கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23101 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 17. இதேபோல் கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் எண்ணிக்கை 22,596 ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 352 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 153 ஆகும். 




கரூரில் தொடர்ந்து 7 நாட்களாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் நாள்தோறும் 8000- த்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதே போல் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கூடுதலாக, கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் தற்போது தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால்மாவட்ட மக்கள் நிம்மதியுடன் உள்ளன. 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பதித்தவர்களின் இன்றைய நிலவரம் :-


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 48 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் 48,780 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 64. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 47777ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 470 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 533 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.




நாமக்கல் மாவட்டத்தில் சராசரியாக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தொட்டு பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும், இறப்பு வீதம் நாள் ஒன்றுக்கு ஒருவர் இறந்து வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.