திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருந்தது. இதுவரை மாவட்டத்தில் 61 ஆயிரத்து 460 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 57 ஆயிரத்து 514 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 534 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 678-ஆக உயர்ந்துள்ளது.


 


 


 




 


மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 3268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌. 


 




 


திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உட்பட 150 ற்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது..


 


திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில்  மாவட்டம் முழுவதும் காவல்துறையினருக்கு 150க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக வீரலூர் கிராமத்தில் நடைபெற்ற கலவரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு அவதிப்பட்டு வந்த நிலையில். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இந்நிலையில் அவர் தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.