Coronavirus LIVE Updates: புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா 

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 15 Aug 2021 01:00 PM
புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா 

புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,22,282 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 929 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,19,548 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் புதிதாக 36,083 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 36,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 493 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,927 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54,38,46,290 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகளவில் 20.74 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 20.74 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.59 கோடி பேர் குணமடைந்தனர். அமெரிக்காவில் புதிதாக 70,748 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 257பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 31,142 பேர் பாதிக்கப்பட்டனர். 919 பேர் உயிரிழந்தனர்.

Background

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1916 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,86,885 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேரும், சென்னையில் 219 பேரும், ஈரோட்டில் 185 பேரும், சேலத்தில் 130 பேரும், செங்கல்பட்டில் 116  பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.    


குணமடைவோர் எண்ணிக்கை: 1,886 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,31,962 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர்.   



இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8356 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது.  கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 

 

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,427 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. 



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.