Coronavirus LIVE Updates: கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 09 Aug 2021 08:02 PM
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1956 ( நேற்று முன்தினம்- 1,985) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,73,308 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேரும், சென்னையில் 187...More
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1956 ( நேற்று முன்தினம்- 1,985) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,73,308 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேரும், சென்னையில் 187 பேரும்,ஈரோடில் 185 பேரும்,, செங்கல்பட்டில் 105 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். குணமடைவோர் எண்ணிக்கை: நேற்று 1807 (நேற்று முன்தினம்- 1,839) பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,20,584 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,317 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8338 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,407 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் RT-PCR பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.