கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்களின் எண்ணிக்கை 29,752 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்கள் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் யாரும் இல்லை. கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.


 





கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று பொதுமக்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. எனினும், மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம் செயல்பட்டது. அதேபோல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பு சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள். கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. 


 





நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 01 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 68,001 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் 1 நபர்கள். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 67,460 நபர்கள். 


 



நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 07 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.


 





தமிழகத்தில் இன்று 52 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 96 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று யாரும் இல்லை. தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 576 நபர்கள் உள்ளனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் அரசின் தொற்று விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் அரசின் தொற்று விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.