Coronavirus LIVE Updates: ஐக்கிய அமீரக நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 16 Aug 2021 07:50 PM
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1896 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 225 பேரும், சென்னையில் 216 பேரும், ஈரோட்டில் 146 பேரும், சேலத்தில்...More
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1896 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 225 பேரும், சென்னையில் 216 பேரும், ஈரோட்டில் 146 பேரும், சேலத்தில் 97 பேரும், செங்கல்பட்டில் 96 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். குணமடைவோர் எண்ணிக்கை: 1,842 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,33,804 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,519 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8359 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது. கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,458 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் தொற்று உறுதி விகிதம் 2.0க்கும் அதிகமாக உள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் பதியப்பட்ட வழக்குகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் பதியப்பட்ட வழக்குகள்