lt;p&gt;கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கோடை வெயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.&amp;nbsp; மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நுகர்வோர்களின் கவனத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியி&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;லிருந்து பெறுவது நல்லது. &amp;nbsp;உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/ff307470bf22316d3c13dae6b27f0e5d1777399291151184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கோடையில் திரவ உணவுகள் விற்பனைக்கு கட்டுப்பாடு – இந்த 22 விதிகளை கட்டாயம் பாருங்க !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 20:48:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</guid><description><![CDATA[&lt;p&gt;கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது. எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வணிகர்களின் கவனத்திற்கு&lt;/strong&gt;: &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;2&lt;/strong&gt;. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3&lt;/strong&gt;. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 &amp;frac12; மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;6&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர &amp;ldquo;ஐஸ் கட்டியைப்&amp;rdquo; பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி &amp;ldquo;நீல நிறத்திலும்&amp;rdquo; இருக்கும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;7&lt;/strong&gt;. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;8&lt;/strong&gt;. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;9&lt;/strong&gt;. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;10&lt;/strong&gt;. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks) &amp;nbsp;போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் &amp;ldquo;தொற்றுநோய்த் தாக்கமற்றவர்&amp;rdquo; என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;12&lt;/strong&gt;. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;13&lt;/strong&gt;. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;14&lt;/strong&gt;. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;15&lt;/strong&gt;. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;16&lt;/strong&gt;. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;17&lt;/strong&gt;. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;18&lt;/strong&gt;. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;19.&lt;/strong&gt; பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;20&lt;/strong&gt;. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;21.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled) &amp;nbsp;செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22.&lt;/strong&gt; குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/1b26a545d7dd964bc02aa6f47afcede31777389458333184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[“கோடையில் கரும்பு ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்: உடல் சோர்வுக்கு உடனடி தீர்வு” தெரிஞ்சுக்கோங்க!]]></title><link>https://tamil.abplive.com/health/benefits-of-drinking-sugarcane-juice-in-summer-an-instant-remedy-for-physical-fatigue-find-out-here-257749</link><comments>https://tamil.abplive.com/health/benefits-of-drinking-sugarcane-juice-in-summer-an-instant-remedy-for-physical-fatigue-find-out-here-257749#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 14:34:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/benefits-of-drinking-sugarcane-juice-in-summer-an-instant-remedy-for-physical-fatigue-find-out-here-257749</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடுமையான வெயிலில் காய்ந்து, தீஞ்சு அலைந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு மூளையில் விற்றுக் கொண்டிருக்கும் கரும்பு ஜூஸ் கடைய பாத்து அன்னாச்சி ஒரு ஜீஸ் போடுங்க அப்டினு சொல்லிட்டு வெயில்லருந்து கடையோர நிழல்ல கொஞ்சம் இளைப்பாறி அவர் கொடுக்குற &amp;nbsp;கடும்பு ஜீஸ்ச அருந்தும்போது கிடைக்கும் சுகத்திற்கு ஈடு இணையே இல்லை. &amp;nbsp;வழக்கமா கோடைகாலமுனு சொன்னாலே ஏப்ரல், மே மாதங்கள்தான் ஆனா இப்ப இருக்க பருவ நிலை மாற்றம் காரணமா கொஞ்சம் முன் கூட்டியே கோடை வெயிலின் தக்கம் அதிகமாகிருச்சு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/2650b3daeb195351b1de234458593d581777366812054193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெயில்ல சுத்திட்டு இருக்கப்போ தாகத்துக்கு எதாவது ஒரு கூல்டிரிங்ஸ் சாப்பிடனும்னு கடைய தேடுவோம் அப்டி தேடும்போதுதான் &amp;nbsp;சாலையோரங்கள்ல இருக்குற இந்த கரும்பு ஜீஸ் கடைய நிறைய பேர் பார்போம், கடந்து செல்வோம். நிறைய பேர் சாதாரணமாக தாகத்திற்காக இந்த கரும்பு ஜீஸ்ச அருந்திவிட்டுக் கடந்து செல்கிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக என்னதான் கரும்பு ஜூஸை எல்லோரும் பருகும்போது ஒரு கும்பல் மட்டும் கரும்பு ஜீஸை தவிர்ப்பாங்க. அவங்கதான் டயட் ஃபாலோவர்ஸ். அதிக அளவிலான சர்க்கரை கரும்புச் சக்கையில் இருக்கிறது என்கிறது உண்மைதான் என்றாலும் அது உடல் பருமனை அதிகரிக்கும் என்பது மூடநம்பிக்கையே. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/d26ebeb96d65d14bea838193e7e8d8171777366836533193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதுமட்டுமன்றி 300 மில்லி கரும்புச் சாறில் 111 கலோரிகள் நிறைந்துள்ளன. அதேபோல் உடலில் எங்கெல்லாம் கொழுப்பு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் கரையும் அதிசயத்தைக் காணலாம். இது உங்கள் மெட்டாபலிசத்தை அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கும். ஜீரண சக்திக்கு எளிய மருந்து கரும்புச் சாறு . இதில் ஜீரண சக்திக்கு உதவும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாகும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கரும்புச் சாறோடு சேர்க்கப்படும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு மிக முக்கியம் எலக்ட்ரோலைட்ஸ். இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன. இது உடல் சோர்வடையாமல் தக்க வைக்க உதவும். நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். கரும்புச் சாறில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/0440a5ec2a3528ddbb36d56a4f543bc51777366857366193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாய் துர்நாற்றத்தை அகற்றும். இதில் முக்கிய மருத்துவ குணம் என்னவெனில் புற்று நோய் கிருமிகளைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக பெண்களைத் தொடரும் மார்பகப் புற்று நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே அகற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் மட்டுமன்றி சருமம் தொடர்பான பிரச்னையும் குறிப்பாக முகப்பருக்களை அழிக்கும் ஆற்றல் கரும்புச் சாறில் உள்ளது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி ஆசிட் இதற்கு உதவுகிறது. கோடைகாலங்களில் உடலின் சூட்டை தனிக்க இது போன்ற ஆரோக்கியமான உணவு பொருட்களை சப்பிடுவதால் உடல் நலம் ஆரோக்கியம் பெருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/be96c762f03bd8996969a647e56db8aa1777366771844193_original.JPG" width="220"/></item></channel></rss>