கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 29,761 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 3 அனுமதி . கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.


கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. 



நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக மூன்று நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 68020 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 0 பேர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 67,479 நபர்கள்.




நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 7 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.




தமிழகத்தில் இன்று 598 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 217 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 0 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 3073 நபர்கள் உள்ளனர். 


 



கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு மாதங்களாக தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்குள் புதிதாக கரூரில் மூன்று நபருக்கும், நாமக்கல்லில் ஏழு நபர்களுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு மாதங்களாக தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்குள் புதிதாக கரூரில் மூன்று நபருக்கும், நாமக்கல்லில் ஏழு நபர்களுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.