<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !</title><atom:link href="https://tamil.abplive.com/health/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 01:34:21 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க  என சுகாதாரத் துறை எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-monsoon-fever-outbreak-health-department-hospital-treatment-270815</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-monsoon-fever-outbreak-health-department-hospital-treatment-270815#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 15:36:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-monsoon-fever-outbreak-health-department-hospital-treatment-270815</guid><description><![CDATA[&lt;p&gt;பருவமழையால் தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்&lt;/p&gt;
&lt;p&gt;பருவமழை எதிரொலியால் தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறையாத காய்ச்சல், வயிற்று வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;பருவமழை காலம் என்பதால் டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு, எலி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக &amp;nbsp;அதிகரிப்பதாக பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;குறையாத காய்ச்சல், வயிற்று வலி, திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தசைவலி, கண்கள் சிவத்தல், &amp;nbsp;கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு வலி, தோலில் சிவப்பு தடிப்புகள், முதுகு வலி, உடல் சோர்வு, &amp;nbsp;பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிடாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டுமென பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PKXmOe46fE4?si=hm2fFk8vEraksxe7&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பருவ மழை நோய் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு &amp;nbsp;ஏற்ப தனித்தனி பரிசோதனை செய்து நோயின் தீவிரத்தை தீவிர காய்ச்சல், நடுத்தர காய்ச்சல், லேசான காய்ச்சல் என பகுப்பாய்வு செய்து அதற்கு ஏற்ப நோயாளிக்கு மருந்து கொடுக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பொதுமக்கள் சாதாரண காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை நாடி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் மழைக்காலம் என்பதால் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, டைபாய்டு உள்ளிட்ட பருவமழை நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாகவும் வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மாவட்ட அளவிலான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட நிர்வாக அமைப்போடு ஒருங்கிணைந்து நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/1de423db83653478a6f160f0435fafbd1786442361811113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/health/health-tips-how-to-check-thyroid-at-home-full-details-here-270796</link><comments>https://tamil.abplive.com/health/health-tips-how-to-check-thyroid-at-home-full-details-here-270796#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 13:53:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/health-tips-how-to-check-thyroid-at-home-full-details-here-270796</guid><description><![CDATA[&lt;p&gt;ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல விதமான நோய்களுடன் போராடுகிறோம். சில நோய் பாதிப்புகள் அனைவரையும் தாக்கக்கூடிய பொதுவான நோயாக இருக்கும். அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றான தைராய்டு பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;42 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தைராய்டு நோயுடன் போராடி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்னையாகும். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் பெரிய அளவில் பாதிப்பிலாமல் கடந்து போல முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சத்தமில்லாமல் பிரச்னை செய்யும் தைராய்டு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் தாடைக்கு கீழே அமைந்திருக்கும் நாளமில்லாச் சுரப்பி ஆகும். தைராக்சின் மற்றும் டிரைஅயோடோதைரோனின் ஆகிய ஹார்மோன்களை இந்த சுரப்பி உற்பத்தி செய்யும் நிலையில் இவை உடலின் செல்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஹார்மோன்கள் தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளாக அறியப்படும் ஆற்றல் உற்பத்தி, உடல் வெப்பநிலை, &amp;nbsp; எடை மேலாண்மை ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும். இதனால் இந்த சுரப்பில் அதிகமாக செயல்பட்டாலோ அல்லது குறைவாக செயல்பட்டாலோ உடல் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும். இதனால் உங்கள் உடலில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டால் அது தைராய்டு சுரப்பியின் பாதிப்பாகவும் இருக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;EPS Vs Sengottaiyan | Edappadi Palaniswami's Sarcasm! Sengottaiyan Gets Tense, DMK Members Applaud&quot; src=&quot;https://www.youtube.com/embed/RiBvk-t5WH0&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகிய இரண்டு வகை இதில் உள்ளது. உதாரணமாக உடல் எடை அதிகரிப்பது ஹைப்போ தைராய்டிசம் என கொள்ளலாம். உடல் எடை குறைவது ஹைப்பர் தைராய்டிசம் என கணக்கில் கொள்ளலாம். நீங்கள் சாப்பிடும் உணவு, தினசரி பழக்க வழக்கம் போன்றவை மட்டும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்காது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டிலேயே தைராய்டு பரிசோதனை செய்யலாமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மருத்துவ ஆய்வுகளின்படி, வீட்டில் நாம் தைராய்டு பரிசோதனை செய்ய முடியும். சமச்சீரற்ற தன்மை, விழுங்குவதில் சிரமம் அல்லது கழுத்தில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்வது நல்லது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;முதலில் கண்ணாடி முன் நிற்கவும். உங்கள் உடலின் மீது போதுமான அளவு இயற்கையான ஒளி கிடைப்பதை உறுதி செய்யுங்கள். அடுத்ததாக தாடைக்கு கீழே, கழுத்தெலும்புக்கு மேலே தைராய்டு பகுதி அமைந்திருக்கிறது. கழுத்தை லேசாக பின்னோக்கி வளைத்தால் இதனை கண்டறியலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சிறிதளவு தண்ணீர் குடித்து விழுங்கும்போது வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என சோதனை செய்யவும். ஒருமுறை மட்டும் செய்யாமல் பலமுறை செய்வதால் வீக்கம், சமச்சீரற்ற இயக்கம், புடைப்புகள் போன்றவை இருக்கிறதா என பாருங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் மாறுபட்ட பிரச்னை இருந்தால் பயப்பட வேண்டாம். மருத்துவ பரிசோதனை செய்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தைராய்டு பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள் சோர்வு, குறைந்த ஆற்றல், காரணமற்ற எடை அதிகரிப்பு &amp;nbsp;போன்றவை இருக்கலாம். எனவே எதுவாக இருந்தாலும் அதனை சாதாரணமாக இருக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-consuming-dates-with-ghee-270388&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/2175640b40b89fe2bcd91668fbd3278a17864365907081322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!]]></title><link>https://tamil.abplive.com/health/virudhunagar-aruppukottai-sulakkarai-thesiya-kudarpuzhu-neekka-naal-sugaputhra-maathiraigal-tnn-270732</link><comments>https://tamil.abplive.com/health/virudhunagar-aruppukottai-sulakkarai-thesiya-kudarpuzhu-neekka-naal-sugaputhra-maathiraigal-tnn-270732#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 22:28:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/virudhunagar-aruppukottai-sulakkarai-thesiya-kudarpuzhu-neekka-naal-sugaputhra-maathiraigal-tnn-270732</guid><description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் &amp;nbsp;தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, &amp;nbsp;7,11,405 பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் &amp;nbsp;மரு.என்.ஓ.சுகபுத்ரா குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. &amp;nbsp; &amp;nbsp;&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் &quot;தேசிய குடற்புழு நீக்க நாள்&quot; முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.08.2026) குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.&amp;nbsp; பின்னர், &quot;தேசிய குடற்புழு நீக்க நாள்&quot; முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் &quot;தேசிய குடற்புழு நீக்க நாள்&quot; இன்று(10.08.2026) அனுசரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5,78,289 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் என மொத்தம் 7,11,405 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்&lt;/strong&gt;. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமானது 292 கிராம சுகாதார செவிலியர்கள், 1504 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3280 பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இம்முகாமில் 11 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 22 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியகரம் (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) குழுக்களும் மற்றும் 11 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் இம்முகாமில் பார்வையாளராக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.08.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மருத்துவ அலுவலர்கள், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/51513a3bbb09ac4650c714f04d1695a21786381097751184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? -  நிபுணர்கள் கூறும் உண்மை!]]></title><link>https://tamil.abplive.com/health/alcohol-liver-damage-ethyl-alcohol-acetaldehyde-safe-quantity-270437</link><comments>https://tamil.abplive.com/health/alcohol-liver-damage-ethyl-alcohol-acetaldehyde-safe-quantity-270437#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 19:53:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/alcohol-liver-damage-ethyl-alcohol-acetaldehyde-safe-quantity-270437</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மது அருந்துவது கல்லீரலைப் பாதிக்கும் எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நாம் சமூக ஊடகங்களில் அல்லது நண்பர்களுடன் இருக்கும்போது, ​​மதுபானம் கல்லீரலுக்கு ஏற்படுத்தும் தீங்குகள் குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன. பீர் குடிப்பதால் கல்லீரலுக்கு எந்தத் தீங்கும் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர். மற்றவர்களோ ரெட் ஒயின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால், கல்லீரலுக்குத் தீங்கு விளைவிக்காத மதுபானம் என்று உண்மையில் ஏதாவது இருக்கிறதா? இது குறித்து வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;எந்த வகை மதுபானமும் பாதுகாப்பானதா?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;உலகில் கல்லீரலுக்கு முற்றிலும் பாதுகாப்பான மது என்று எதுவும் இல்லை. உங்கள் விஸ்கி, பீர், வோட்கா அல்லது ரெட் ஒயின் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், அனைத்து மதுவிலும் எத்தில் ஆல்கஹால் உள்ளது. இது கல்லீரலைக் கடுமையாகச் சேதப்படுத்துகிறது. நீங்கள் மது அருந்தும்போது, ​​அதை வடிகட்டும் முழு வேலையையும் கல்லீரல்தான் செய்ய வேண்டியுள்ளது. கல்லீரலுக்கு பீரும் விஸ்கியும் ஒன்றுதான். கல்லீரல் அந்த ஆல்கஹாலை வெளியேற்ற வேண்டும். எனவே, அனைத்து வகையான மதுவும் கல்லீரலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/7w2Rs3Y--UQ?si=G6IOyJjCq4aADTbR&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நம் உடலில் கல்லீரல் ஒரு தொழிற்சாலை போல செயல்படுகிறது. அதனால், ஒரு மணி நேரத்தில் சுமார் 10 முதல் 14 கிராம் வரையிலான ஒரு சிறிய அளவு ஆல்கஹாலை மட்டுமே ஜீரணிக்க முடியும். எனவே, ஒருவர் அடிக்கடி மது அருந்தும்போது, ​​கல்லீரலின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. ஆல்கஹாலை ஜீரணிக்க, கல்லீரல் அசிட்டால்டிஹைட் எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வேதிப்பொருளை வெளியிடுகிறது. இருப்பினும், உடலில் அதன் அளவு அதிகரித்தால், அது கல்லீரல் செல்களை அழிக்கத் தொடங்குகிறது. இது கல்லீரலில் கொழுப்பு சேரக் காரணமாகிறது. இது கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் நீண்ட காலம் தொடர்ந்து மது அருந்தினால், இந்த நோய் பிற்காலத்தில் கல்லீரல் இழைநார் நோயாக (liver cirrhosis) மாறுகிறது, இது மிகவும் உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஒயினை விட பீர் குறைவான தீங்கானதா?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பீரில் உள்ள குறைந்த அளவு ஆல்கஹால் கல்லீரலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதில்லை என்று மக்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய தவறு, ஏனென்றால் விஸ்கி அல்லது வோட்கா அருந்துபவர்கள் 1 அல்லது 2 சிறிய பெக் மட்டுமே அருந்தும்போது, ​​பீர் அருந்துபவர்கள் ஒரே நேரத்தில் 2 முதல் 3 பாட்டில்கள் வரை குடிக்கிறார்கள். எனவே, அதிக அளவு அருந்துவதால், இறுதியில் அதே அளவு ஆல்கஹால்தான் உடலைச் சென்றடைகிறது. ஆகையால், பீரினாலும் உடலுக்கு ஏற்படும் தீங்கு சற்றும் குறைவதில்லை. பலருக்கு மதுவை முற்றிலுமாக கைவிடுவது கடினமாக இருந்தாலும், மருத்துவ அறிவியலின்படி, உடல்நலக் காரணங்களுக்காக, நீங்கள் ஒரு சிறிய 350 மில்லி பீர் கேன் மற்றும் ஒரு சிறிய 150 மில்லி ஒயின் கிளாஸுக்கு மிகாமல் அருந்தினால், அது கல்லீரலுக்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும், மேலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் நிபுணர் கருத்தின் அடிப்படையில் அமைந்தது. மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இதைக் கருத வேண்டாம். எந்தவொரு புதிய செயல் அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பும், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது தொடர்புடைய நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-is-most-expensive-tesla-car-price-specs-270384&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/c119c684a64f865f8304299c3cf966311786111525472113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!]]></title><link>https://tamil.abplive.com/health/follow-these-steps-home-remedies-for-fatty-liver-270337</link><comments>https://tamil.abplive.com/health/follow-these-steps-home-remedies-for-fatty-liver-270337#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 21:59:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/follow-these-steps-home-remedies-for-fatty-liver-270337</guid><description><![CDATA[&lt;p&gt;கல்லீரல் கொழுப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதிக்கும் பிரச்னையாக மாறி வருகிறது. இதனை தடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதைக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;Lancet Journalல் வெளியான தகவலின்படி, &amp;ldquo;உலகளவில் சுமார் 130 கோடி மக்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் யாருக்கு உருவாகும் என்பதை கணிக்க முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கல்லீரல் கொழுப்பு நோய்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோய் , அதிக டிரைகிளிசரைடுகள் உள்ளிட்ட கொழுப்பு கல்லீரல் நோய்க்கான பொதுவான காரணங்களாக பார்க்கப்படுகிறது. கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பல்வேறு வழிகள் உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;என்னென்ன செய்ய வேண்டும்?&lt;/p&gt;
&lt;p&gt;ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மீன், நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால் நிறைந்த உணவுகள் போன்ற பொதுவான பொருட்கள், கல்லீரலைச் சரிசெய்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இத்தகைய உணவுகளில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் பண்புகள் அடங்கியுள்ளன. தங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க விரும்புவோர், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சமநிலையைக் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மிதமான அளவில் காபி அருந்துவது கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கும். &amp;nbsp;இதனை தொடர்ந்து பின்பற்றினால் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்களுக்கு 35% வரை அபாயத்தைக் குறைக்க முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் மற்றும் வலிமைப் பயிற்சி ஆகியவற்றின் கலவை கல்லீரல் கொழுப்பை குறைக்கும். தங்கள் கல்லீரல் கொழுப்பைக் குறைக்க விரும்புவோர் அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்குத் தங்களின் தினசரி உடற்பயிற்சி இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான சர்க்கரைகள் மற்றும் சோடியம், கொழுப்பு எண்ணெய்கள், நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்கள், நீண்ட காலப்போக்கில் கல்லீரல் செல்களை மாற்றுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;உடல் எடை குறைப்பும் கொழுப்பு நிறைந்த கல்லீரலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஏனெனில் 5-10% எடை குறைப்பு கூட கல்லீரல் கொழுப்பின் அளவை மேம்படுத்தக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/7ccf1240ec3079128e7103d905c620e617860337439851322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/health/ors-consumption-daily-harm-your-health-doctors-adviced-here-full-more-details-269754</link><comments>https://tamil.abplive.com/health/ors-consumption-daily-harm-your-health-doctors-adviced-here-full-more-details-269754#respond</comments><pubDate>Sat, 1 Aug 2026 13:48:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/ors-consumption-daily-harm-your-health-doctors-adviced-here-full-more-details-269754</guid><description><![CDATA[&lt;p&gt;நீரிழப்பு தொடர்பான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ORS பவுடரை தினசரி எடுத்துக் கொள்ளலாமா என்பது பற்றி நாம் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ORS பவுடரின் மகிமை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல்நலக்குறைவு அல்லது வெப்ப வெளிப்பாடு காரணமாக நாம் நீரிழப்பு பிரச்னையை சந்திக்கிறோம். இதனால் உடல்சோர்வு, மயக்கம், பலமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. நீரிழப்பு தொடர்ச்சியாக உடலில் பல பிரச்னைகளும் ஏற்படும். இப்படியான நீரிழப்பை சரிசெய்ய வாய்வழி நீரேற்ற உப்புகள் பயன்பாட்டில் உள்ளது. இதற்காக உலக சுகாதார அமைப்பு ORS பவுடரை உருவாக்கியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;A Rasa Speech | &amp;quot;உஷ்ஷ்... அமைதியா உட்காரு&amp;quot;சம்பவம் செய்த ஆ.ராசா..மைக்கை OFF செய்த சபாநாயகர்&quot; src=&quot;https://www.youtube.com/embed/ybsOi5h-dNI&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடலுக்குத் தேவையான இழந்த தாதுக்கள் மற்றும் உப்புச் சத்தை மீண்டும் நாம் பெற முடியும். ஆனால் சமீபகாலமாக இந்த ORS பவுடர் அல்லது ORS ஜூஸை தினசரி பலரும் எடுத்து வருகின்றனர். இப்படி தினசரி எடுத்துக் கொள்வது உண்மையில் அவசியமானதா அல்லது பாதுகாப்பானதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு &amp;nbsp;டாக்டர் ஸ்மிருதி ஜுன்ஜுன்வாலா மற்றும் டாக்டர் அதுல் இங்காலே ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வெறும் தண்ணீரைக் குடிப்பது தீர்வாகாது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதில், &amp;nbsp;நீர், சோடியம், பொட்டாசியம், குளோரைடு மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றைக் கொண்டு ஓஆர்எஸ் பவுடர் உருவாக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;வியர்வை, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி காரணமாக உடல் இழக்கும் திரவங்களையும் எலக்ட்ரோலைட்டுகளையும் ஈடுசெய்ய இது உருவாக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;உடல் உபாதை ஏற்படும் சமயங்களில் பெரும்பாலான நேரங்களில், வெறும் தண்ணீரைக் குடிப்பது முழுமையான நீரேற்றமாக அமையாது. இதனால் ஓஆர்எஸ் ஜூஸ் குடிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இருந்தாலும் &amp;nbsp;ORS தினசரி உட்கொள்வதற்காக வடிவமைக்கப்படவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;அதிகப்படியான ORS பவுடரை நீர் கரைசல் அல்லது ஜூஸில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை நாம் கண்டிப்பாக அறிய வேண்டும். &amp;nbsp;தினமும் உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம், அல்லது உயர் இரத்த அழுத்தத்தைக்கூட உண்டாக்கலாம். ஒரே நேரத்தில் அதிகப்படியான ORS எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​அதன் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாகி, எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;யாரெல்லாம் இதை எடுக்கக்கூடாது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சிறுநீரக நோய் உள்ளவர்கள், உயர் ரத்தம் அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள். சோடியம் இல்லாத உணவு முறை பின்பற்றுபவர்கள் அதிக்கப்படியான ஓஆர்எஸ் கரைசலை எடுக்கக்கூடாது. இதில் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகப்படியான வியர்வை, தலைச்சுற்றல், வாய் வறட்சி மற்றும் சிறுநீர் கழித்தல் குறைதல் ஆகியவை இருப்பவர்கள் அளவுடன் இதனை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-prevent-water-accumulation-in-the-fridge-during-the-rainy-season-269546&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/01/02e45618800a45e719821a542f189e4b17855722439571322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்]]></title><link>https://tamil.abplive.com/health/madurai-arasu-maruthuvamanai-alatchiyam-parameswaran-uyirizhappu-uravinargal-kutrachaattu-tnn-269532</link><comments>https://tamil.abplive.com/health/madurai-arasu-maruthuvamanai-alatchiyam-parameswaran-uyirizhappu-uravinargal-kutrachaattu-tnn-269532#respond</comments><pubDate>Thu, 30 Jul 2026 14:15:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/madurai-arasu-maruthuvamanai-alatchiyam-parameswaran-uyirizhappu-uravinargal-kutrachaattu-tnn-269532</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில் பைக் விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு - சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு -&amp;nbsp; உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரிகார்டு மீது மோதி விபத்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாநகர் எல்லிஸ்நகர் ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன்(37) கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றபோது பைபாஸ் சாலை துரைச்சாமி நகர் பகுதியில் பைக் பஸ்சை முந்திசென்றபோது பேரிகார்டு மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பரமேஸ்வரனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பரமேஸ்வரனை மதுரை அரசு ராஜாஜி அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து 4 நாட்களாக அவசர சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்&amp;nbsp; கால்களில் மட்டும் கட்டுப்போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கையில் இருந்த காயத்திற்கு கூட மருந்து அளிக்காமல் உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் பரமேஸ்வரன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த இளைஞர் பரமேஸ்வரனின் குடும்பத்தினருடன் அரசு ராஜாஜி மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் காவல்துறையினர்&amp;nbsp; பேச்சுவார்த்தை நடத்தினர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதார். இதனிடையே உயிரிழந்த பரமேஸ்வரின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;காலில் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் உயிரிழப்பு&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்த போது காலில் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், தெரிவித்துள்ளனர். உடற்கூராய்விற்கு பின்பு முழுமையான தகவல் தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய பரமேஸ்வரனின் சகோதரர் ரமேஷ் மற்றும் சகோதரி கார்த்திகா : 5 நாட்களாக எந்த சிகிச்சையும் தரல, ஹார்ட்ல சோறு அடைச்சு இறந்துட்டாருனு ஒரு டாக்டர் சொல்றாரு , இன்னொரு டாக்டர் மதுவால் இறந்துட்டாரு என மாற்றி மாற்றி கூறுகின்றனர். ஸ்ட்ரெச்சர் தள்ள 200 ரூபாய், கட்டுப்போட 500 ரூபாய், கட்டுபோடுவதற்கு ஸ்கேல் வாங்க சொல்றாங்க, மருந்து, மாத்திரை எல்லாமே வாங்க சொல்றாங்க என் தம்பியோட உயிர்போறது தான் கடைசியா இருக்கட்டும், இனியாவது சரி பண்ணுங்க, என் தம்பியின் இழப்புக்கு தீர்வு கிடைக்கனும் அதுவரை உடலை வாங்கமாட்டோம், GHனு வர்றோம் ஆனா எல்லாத்துக்குமே இங்க , காசுதான்&amp;nbsp; பேசுது, மருத்துவமனையில் நாய போல எங்களை பேசுறங்க , மனுசனா மனுசனாகவே மதிக்கமாட்றாங்க சார், கேஸ் சீட்ட கூட தொலைச்சுட்டாங்க நாங்க கண்டுபிடிச்சு கொடுத்தோம் சார்&amp;nbsp; என குற்றம்சாட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/30/daee8c3da7cb287e7fdbac67e8b004961785401101612184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?]]></title><link>https://tamil.abplive.com/entertainment/ram-charan-wrist-surgery-in-coimbatore-ganga-hospital-why-not-apollo-269347</link><comments>https://tamil.abplive.com/entertainment/ram-charan-wrist-surgery-in-coimbatore-ganga-hospital-why-not-apollo-269347#respond</comments><pubDate>Tue, 28 Jul 2026 18:19:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/ram-charan-wrist-surgery-in-coimbatore-ganga-hospital-why-not-apollo-269347</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;நடிகர் ராம் சரண்&lt;span class=&quot;s1&quot;&gt;, &amp;lsquo;&lt;/span&gt;பெத்தி&lt;span class=&quot;s1&quot;&gt;&amp;rsquo; &lt;/span&gt;படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்திற்காக கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;தமிழ் நாட்டில் அப்போலோ போன்ற முன்னணி மருத்துவமனைகள் இருக்கையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் ஏன் கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையை சிகிச்சைக்காக தேர்வு செய்தார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p2&quot;&gt;பெத்தி படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;ராம் சரண் நடிப்பில் வெளியான&lt;span class=&quot;s1&quot;&gt; &amp;lsquo;&lt;/span&gt;பெத்தி&lt;span class=&quot;s1&quot;&gt;&amp;rsquo; &lt;/span&gt;திரைப்படம் ஆக்&amp;zwnj;ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ராம் சரணின் வலது மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;ராம் சரணுக்கு ஏற்பட்டது வலது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட கார்டிலேஜ் கிழிவு&lt;span class=&quot;s1&quot;&gt; (wrist cartilage tear) &lt;/span&gt;என கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதற்காகவே கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p2&quot;&gt;கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஏன்&lt;span class=&quot;s1&quot;&gt;?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;பொதுவாக சினிமா பிரபலங்கள் உடல்நல சிகிச்சைகளுக்காக சென்னை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் உள்ள முன்னணி மருத்துவமனைகளை நாடுவது வழக்கம்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;குறிப்பாக அப்போலோ போன்ற மருத்துவமனைகள் இருக்கும் நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் கோயம்புத்தூரை தேர்வு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;இதற்கு காரணம்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கங்கா மருத்துவமனை கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சைகளில் சிறப்பு பெற்ற மருத்துவ நிறுவனமாக இருப்பதுதான்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;குறிப்பிட்ட ஒரு சிகிச்சையில் அனுபவம் பெற்ற மருத்துவர்களை தேர்வு செய்வது முக்கியம் என்பதால்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் இந்த மருத்துவமனையை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;கை மற்றும் மணிக்கட்டு தொடர்பான சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் கங்கா மருத்துவமனையை அணுகி வருகின்றனர்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதன் காரணமாகவே ராம் சரணின் சிகிச்சை கோயம்புத்தூரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p2&quot;&gt;மருத்துவர் முத்துகிருஷ்ணன் கூறியது என்ன&lt;span class=&quot;s1&quot;&gt;?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;ராம் சரணின் காயம் மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &quot;&lt;/span&gt;கங்கா மருத்துவமனையைப் பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;​&lt;/span&gt;கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;எலும்பியல்&lt;span class=&quot;s1&quot;&gt; (Orthopaedics), &lt;/span&gt;அதிர்ச்சி சிகிச்சை&lt;span class=&quot;s1&quot;&gt; (Trauma), &lt;/span&gt;கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;மற்றும் மைக்ரோ சர்ஜரி&lt;span class=&quot;s1&quot;&gt; (Microsurgery) &lt;/span&gt;ஆகியவற்றிற்கான தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரத்யேக சிறப்பு மையங்களில் ஒன்றாகும்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;​&lt;/span&gt;அதனால்தான்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தனது மனைவி உபாசனாவின் குடும்பத்திற்கு அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்புகள் இருந்தபோதிலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் தனது சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இத்தகைய அறுவை சிகிச்சைகளில் கங்கா மருத்துவமனை நிகரற்ற நிபுணத்துவம் பெற்றுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;​&lt;/span&gt;எலும்பியல்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;அதிர்ச்சி சிகிச்சை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;ராஜசேகரன்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பங்களித்த உலகின் முதல்&lt;span class=&quot;s1&quot;&gt; 1% &lt;/span&gt;சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;கங்கா மருத்துவமனை மிகவும் சிக்கலான கை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைகளை அதிக அளவில் கையாண்டு&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;உலகத்தரம் வாய்ந்த முடிவுகளைத் தருகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;.&amp;rdquo; &lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/28/2cf405c07825d3b58612bea411d2d81717852428876801270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!]]></title><link>https://tamil.abplive.com/health/air-conditioned-office-workers-urination-problems-treatment-269139</link><comments>https://tamil.abplive.com/health/air-conditioned-office-workers-urination-problems-treatment-269139#respond</comments><pubDate>Mon, 27 Jul 2026 10:02:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/air-conditioned-office-workers-urination-problems-treatment-269139</guid><description><![CDATA[&lt;p&gt;நம் உடல் என்பது பல்வேறு உறுப்புகளின் சங்கமமாக உள்ளது. இவை அனைத்து ஆரோக்கியமாக ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் பிரச்னை என்றால் ஒட்டுமொத்த உடலும் கோளாறாகி விடும். இப்படியான உடலில் சேரும் கழிவுகள் வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை வயது வித்தியாசமில்லாமல் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அலுவலகங்களில் ஏசியில் வேலை பார்ப்போர் நிலைமை இன்னும் மோசமாகி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Kayalvizhi Alagiri | வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!&quot; src=&quot;https://www.youtube.com/embed/l6eGQHR0H1U&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஏசி போன்ற குளிர்கால நிலை கொண்ட இடங்களில் அமர்ந்தால் அடிக்கடி சிறுநீர் வருமே என்ற கேள்வி பலருக்கும் வரலாம். அதுதான் கிடையாது. சிறுநீர் கழிக்கும்போது அசௌகரியம், எரிச்சல் அல்லது வலியை உணரும் ஒரு நிலையை நாம் உணர்கிறோம். இது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதற்கான தீர்வு என்ன என்பதைக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;பிரச்னைக்கான காரணம்&lt;/h2&gt;
&lt;p&gt;உடலில் நீர்ச்சத்து குறைபாடு தான் இத்தகைய பிரச்னைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. காரணம் ஏசி அறையில் இருப்பதால் தாகம் எடுப்பதே கிடையாது. வலுக்கட்டாயமாக தண்ணீர் குடிப்பவர்களும் குறைவு. இதன் காரணம் சிறுநீர் போதிய அளவு வராமல் போகிறது. ஆனால் அடிவயிற்றி சிறுநீர் வருவது போல உணர்வு மட்டும் உண்டாகும். அதேசமயம் சிறுநீர் கழிப்பதில் தாமதம், கழிக்கும்போது அசௌகரியம், எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வுகள் உண்டாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Also Read: &lt;a title=&quot;மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?&quot; href=&quot;https://tamil.abplive.com/lifestyle/how-to-resolve-gum-problems-and-bad-breath-during-the-monsoon-268529&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இது சிறுநீர் தொற்று ஏற்படவும் வழி வகுக்கலாம். சிறுநீர் கழித்து முடித்த பிறகு ஏற்படும் எரிச்சல் சிறுநீர் பாதையில் அழற்சியின் அறிகுறியாக இருக்கும். நீங்கள் எப்போது சிறுநீர் கழித்தாலும் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். தாமதமாக கழிப்பதால் ஏற்படும் உணர்வு என நினைக்கலாம். கடுமையான துர்நாற்றம் வீசலாம். இது நோய்த்தொற்றின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் ஏசியில் இருப்பதால் நம் தோலில் உள்ள ஈரப்பதம் மற்றும் வியர்வை ஆகியவை விரைவாக ஆவியாகி விடும். போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பாக்டீரியாக்கள் பெருகி தொற்று ஏற்படும் சூழல் உண்டாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;தீர்வு தான் என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் குறைந்தப்பட்சம் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையாவது தண்ணீர் குடியுங்கள். வெதுவெதுப்பான நீர் என்றால் இன்னும் சிறப்பானது. ஏசி அறையிலேயே இருப்பதால் அடிக்கடி டீ அல்லது காபி குடிப்பது, காரமான உணவுகள் உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உடலை வறட்சியாக்குவதோடு, நம்மை சோர்வில் தள்ளும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பல மணி நேரமாக சிறுநீர் வரவில்லை &amp;nbsp;என்ற பிரச்னை ஒருநாள் இருந்தால் பரவாயில்லை. தொடர்ச்சியாக தண்ணீர் குடித்த பிறகும் வரவில்லை என்றால் அல்லது சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமானதாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/these-clothes-that-should-not-be-washed-in-a-washing-machine-268844&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/27/41411969cfc702632cde0d9323e0275017851266150331322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !]]></title><link>https://tamil.abplive.com/health/prema-kanduvatti-psychological-intimidation-humiliation-selfconfidence-chronic-suicide-tnn-269084</link><comments>https://tamil.abplive.com/health/prema-kanduvatti-psychological-intimidation-humiliation-selfconfidence-chronic-suicide-tnn-269084#respond</comments><pubDate>Sun, 26 Jul 2026 17:42:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/prema-kanduvatti-psychological-intimidation-humiliation-selfconfidence-chronic-suicide-tnn-269084</guid><description><![CDATA[&lt;p&gt;&quot;கடைசியா நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன், கடன், வட்டி, மிரட்டல்னு மனசு தாங்க முடியாம இருக்குறவங்க, தயவுசெஞ்சு தனியா அந்த முடிவை எடுக்காதீங்க.&quot; - மனநல ஆலோசகர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தற்கொலை சம்பவம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த மகளின் திருமணச் செலவிற்காக, பிரேமா சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும், திருப்பதி, பகவதி, அங்கம்மாள் மற்றும் &amp;nbsp;ஆகியோரின் பெயரிலும் கூடுதல் கடன் வாங்கி கொடுத்துவிட்டு அதற்கு கூடுதல் வட்டி கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டி தொகையை உடனடியாக தராவிட்டால் ஆடையை கலைந்துவிட்டுவிடுவேன், உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலை இதனால் &amp;nbsp;மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மனநல ஆலோசகர் ப.ராஜ செளந்தர பாண்டியன் நம்மிடம் தெரிவித்தது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மனநல ஆலோசகர் கருத்து&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&quot;இந்த சம்பவத்த பத்தி கேள்விப்பட்டதும், முதல்ல என் மனசுல தோணுன விஷயம் என்னன்னா, இது ஒரு தனி பெண்ணோட பிரச்னை இல்ல. இது நம்ம சமூகத்துல அமைதியா நடந்துகிட்டே இருக்குற ஒரு பெரிய பிரச்னையோட ஒரு முகம். பாருங்க, பிரேமா தன் மகளோட திருமணத்துக்காக கடன் வாங்குனாங்க. ஒரு தாய், தன் பொண்ணோட கல்யாணத்துக்கு எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணணும்னு நினைக்குறது, இது எல்லா குடும்பத்திலயும் நடக்குற சகஜமான விஷயம்தான். அதுல எந்த தப்பும் இல்ல. ஆனா என்ன நடந்துச்சுன்னா, 2 லட்சம் கடன், 1.50 லட்சம் வட்டியா கட்டியும் அசல் தீரல. அப்புறமும் வட்டி தொடர்ந்து ஏறிக்கிட்டே இருந்துச்சு. இதுதான் கந்துவட்டி சிஸ்டமின் ரொம்ப ஆபத்தான பகுதி, எவ்ளோ கட்டினாலும் முடிவே இல்லாம போக செய்யுறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இதுல உளவியல் ரீதியா நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தொடர்ந்து ஒரு நாள் இல்ல, மாசக்கணக்கா, ஒவ்வொரு நாளும் கடன் மிரட்டல், அவமானம்ன்னு அழுத்தம் வந்துகிட்டே இருந்தா, அந்த நபரோட மனசு ஓய்வே இல்லாம தொடர்ந்து பயத்துல, டென்ஷன்ல இருக்கும். இதைத்தான் நாம 'Chronic Stress' அப்படின்னு சொல்றோம். அதாவது நீண்ட நாள் தொடர்ந்த மன அழுத்தம். இது மெதுவா அந்த நபரோட தன்னம்பிக்கையையும், தாங்கிக்கிற சக்தியையும் குறைச்சிடும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திடீர்னு எடுத்த முடிவு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நாம பொதுவா தற்கொலை பத்தி பேசும்போது 'திடீர்னு எடுத்த முடிவு' அப்படின்னு நினைச்சுக்குவோம். ஆனா உண்மையில, இது மாசக்கணக்கா சேர்ந்த அழுத்தம். அதுக்கு மேல 'சேலையை உருவி அடிப்பேன்' மாதிரி ஒரு பொது அவமான மிரட்டல் வந்தப்போ, அதுவே கடைசி தூண்டுதலா வேலை செஞ்சிடுச்சு. அந்த நிமிஷத்துல அந்த நபருக்கு 'இனி வேற வழியே இல்ல' அப்படின்னு தோணிடும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அது வாழ்க்கையையே மாத்தலாம்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கடைசியா நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன், கடன், வட்டி, மிரட்டல்னு மனசு தாங்க முடியாம இருக்குறவங்க, தயவுசெஞ்சு தனியா அந்த முடிவை எடுக்காதீங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட பேசுங்க, Helpline-க்கு கூப்பிடுங்க, Legal Aid உதவி எடுங்க. ஒரு பேச்சு, ஒரு உதவி கை, அது வாழ்க்கையையே மாத்தலாம்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/26/b406d36df038aeaa09e6cb87303711d31785067813195184_original.jpeg" width="220"/></item></channel></rss>