கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,655 - ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,148 -ஆக அதிகரித்துள்ளது. 




இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351ஆக இருக்கிறது. இந்நிலையில் 156 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கரூரில் இன்று தடுப்பூசி போடவில்லை, ஆனால் கரூர் மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.  இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிலையில் நாளை தடுப்பூசி போல இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இங்கு எத்தனை ஊசிகள் என்பது இரவு  தான் தெரியவரும். 




அதேபோல் நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்களை பற்றி பார்க்கலாம் .


நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 58 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47264 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 53 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46218-ஆக அதிகரித்துள்ளது. இன்று மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 




இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 451 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 595 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று குறிப்பிட்ட சில இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 


தமிழகத்தில் மூன்றாவது அலை விரைவாக வரவிருக்கும் நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் உலக சுகாதாரத்துறை மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 




தலைநகர் முக்கிய ஆன்மீக தலங்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர் அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஆலய தரிசனத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மாவட்ட மக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை இப்படி வெளியே செல்லும் பொழுது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தேவையில்லாத காரணத்திற்காக வீட்டைவிட்டு குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.