தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1930 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனா வைரசால் 209 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 1,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.




தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ஆண்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 494 ஆகும். பெண்கள் 10 லட்சத்து 72 ஆயிரத்து 598 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.




தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்று காரணமாக 1929 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு குறைந்து 1893 ஆக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக 23 பேர் உயிரிழந்திருந்தனர். இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து 27ஆக பதிவாகியுள்ளது.