தற்போது உள்ள கால சூழ்நிலையில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருமே அவசரமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறோம். அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பதட்டம், மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதில் குழந்தைகளும் அடக்கம். படிப்பு மற்றும் இதர பல விஷயங்களால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது அவர்களின் பதட்டத்தையும், மனச்சோர்வையும் அதிகரித்து அவர்களின் இயல்பான நடத்தையில் இருந்து முற்றிலும் மாற்றி விடுகிறது. குழந்தைகளின் இந்த பிரச்சனை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கவனம் இல்லாமல் இருப்பது குழந்தைகள் கவனக்குறைவாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஏதோ ஒரு கவலை மனதில் உள்ளது என்று அர்த்தம். அதனால் அவர்களால் படிப்பிலோ அல்லது மற்ற விஷயத்திலோ முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருக்கலாம். எதையாவது பற்றி சிந்தித்து கொண்டே இருப்பார்கள் அல்லது ஏதாவது தவறு நடந்து விடும் என்று பயப்படுவார்கள்.
அதிக கோபம்மனஅழுத்தம் உள்ள சூழலில் இருக்கும் போது பதட்டம் ஏற்படும். அந்த சமயம் அவர்களால் அச்சுறுத்தலை சமாளிக்க இயலாத போது அல்லது வெளிப்படுத்த முடியாத போது அவர்களின் உணர்ச்சிகள் விரக்தியை உண்டாக்கி அது கோபமாக மாறிவிடும். இதனால் சிறு விஷயங்களுக்கு கூட அதிகமாக கோபப்படுவார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்