Just In

Paresh Rawal: ”மூத்திரம் குடிக்கணுமா? வாட்ஸ்-அப் பூமர் அங்கிள்” பாஜக முன்னாள் எம்.பியை வெளுத்து வாங்கிய டாக்டர்

எடையை குறைக்க ஊசி போட்டுகொள்கிறார்களா நடிகர்கள்..Ozempic , Mounjaro என்றால் என்ன ?

"குடி பழக்கத்தில் இருந்து உங்கள் அன்பிற்குரியவர் விடுபட” இதை செய்தால் மட்டும் போதும்..!

TN Nursing Colleges: 11 செவிலியர்கள் கல்லூரி என்ன ஆச்சு? தவிக்கும் மருத்துவமனைகள் - வெளிநாடுகளில் குவியும் தமிழக நர்ஸ்கள்

Protein powders: கட்டுமஸ்தான உடல் போதுமா? உயிர் வேண்டாமா? ஸ்டிராய்டு, புரோட்டீன் - சென்னையில் பயங்கரம்
உலக சுகாதார தினம் 2025: காலையில் எழுந்ததும் இதை குடியுங்கள்! அப்புறம் பாருங்க!
காஞ்சிபுரம்: இன்று 30 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 30 -ஆக உள்ளது.
Continues below advertisement

கொரோனா பரிசோதனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தொற்று பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-க்கும் கீழ் குறைந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 32 -ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 .
நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 6709 மாதிரிகளை சோதனை செய்ததில் 34 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73158 சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 71532. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 395, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1231-ஆக உள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 104. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய எண்ணிக்கை 162804.. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2440.
நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்
காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது முதல் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. P.T.V.S.மேல்நிலைப் பள்ளி - பூக்கடை சத்திரம்,பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, மூங்கில் மண்டபம், ஆரம்ப சுகாதார நிலையம்- பஞ்சுப்பேட்டை ,ஆரம்ப சுகாதார நிலையம்- பிள்ளையார்பாளையம், ஆரம்ப சுகாதார நிலையம், சின்ன காஞ்சிபுரம், ஆரம்ப சுகாதார நிலையம், செவிலிமேடு, ஆரம்ப சுகாதார நிலையம், நத்தப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் சமூக பொறுப்புடன் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றினால் மட்டுமே வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
மிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,587இல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 186 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Continues below advertisement
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.