தமிழ்நாட்டில் இன்று 1,20,153  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  990 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 111  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,153 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.