<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..</title><atom:link href="https://tamil.abplive.com/health/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 17:51:15 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....]]></title><link>https://tamil.abplive.com/health/american-scientists-texas-university-researchers-neusleep-patch-deep-sleep-insomnia-ultrasound-rem-sleep-268537</link><comments>https://tamil.abplive.com/health/american-scientists-texas-university-researchers-neusleep-patch-deep-sleep-insomnia-ultrasound-rem-sleep-268537#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 10:54:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/american-scientists-texas-university-researchers-neusleep-patch-deep-sleep-insomnia-ultrasound-rem-sleep-268537</guid><description><![CDATA[&lt;p&gt;உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வரும் தூக்கமின்மை (Insomnia) பிரச்சினைக்குப் புதிய மாற்றாக, மாத்திரைகள் ஏதுமின்றி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் புதுமையான தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்&lt;/p&gt;
&lt;h2&gt;நெற்றியில் &amp;lsquo;பேட்ச்&amp;rsquo; ஒட்டினால் ஆழ்ந்த தூக்கம் வரும்: அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!&lt;/h2&gt;
&lt;p&gt;உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். தூக்கம் வராதவர்கள் அதற்காக மாத்திரைகளை உட்கொள்வது உடலுக்குப் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், மாத்திரைகளே இல்லாமல் நெற்றியில் ஒரு சிறிய &amp;lsquo;பேட்ச்&amp;rsquo; ஒட்டுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம் என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;lsquo;நியூ ஸ்லீப்&amp;rsquo; சாதனம்&lt;/h2&gt;
&lt;p&gt;அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் &amp;lsquo;நியூ ஸ்லீப்&amp;rsquo; (NeuSleep) என்ற மென்மையான சாதனத்தை (பேட்ச்) உருவாக்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இரவில் தூங்கச் செல்லும்போது இந்த பேட்சை நெற்றியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அதில் இருந்து வெளிப்படும் மிக மென்மையான அல்ட்ராசவுண்ட் (Ultrasound) அலைகள், மூளையைத் தூண்டி விரைவாக ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;lsquo;ரெம்&amp;rsquo; தூக்கம் என்றால் என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;நாம் தூங்கும்போது மூளை பல கட்டங்களைக் கடக்கிறது. அதில் &amp;lsquo;ரெம் தூக்கம்&amp;rsquo; (REM Sleep) என்பது மிகவும் முக்கியமான கட்டமாகும். இந்த நிலையின் போதுதான் மனிதர்களுக்குக் கனவுகள் அதிகம் வருகின்றன. மூளை தனது நினைவுகளை முறைப்படுத்தவும், மன அழுத்தத்தில் இருந்து மீளவும் இந்த தூக்கம் மிகவும் அவசியமானது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;lsquo;ரெம்&amp;rsquo; தூக்கம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் மறதி, கடுமையான சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;43 நிமிடங்கள் முன்னதாக தூக்கம்!&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த புதிய பேட்ச் சாதனம் குறித்து 28 பேரிடம் முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில், நெற்றியில் பேட்ச் ஒட்டியவர்கள் வழக்கத்தை விட சராசரியாக 43 நிமிடங்கள் முன்னதாகவே ஆழ்ந்த &amp;lsquo;ரெம்&amp;rsquo; தூக்க நிலையை அடைந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் &amp;lsquo;ரெம்&amp;rsquo; தூக்கத்தில் இருக்கும் நேரம் சராசரியாக 16 நிமிடங்கள் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மருத்துவர் கருத்து&lt;/h2&gt;
&lt;p&gt;இதுகுறித்து மனநல மருத்துவர் புவனேஸ்வரன் கூறுகையில், &amp;ldquo;தேர்வு பயம், பணிச்சுமை, இரவு ஷிப்ட் வேலை காரணங்களால் தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு இது சிறந்த துணைச் சிகிச்சையாக அமையும். தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைக்க இது உதவும். ஆனால், நீண்டகால அடிப்படையில் மாத்திரைகளை முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்பதை அடுத்த கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே உறுதியாகக் கூற முடியும்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தூக்கமின்மைக்கு புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், அன்றாட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைச் செய்து இயற்கையாக தூங்குவதே உடலுக்கு மிகவும் நல்லது என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/56b79cd9b2ed82bebffa4203c1038f381784697841783194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!]]></title><link>https://tamil.abplive.com/health/how-to-know-the-body-health-symptoms-by-your-sweat-know-more-details-in-tamil-268249</link><comments>https://tamil.abplive.com/health/how-to-know-the-body-health-symptoms-by-your-sweat-know-more-details-in-tamil-268249#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 12:30:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/how-to-know-the-body-health-symptoms-by-your-sweat-know-more-details-in-tamil-268249</guid><description><![CDATA[&lt;p&gt;காலம் மாறி வரும் நிலையில் இன்று நம்மில் பலருக்கும் ஏசி ரூமில் அமர்ந்து வேலை செய்வதால் வியர்வை என்ற ஒன்றே இல்லை. ஒரு காலத்தில் நம் உடல் நன்றாக வேலை செய்கிறது என்பதை வியர்வை மூலம் அறிந்து மகிழ்வோம். இன்று அதே வியர்வை ஒவ்வாமையாக மாறி விட்டது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், அதைச் சமநிலையில் வைக்க தோல் வழியாக இயற்கையாக வெளியேறுவதே வியர்வையாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இது ஆவியாகும்போது உடலானது குளிர்வடைகிறது. இத்தகைய வியர்வையை தூண்ட அதிக வெப்பநிலை, கடுமையான வேலை, உடற்பயிற்சி, பயம், பதற்றம் என பல காரணிகள் இருக்கும். அதேசமயம் வியர்வை சிலருக்கு அதிகமாக வரும். சிலருக்கு வரவே வராது. பலருக்கு குறைவாக வரும். தோலில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையை சிதைக்கும்போது துர்நாற்றம் உருவாகிறது. இத்தகைய வியர்வை உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?... வியர்வை எப்போது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;DMK MLA Markandeyan Arrest | CM &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்கு மிரட்டல் திமுக MLA அதிரடி கைது கனிமொழி கடும் கண்டனம் | TVK&quot; src=&quot;https://www.youtube.com/embed/xJJrPNZsl-0&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;வியர்வை சொல்லும் சேதி என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;ஒரு மனித உடலில் சுமார் இரண்டு முதல் நான்கு மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் இருக்கிறது. இவை உடலின் வெப்பநிலையை சமப்படுத்துகிறது. உங்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதை உணரும்போது மூளை வியர்வையை வெளியிட சுரம்பிகளுக்குச் செய்தி அனுப்புகிறது. எனவே எப்போது வியர்த்தாலும் அதனை நல்ல விஷயமாகவே பார்க்கப் பழகுங்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வியர்வையானது தோலுக்குக் கீழே உள்ள சுரப்பிகளில் உருவாகி நுண்ணிய குழாய்கள் வழியாகப் பயணிக்கிறது. இதன்பின்னர் மேற்பரப்பை அடைந்து காற்றில் ஆவியாகிறது. இந்த இயற்கையான செயல்முறை குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதும் அல்லது வெப்பமான காலநிலையிலும் சீரான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இது 99 சதவிகிதம் நீரால் ஆனது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மீதமுள்ள 1% உப்புகள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், யூரியா மற்றும் பிற நுண் சேர்மங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வியர்ப்பது மாறுபடும். &amp;nbsp;மரபியல், உடல் அளவு, ஹார்மோன்கள், மருந்துகள், மன அழுத்தம், பதட்டம் என பல வகை காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. வியர்வைக்கு கிட்டத்தட்ட மணம் இருப்பதில்லை என்ற சூழலில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையில் உள்ள புரதங்களையும் கொழுப்புகளையும் சிதைக்கும்போது துர்நாற்றம் உண்டாகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Also Read: &lt;a title=&quot;வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?&quot; href=&quot;https://tamil.abplive.com/lifestyle/heat-wave-alert-physical-and-mental-effects-of-intense-summer-heat-261212&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?&quot;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சில உணவுகள் மற்றும் மருந்துகளும் இந்த துர்நாற்றத்தை உடலில் உண்டாக்கக்கூடும். உடலைக் குளிர்விக்க வியர்ப்பது அவசியம் என்ற நிலையில் அது வரவே இல்லை என்றால் மிகவும் ஆபத்தானது. இது உடல் வெப்பநிலையைச் சீராக்குவதைக் கடினமாக்கி, வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.உடல் வெப்பநிலை 40&amp;deg;C-க்கு மேல் உயரும்போது தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். இது மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;சில நேரங்களில் நம் சட்டைகளின் காலர் பகுதிகளில் மஞ்சள் நிற கறை இருப்பதைக் காணலாம். இது அலுமினியச் சேர்மங்களுடன் வியர்வை வினைபுரியும்போது &amp;nbsp;இத்தகைய கறைகள் உருவாகின்றன. சில துணிகளில் வெள்ளை கறைகள் உருவாகும். இது வியர்வை ஆவியான பிறகு இருக்கும் காய்ந்த உப்பினால் உண்டாகிறது. வியர்வையை முழுமையாகத் தடுப்பது ஆபத்தான ஒன்றாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/tips-for-how-to-easily-clean-white-shoes-268048&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/c8473c91df40eae0ba3b406adb7d66f717845306322411322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்]]></title><link>https://tamil.abplive.com/health/heart-surgeon-shares-5-simple-habits-that-could-help-prevent-a-heart-attack-in-60-seconds-details-in-tamil-267999</link><comments>https://tamil.abplive.com/health/heart-surgeon-shares-5-simple-habits-that-could-help-prevent-a-heart-attack-in-60-seconds-details-in-tamil-267999#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 13:39:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/heart-surgeon-shares-5-simple-habits-that-could-help-prevent-a-heart-attack-in-60-seconds-details-in-tamil-267999</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Preventing Heart Attack:&lt;/strong&gt; மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும், நீண்டகால இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடிய ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உயிரை பறிக்கும் மாரடைப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆபத்தான அவசரநிலை ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சில முக்கியமான காரணிகளை கண்டறிந்து சரிசெய்ய முடிந்தாலும், மாரடைப்புகள் அடிக்கடி திடீரென நிகழ்கின்றன. எனவே மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டிய 5 முக்கிய வழிகள் சிலவற்றை பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.&amp;nbsp; மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திக்க முடிந்தால், இந்த நடைமுறைகளுக்குத்தான் அவர்கள் முன்னுரிமை அளிக்க முடியும். பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட இருதய நோய்கள் தொடர்பான ஆய்வுகள், புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிகரித்த கொலஸ்ட்ரால், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் ஆகிய அனைத்தும் இதய நோயின் அபாயத்தைப் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/easy-ways-to-get-rid-of-ants-at-home-naturally-tips-details-in-pics-267987&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாரடைப்பை தடுக்க ஆலோசனைகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;1. புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: &lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒவ்வொரு சிகரெட்டும் இதயத்தைச் சேதப்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான நடவடிக்கை, &quot;புகை பிடிக்காதீர்கள்&quot; என்பதுதான் மருத்துவர்களின் பிரதான ஆலோசனை. புகைப்பிடித்தல் ரத்த நாளங்களை அழித்து, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து, தமனிகளுக்குள் கொழுப்புப் படிவுகள் சேர்வதை வேகப்படுத்துவதால், அது மாரடைப்புக்கான மிகப்பெரிய ஆபத்துக் காரணிகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது&amp;nbsp; &amp;nbsp;புகைப்பிடிப்பதை நிறுத்திய சிறிது நேரத்திலேயே உடல் தன்னைத்தானே குணப்படுத்தத் தொடங்குவதாகவும், காலப்போக்கில் இதயமும் இரத்த ஓட்டமும் சீராக மேம்படுவதாகவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/SsbXc0FqeN4?si=wUo23eLxXYadZ-aD&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;2. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;நீண்ட கால இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மக்கள் தங்களது ரத்த அழுத்தத்தைக் கவனத்தில் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் உருவாகி, படிப்படியாக தமனிகளை அழித்து, இதயத்தைக் கடினமாக உழைக்க வைப்பதால், இதனை 'அமைதியான கொலையாளி' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;3. கொலஸ்ட்ராலை கவனியுங்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;கொலஸ்ட்ரால் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.&amp;nbsp; இதன் அளவுகளை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சில சமயங்களில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' என்று அழைக்கப்படும் அதிகப்படியான குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன் (LDL), தமனிகளின் உள்ளே அடைப்புகளை ஏற்படுத்தி, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/chennai/chennai-bengaluru-bullet-train-corridor-enters-pre-construction-phase-centre-floats-tenders-for-306-km-length-73-minutes-travel-267990&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின்படி, உடல் பருமன், நீரிழிவு நோய் அல்லது குடும்பத்தில் இதய நோய் வரலாறு போன்ற ஆபத்துக் காரணிகளைக் கொண்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானதாகும்.&amp;nbsp; ஏனெனில் அதிக கொலஸ்ட்ரால் பொதுவாக எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆரோக்கியமான உணவு, அடிக்கடி உடற்பயிற்சி செய்தல் மற்றும் தேவைப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள் மூலம் இதய நோய்க்கான அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;4. நீரிழிவு நோய்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;உடலின் செல்கள் இன்சுலினுக்குக் குறைந்த உணர்திறன் கொண்டதாக மாறி, ரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தும் ஒரு கோளாறான இன்சுலின் எதிர்ப்பைத் தடுப்பது அவசியமாகிறது. சிகிச்சை பெறாவிட்டால், இன்சுலின் எதிர்ப்பு, இருதய நோய்க்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியான வகை 2 நீரிழிவு நோயாக உருவாகக்கூடும். அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் உணவைச் சீரமைப்பது ஆகியவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;5. தனிமையின் தாக்கம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தனிமையைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாம். ஆழமான சமூக உறவுகளைப் பேணுவது பொது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.&amp;nbsp; உணர்ச்சி நலனையும் உடல் நலனையும் பிரிக்கக்கூடாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க இதய சங்கம் வெளியிட்ட ஆய்வின்படி, நாள்பட்ட தனிமையும் சமூகத் தனிமைப்படுத்தலும் இருதய நோய், மனச்சோர்வு மற்றும் அகால மரணம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/4927bd88c9b1b196b4ac570fcbc23c771784362128039732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-govt-ban-color-appalams-due-to-health-risk-warnings-for-child-know-more-details-in-tamil-267728</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-govt-ban-color-appalams-due-to-health-risk-warnings-for-child-know-more-details-in-tamil-267728#respond</comments><pubDate>Thu, 16 Jul 2026 12:42:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-govt-ban-color-appalams-due-to-health-risk-warnings-for-child-know-more-details-in-tamil-267728</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TN Govt:&lt;/strong&gt; அதிக நிற முட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கலர் அப்பலங்களுக்கு தடை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதிக நிற முட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கண்ணை கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/which-apps-on-your-phone-steal-the-most-data-details-in-pics-267723&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குழந்தைகளுக்கு எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும் என உணவு பாதுகாப்பு ஆலோசனை வழங்கியுள்ளது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு,&amp;nbsp; நிற மூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/cm-vijay-orders-ias-officers-transfer-reason-behind-umanath-supriya-sahu-radhakrishnan-changes-dmk-supporters-tn-politics-267699&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்:CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தொடரும் தடை உத்தரவுகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சில உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. அந்த வகையில்,&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;உணவு நச்சுத்தன்மை (Food poisoning) ஆபத்து காரணமாக, பச்சைக் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;வண்ணங்கள் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் உற்பத்திக்கு தடை&lt;/li&gt;
&lt;li&gt;அச்சு மையில் உள்ள ரசாயனங்கள் கலப்படம் ஆவதைத் தடுக்க, சூடான வடை, பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பண்டங்களைச் செய்தித்தாள்களில் (Newspapers) மடித்துக் கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை அல்லது நிக்கோடின் கலந்த மெல்லும் உணவுப் பொருட்களுக்கும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;இவற்றின் தொடர்ச்சியாக தற்போது வண்ண அப்பளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/16/597c2e85db054ae706917ebe223c4bf01784185887207732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/health/anemia-women-iron-deficiency-hemoglobin-adolescent-girls-farook-abdullah-awareness-prevention-267631</link><comments>https://tamil.abplive.com/health/anemia-women-iron-deficiency-hemoglobin-adolescent-girls-farook-abdullah-awareness-prevention-267631#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 15:48:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/anemia-women-iron-deficiency-hemoglobin-adolescent-girls-farook-abdullah-awareness-prevention-267631</guid><description><![CDATA[&lt;p&gt;பெண்களுக்கு குறிப்பாக பதின்ம வயதில் இருக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;கிளினிக்கில் சமீபத்தில் பதின்ம வயது சகோதரி ஒருவருக்கு தலைசுற்றல், உடல் அசதி, எப்பொழுதும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தன. இதயத் துடிப்பு நிமிடத்திற்கு நூற்றிருபது முறை என்று இருந்தது, நாக்கு வெள்ளைத் தாள் போல வெளீரென்று இருந்தது. ரத்த சோகையின் அளவறிய பரிசோதனைக்கு அனுப்பினேன்.&lt;/p&gt;
&lt;p&gt;ஹீமோகுளோபின் ( இரும்புச்சத்துடன் இணைந்த புரதம்) வெறும் 3 கிராம் என்றிருந்தது. ரத்த சிகப்பணுக்களை உடனடியாக ஏற்றுவதற்காக பரிந்துரை கொடுத்து அனுப்பி இருக்கிறேன். இது தீவிர ரத்த சோகை நிலையாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்டிருக்கு 12 முதல் 14 கிராம் என்பதே சரியான அளவு. ஆனால் இந்திய சராசரி 10 கிராம் என்ற அளவிலேயே இருக்கிறது. பணம் படைத்தோர், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பேதமின்றி பெண்களிடம் ரத்த சோகை வியாபித்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்த சரியான விழிப்புணர்வு நம்மிடம் இன்னும் வளர வேண்டும். ஹீமோகுளோபின் எனும் புரதம் ரத்தத்தில் படகு போல செயல்பட்டு தன்னகத்தே ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு உடல் முழுவதும் குறிப்பாக மூளைக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியை செய்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஹீமோகுளோபின் அளவு பெரும்பாலும் குறைவதற்கு முக்கிய காரணம் இரும்புச் சத்து குறைபாடாகும். பெண்களுக்கு குறிப்பாக பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் மூலம் இரும்புச் சத்து வெளியேறிக் கொண்டே இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னைகளுக்கும் இரும்புச்சத்து தேவை சராசரி நாட்களை விட மிக அதிகம். இதை உணவு மூலம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் பெரும்பான்மை மக்கள் உணவில் இரும்புச்சத்து கிடைக்கும் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பதில்லை.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஹீமோகுளோபினை பெறுவது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கால்நடைகளின் ஈரல் / செவரொட்டி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இத்துடன் மாமிசம் / மீன் / முட்டை / கீரை / ஆரஞ்சு / எலுமிச்சை / கொய்யா பழம் போன்றவற்றை உண்ண வேண்டும். முருங்கைக்கீரை , சுண்டக்காய்&amp;nbsp;போன்றவற்றில் இரும்புச் சத்து உண்டு.&lt;/p&gt;
&lt;p&gt;பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உண்டென்பது மருத்துவ மூட நம்பிக்கையாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஹீமோகுளோபின் 10-க்கு குறைந்தால் அதை ஈடு செய்ய மருத்துவர் அறிவுரையின் பேரில் இரும்புச் சத்து சப்ளிமெண்ட் உட்கொள்வது நல்லது.&lt;/p&gt;
&lt;p&gt;ரத்த சோகை இருப்பவர்களுக்கு குடலில் புழு இருக்கக் கூடும். எனவே குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள வேண்டும். குடற்புழுக்கள் பாதம் வழி ஊடுருவி குடலுக்கு சென்று வாழும் என்பதால் வெறும் கால்களுடன் நடத்தல் கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;ஆறு மாதத்திற்கு ஒருமுறையேனும்&amp;nbsp; ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்களுக்கு ஏற்படும் &quot;ரத்த சோகை&quot; குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் குறிப்பாக பதின்ம வயதில் இருக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்&amp;rsquo;&amp;rsquo; என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/mercedes-benz-gls-450d-features-full-review-267576&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/932ddb4476428de1d7b3dc8fc8bb2fbd1784110690917332_original.png" width="220"/></item><item><title><![CDATA[Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/sitting-continuously-for-more-than-half-an-hour-increases-risk-of-cancer-new-research-is-causing-concern-life-style-news-267173</link><comments>https://tamil.abplive.com/lifestyle/sitting-continuously-for-more-than-half-an-hour-increases-risk-of-cancer-new-research-is-causing-concern-life-style-news-267173#respond</comments><pubDate>Sun, 12 Jul 2026 12:25:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/sitting-continuously-for-more-than-half-an-hour-increases-risk-of-cancer-new-research-is-causing-concern-life-style-news-267173</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Cancer Risk:&lt;/strong&gt; புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் தொடர்பான புதிய மருத்துவ ஆய்வறிக்கையின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;புற்றுநோய் அபாயம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அலுவலகத்தில் கணினிக்கு முன்னால் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, வீட்டிலிருந்து வேலை செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது கைபேசிகளில் நேரத்தைச் செலவிடுவது போன்றவை மக்களின் அன்றாட பழக்கங்களாகிவிட்டன. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​ஒரு புதிய ஆய்வின்படி, 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் எழாமல் உட்கார்ந்திருப்பது புற்றுநோயால் இறக்கும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/why-do-many-planes-skip-seat-13-know-details-in-pics-267169&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;12 ஆண்டுகளாக உடல்நலக் கண்காணிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு, PLOS மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, UK பயோபேங்கில் பதிவுசெய்த 91,000-க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்தது. குறிப்பாக, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் உடற்பயிற்சி செய்த நேரம் உட்பட, அவர்களின் உண்மையான உடல் செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக, ஒரு வாரம் அணிவதற்கு மணிக்கட்டு டிராக்கர்களும் வழங்கப்பட்டன. பின்னர், சுமார் 12 ஆண்டுகளுக்கு அவர்களின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GTRItW1jyqw?si=O4_WPceLXG73pl-n&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;யாருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நாள் முழுவதும் தொடர்ந்து 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் அமர்ந்திருப்பவர்களுக்குப் புற்றுநோயால் இறக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் இந்த அபாயம் சுமார் 9 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. சுவாரஸ்யமாக, நாள் முழுவதும் அமர்ந்திருக்கும் மொத்த நேரத்தை விட, எழாமல் அமர்ந்திருக்கும் நேரமே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த ஆய்வில் சில நல்ல செய்திகளும் உள்ளன. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, இடையில் இலகுவான செயல்களைச் செய்வது ஆபத்தைக் குறைக்கும். ஆய்வின்படி, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஒரு சிறிய நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் அல்லது நடமாடுவது போன்ற இலகுவான உடல் செயல்பாடுகளைச் செய்வது, புற்றுநோய் இறப்பு அபாயத்தை சுமார் 12 சதவிகிதம் குறைக்கும். அதே நேரத்தில், சுமார் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது போன்ற செயல்பாடுகள் இந்த அபாயத்தை சுமார் 8 சதவிகிதம் குறைக்கும். மேலும், வெறும் 5 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்வது கூட, புற்றுநோய் இறப்பு அபாயத்தை 22 சதவிகிதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?&quot; href=&quot;https://tamil.abplive.com/education/first-in-5-years-tamil-nadus-mbbs-seats-up-by-100-awaiting-approval-for-an-additional-50-seats-to-tiruvallur-govt-medical-college-267161&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறை மூத்த விரிவுரையாளரான டாக்டர் ஃபிரடெரிக் ஹோ இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கினார். மக்கள் வழக்கமான உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல், தங்கள் உட்காரும் பழக்கங்களை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஒருவரால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் எழுந்து சில நிமிடங்கள் நடப்பது அல்லது இலகுவான செயல்களில் ஈடுபடுவது நன்மை பயக்கும் என்கிறார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது தசை செயல்பாட்டைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது ரத்த சர்க்கரை சமநிலையைக் குலைக்கிறது, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது, மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை வேகப்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆய்வு ஒரு தொடர்பை மட்டுமே காட்டுகிறது என்றும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது நேரடியாக புற்றுநோய் இறப்புகளுக்குக் காரணம் என்பதை இது நிரூபிக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; இந்தத் தகவல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் நிபுணர் கருத்தின் அடிப்படையில் அமைந்தது. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. எந்தவொரு புதிய செயலையும் தொடங்குவதற்கு முன், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.&lt;/em&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/f30300eee586e36aab08684b56681f891783839128752732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!]]></title><link>https://tamil.abplive.com/health/ramanathapuram-kavitha-medical-negligence-family-planning-surgery-compensation-tnn-266866</link><comments>https://tamil.abplive.com/health/ramanathapuram-kavitha-medical-negligence-family-planning-surgery-compensation-tnn-266866#respond</comments><pubDate>Thu, 9 Jul 2026 18:34:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/ramanathapuram-kavitha-medical-negligence-family-planning-surgery-compensation-tnn-266866</guid><description><![CDATA[&lt;p&gt;மனுதாரரின் புகார் குறித்து தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி சட்ட படி&amp;nbsp; நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பள்ளி ஆசிரியை கவிதாவின் மனு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ராமநாதபுரத்தைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதால் கடந்த 2011 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இந்த அறுவை சிகிச்சையை அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதுரம் அரவிந்தராஜ் மேற்கொண்டார். அறிவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய நாளிலிருந்து அடி வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பில் நோய் தொற்று தொடர்ந்து ஏற்பட்டது இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். இந்நிலையில் டிசம்பர் 2025 ஆம் ஆண்டு அதிக அளவில் கட்டிகள் வந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது நரம்பு மற்றும் நூல்களை உள்ளே வைத்து தைத்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து நூல் மற்றும் நரம்புகள் அகற்றப்பட்டது. தற்போது நோய் தொற்றுகள் நீங்குள்ளது. உச்ச நீதிமன்றம் இதுபோன்று அறுவை சிகிச்சையின்&amp;nbsp; மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது, மருத்துவ கவன குறைபாடு கடுமை குற்றமாகும் என தெரிவித்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய&amp;nbsp; இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அப்பொழுது தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் கோரிக்கை மனு கடந்த மாதம் கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில்&amp;nbsp; கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது முதல் கட்ட விசாரணை&amp;nbsp; நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வகுமார் மருத்துவர்களின் இந்த கவனக்குறைவால் மனுதாரர் ஆசிரியர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் தனது இயல்பான வாழ்க்கையை கடந்த 15 வருடங்களாக இழந்து உள்ளார். எனவே, உரிய இழப்பீடும் நடவடிக்கையும் வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி குடும்ப நல மருத்துவ துறை உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவ கவன குறைபாடு ஏற்பட்டு இருந்தால் மருத்துவர்கள் மீது&amp;nbsp; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் இந்த விவாகரத்தில் மனுதாரர் தனக்கு தேவையான இழப்பீட்டை&amp;nbsp; நுகர்வோர்நீதிமன்றத்தை அல்லது உரிய துறையை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!]]></title><link>https://tamil.abplive.com/health/locked-car-deaths-carbon-dioxide-poisoning-expert-farook-abdullah-266591</link><comments>https://tamil.abplive.com/health/locked-car-deaths-carbon-dioxide-poisoning-expert-farook-abdullah-266591#respond</comments><pubDate>Tue, 7 Jul 2026 17:34:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/locked-car-deaths-carbon-dioxide-poisoning-expert-farook-abdullah-266591</guid><description><![CDATA[&lt;p&gt;சமீப காலமாக பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்துள்ளார். இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதுகுறித்து பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;தற்போதையை காலத்தில் மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்&lt;/p&gt;
&lt;p&gt;பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வந்தால் ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து என்பதை பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி உள்ளேயே அடைபட்டு போய் அதிகமாக மரணிக்கின்றனர். அரிதாக பெரியவர்களும் குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு சராசரி மனிதனுக்கு தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள் மூடப்பட்ட காருக்குள் நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம். பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது.&amp;nbsp;காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. அப்படியென்றால் காருக்குள் இருக்கும் சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில், 735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம் அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பூட்டப்பட்ட கார்களுக்குள் எப்படி மரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்? இதற்குக் காரணம் நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும்போது ஆக்சிஜனை வைத்துக் கொண்டு &amp;nbsp;சுவாசத்தை வெளிவிடும்போது கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்துவிடும். ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிக் கொண்டே செல்லும். இதுதான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.&amp;nbsp;சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும்போது 1&amp;frac12; நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு - 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5 நிமிடங்களில் - 2500 பிபிஎம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;(2000 பிபிஎம் தாண்டினாலே மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22 நிமிடங்களில் - 6000 பிபிஎம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இத்தனைக்கும் ஏசியை வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40000 பிபிஎம் தொட்டிருக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;மற்றொரு ஆய்வில் இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டு பயணிக்கும்போது பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. பிறகு இந்த அளவுகள் 1000 க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2000- 2500 பிபிஎம் வரை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;- சோர்வு&lt;/p&gt;
&lt;p&gt;- கவனச்சிதறல்&lt;/p&gt;
&lt;p&gt;- வேக்காடாக உணர்தல்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2500- 5000 பிபிஎம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;- தலைவலி&lt;/p&gt;
&lt;p&gt;- தலை சுற்றல்&lt;/p&gt;
&lt;p&gt;- உறக்கம் ஏற்படும் நிலை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5000- 40,000 பிபிஎம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;- மூச்சுத் திணறல்&lt;/p&gt;
&lt;p&gt;- மூர்ச்சை நிலை&lt;/p&gt;
&lt;p&gt;- அதீத கவனக் குறைபாடு&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;40,000 க்கு மேல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;- தீவிர மூச்சுத் திணறல்&lt;/p&gt;
&lt;p&gt;- கோமா&lt;/p&gt;
&lt;p&gt;- திடீர் மரணம் ஏற்படுதல்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதில் இருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;காருக்குள் அடைபடும்போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுப் போதுமானதாக இருந்தாலும் கூட நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் - மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் நாம் தேவைக்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் நமது உடலில் ஒரே நேரத்தில்&amp;nbsp;ஆக்சிஜன் குறைபாடும் ( ஹைப்பாக்சியா) கூடவே ஹைப்பர் கேப்னியா ( கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும். இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். பல உறுப்புகளும் செயலிழக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மூர்ச்சை நிலைக்குச் சென்று சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கடுத்தபடியாக நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு&amp;nbsp;அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம் உறங்குவது சரியா? தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட..&lt;/p&gt;
&lt;p&gt;அதாவது கார் ஓடும் போதும் கூட ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால் வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது.&lt;/p&gt;
&lt;p&gt;மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும்போது, வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை.&amp;nbsp;அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது.&lt;/p&gt;
&lt;p&gt;காரணம் - காருக்குள் செல்லும் காற்றானது, &amp;nbsp;அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும்.&amp;nbsp;தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும்.&lt;/p&gt;
&lt;p&gt;இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதை கவனிக்கும் வாய்ப்பு குறைவு. இதனால் மரணம் நிகழும். இதைத் தவிர்க்க, காருக்குள் தூங்க வேண்டும் என்றால் பாதுகாப்பான திறந்த வெளியில் ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காக சில டிப்ஸ்கள் இதோ ஏசி மோடில் இரண்டு வகை உண்டு.&lt;/p&gt;
&lt;p&gt;- நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட்&lt;/p&gt;
&lt;p&gt;- வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட்.&lt;/p&gt;
&lt;p&gt;காருக்குள் இருவருக்கு மேல், நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும்.&lt;/p&gt;
&lt;p&gt;நீண்ட நெடிய பயணங்கள் செல்லும்போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் - நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ் ஹார்ட் டில்லியில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும்.&amp;nbsp;கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஒரு செண்டிமீட்டர் இடைவெளி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பொதுவாக கார்களை நாம் லாக் செய்யும்போது ஜன்னல்களில் ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால் தற்செயலாக விபரீதமாக குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம். என்றும் குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம்.&lt;/p&gt;
&lt;p&gt;காரணம் தற்காலக் குழந்தைகள் கார்களின் சாவிகளை தானே எடுத்துக் கொண்டு அவற்றை சிறிய அழுத்தில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;கார் - ஏசி - கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் - கார்பன் மோனாக்சைடு என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம்'' என்று பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/education/do-you-know-what-is-the-difference-between-iit-and-nit-266524&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/07/fc2ef7909c75dcaae70939ee88777c701783363305457215_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !]]></title><link>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</link><comments>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:03:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் தேசியகால்நடைநோய்த்தடுப்புத்தி&lt;wbr /&gt;ட்டம் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி தடுப்பூசி பணி), கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவச&amp;nbsp; தடுப்பூசி முகாம், இன்று 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில், தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டதின் மூலம் (NADCP &amp;ndash; FMD 9th ROUND) 2,19,050 இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐம்பது மாட்டினங்களுக்கு கால் மற்றும் வாய்க்காணை நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்&lt;/strong&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 69 கால்நடை மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டு தினந்தோறும் ஒரு குழுவானது 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட பணிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடைவளர்ப்போர், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எனவே, கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கால் மற்றும் வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடைமருத்துவ நிலையங்களை&amp;nbsp; &amp;nbsp; அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/9c921c97bfa93d5a133059267b873d031782905563043184_original.png" width="220"/></item><item><title><![CDATA[கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tasmac-polio-camp-issue-mla-tnn-265365</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tasmac-polio-camp-issue-mla-tnn-265365#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 14:03:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tasmac-polio-camp-issue-mla-tnn-265365</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;நாடு முழுவதும் இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத் தூண்களான கைக்குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனப் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய தூய்மையான, பாதுகாப்பான இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று காலை 7 மணி முதல் பல்வேறு மையங்களில் விறுவிறுப்பாகச் சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியது. ஆனால், மாவட்டத்தின் மையப் பகுதியிலேயே ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும், பெற்றோர்களை அதிர்ச்சியில் உரைய வைக்கும் வகையிலும் ஒரு விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) பூங்கொடி மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாகப் போலியோ முகாமினைத் தொடங்கி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குடிமகன்கள் கூடாரத்தின் அருகே குழந்தைகளுக்கான முகாம்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுவரை வழக்கமான ஒரு அரசு நிகழ்வாக நகர்ந்த இந்தச் சூழலில், அதற்குச் சற்று எதிரே சில மீட்டர் தொலைவில், அங்கிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மிக அருகாமையிலேயே மற்றொரு போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்ததுதான் தற்போதைய பெரும் சர்ச்சைக்குக் காரணமாக வெடித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே, இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தம் முழுவதும் சமூக விரோதிகளாலும், மதுப்பிரியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, 'குடிமகன்களின் கூடாரமாக' மாறிவிட்டதாகப் பொதுமக்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;[tw]&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்..தாய்மார்கள் ஆக்ரோஷம்..&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை அருகே போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &lt;a href=&quot;https://t.co/Aub83uwaY6&quot;&gt;pic.twitter.com/Aub83uwaY6&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; JAGANNATHAN (@Jaganathan_JPM) &lt;a href=&quot;https://x.com/Jaganathan_JPM/status/2071147042722963780?ref_src=twsrc%5Etfw&quot;&gt;June 28, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
[/tw]&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இடத்தை முறைப்படுத்தக் கோரி எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் விளைவாக, சமீபத்தில்தான் காவல்துறையினர் அங்கு வந்து எச்சரிக்கைப் பலகை ஒன்றையும் வைத்திருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் ஒரு சூழலில், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைக்குரிய, ஆபாச வார்த்தைகளும் அசிங்கமான காட்சிகளும் நிறைந்த ஒரு டாஸ்மாக் மதுக்கடையின் அருகே, பச்சிளம் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து முகாமைக் கொண்டு போய் அமைத்திருப்பது எந்த வகையான நிர்வாகத் திறன் என்று பொதுமக்கள் கொந்தளித்துக் கேள்வி எழுப்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயல்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதைவிடப் பெரும் கொடுமை என்னவென்றால், கூறைநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமினைத் தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் ஆகியோர், எவ்வித தயக்கமும் இன்றி, இந்தத் டாஸ்மாக் கடை அருகே அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் நேரில் சென்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு உயர் அதிகாரிகளும், மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினரும் அந்த இடத்திற்குச் செல்லும்போது, அது மதுக்கடையின் அருகில் இருக்கிறது, குடிகாரர்கள் நடமாடும் பகுதி, கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பற்ற இடம் என்பது அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாகனங்களில் வந்து இறங்கும் அதிகார வர்க்கத்திற்கு, சாமானிய மக்களின் அவல நிலை எப்போதுமே உறைப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனச் சமூக ஆர்வலர்கள் காரசாரமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகத்தைச் சுளித்தபடி வந்த தாய்மார்கள் - கொதிக்கும் பொதுமக்கள்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று காலை முதலே தங்களது பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் சொட்டு மருந்து போட வந்த தாய்மார்கள், முகாம் அமைந்துள்ள இடத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;எங்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்காக அரசு சொட்டு மருந்து போடுகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வந்து ஒரு டாஸ்மாக் கடை வாசலில் வைப்பதா? மது குடித்துவிட்டு அநாகரிகமாகத் திரியும் நபர்களுக்கு மத்தியில், நாங்கள் எப்படிக் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்து வர முடியும்? பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற இந்த இடத்தில் முகாம் அமைக்க அனுமதி கொடுத்த அதிகாரி யார்?&quot; என்று முகாமிற்கு வந்திருந்த தாய்மார்கள் புலம்பியவாறு சென்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளின் உச்சக்கட்ட அலட்சியம்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறையின் இந்த அப்பட்டமான அலட்சியப் போக்குதான் தற்போதைய ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் பிரதானக் காரணமாகக் பார்க்கப்படுகிறது. ஒரு பொது முகாம் அமைப்பதற்கு முன்பாக அந்த இடம் பாதுகாப்பானதா, பெண்களுக்கு உகந்ததா, சுகாதாரமான சூழல் நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பொறுப்பு கூட அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகளான எம்.எல்.ஏ மற்றும் டி.ஆர்.ஓ ஆகியோர் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்குக் கூட இடத்தை சரியாகத் தேர்வு செய்யத் தெரியாத சுகாதாரத்துறையின் செயல்பாடுகள், தற்போது ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கே பெரும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டுச் சம்பந்தப்பட்ட அலட்சிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/f4b143665e5ddb594242296ed7cdf8d41782635582419186_original.jpg" width="220"/></item></channel></rss>