கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 10 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 22746 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 353 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 183 ஆகும். 




கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கொரொனொ பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் 540 இடங்களில் 61,726 நபர்களுக்கு தடுப்பூசிகள்  போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதனால் பொது மக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்:-


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 49 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 49573 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 37 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 48459 ஆகும். 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 478 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 636 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. 


நாமக்கல் மாவட்டத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். 




தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு:-


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா தொற்றிலிருந்து இன்று 1,512  பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் இன்று உயிரிழந்த நிலையில், தற்போது 16,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.