Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 04 Aug 2021 07:37 PM
Background
தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 908 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் 2வது நாளாக பாதிப்பு குறைந்துள்ளது. 1,45,585 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,908 ஆக...More
தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 908 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் 2வது நாளாக பாதிப்பு குறைந்துள்ளது. 1,45,585 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,908 ஆக உள்ளது.இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 727 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 203 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 203 ஆக உள்ளது. கோவை 208, ஈரோடு 181, தஞ்சை 118, சேலம் 75, செங்கல்பட்டு 122, கடலூர் 79, திருச்சி 68, திருவள்ளூர் 84, நாமக்கல் 49, காஞ்சிபுரம் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8322 பேர் உயிரிழந்துள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.