Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் புதிதாக 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

LIVE

Background

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. 

குணமடைவோர் எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில் 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,16,938 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கொரோனா தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.   

இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்துள்ளது. 

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,185 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1335 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3369 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

  

Continues below advertisement
17:09 PM (IST)  •  07 Aug 2021

3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு 3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

17:05 PM (IST)  •  07 Aug 2021

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 

ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 





 

17:02 PM (IST)  •  07 Aug 2021

மொத்தம் 49,74,90,815 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 51.66  கோடிக்கும் அதிகமான (51,66,13,680) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், கூடுதலாக 55,52,070 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 49,74,90,815 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 2.29 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

 

13:34 PM (IST)  •  07 Aug 2021

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. அவசர கால தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா கூறியுள்ளார்.

12:20 PM (IST)  •  07 Aug 2021

புதுச்சேரியில் மேலும் 102 பேருக்கு கொரோனா 

புதுச்சேரியில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 1,21,532 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயந்துள்ளது.

10:52 AM (IST)  •  07 Aug 2021

இந்தியாவில் இன்று 38,628 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் மேலும் 38,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,95,385 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 40,017 பேர் குணமடைந்த நிலையில், தொற்றுக்கு மேலும் 617 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

08:05 AM (IST)  •  07 Aug 2021

20 நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

07:24 AM (IST)  •  07 Aug 2021

உலகளவில் 20.23 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 20.23 கோடி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 42.89 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், 18.18 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக  1,29,056 பேருக்கு கொரோனா. ஒரேநாளில் 748 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.