இந்தியாவில் குளிர் காலம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய இந்திய வாழ்க்கை முறை என்பது வெப்பத்தை அடிப்படையாக கொண்டது.

Continues below advertisement

அதனால் நம்முடைய சருமம் கோடை காலத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு குளிர் காலத்தில் இருக்காது. இதனால் பலரும் சரும பிரச்னைகள் ஏற்படும். இது மனக்கவலை, மன அழுத்தம் உள்ளிட்ட பல பாதிப்புகளை உண்டு பண்ணும். தினந்தோறும்  உங்களை அறியாமலேயே நீங்கள் செய்யும் சில பழக்கவழக்கங்கள் சருமத்தைப் பாதிக்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதனால் சருமம் கருமையாகுதல், முகப்பரு, நிறமாற்றம் அல்லது தோல் சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பது எப்படி என்பது என்பது பற்றி காணலாம். 

பலரும் கோடைகாலத்தைப் போல சருமத்தை அடிக்கடி நீரால் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அப்படி சருமத்தை அதிகமாக சுத்தம் செய்வது முகப்பரு, வறட்சி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் பலர் இதை உணர்வதில்லை.  அதிகமாக சுத்தம் செய்வது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்குகிறது. இந்த அடுக்கு சேதமடைந்தால், சருமம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வீக்கம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றால் பாதிக்கப்படும். கூடுதலாக, செபாசியஸ் சுரப்பிகள் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. இதுவும் முகப்பருவை ஏற்படுத்துகிறது. 

Continues below advertisement

அதேசமயம் நம்மில் பலர் வெளியில் செல்லும்போது மட்டுமே சன்ஸ்கிரீன் அவசியம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய தவறான கருத்தாகும். சூரியனால் ஏற்படும் சேதம் UVB கதிர்களால் மட்டுமல்ல, UVA கதிர்களாலும் ஏற்படுகிறது. இந்த கதிர்கள் ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடிகள் வழியாகவும் நுழைகின்றன. உட்புற விளக்குகளும் இதற்கு காரணமாகின்றன. குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இது நல்லது கிடையாது. அதனால்தான் தோல் மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இது சரும நிறம் பாதிக்கப்படுவதைக் குறைக்கிறது. தோல் சுருக்கங்கள் காணாமல் போகிறது.

சிலர் தூங்கும்போது இரவில் மேக்கப் அல்லது சன்ஸ்கிரீன் போட்டுக்கொண்டு தூங்குகிறார்கள். இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் மேக்கப்  காமெடோஜெனிக் அல்லாதது  என்று பெயரிடப்பட்டிருந்தாலும் அது சரும துளைகளை அடைத்து அழுக்குகளைப் படிய விடுகிறது. அதேபோல் சன்ஸ்கிரீன் கூட நாள் முழுவதும் வியர்வை, எண்ணெய் மற்றும் மாசுபாட்டுடன் கலக்கிறது. எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்யுங்கள். நீங்கள் அதை இரவு முழுவதும் வைத்திருந்தால், அது கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மற்றும் முகப்பருவுக்கு வழிவகுக்கும். சருமம் இரவில் கொலாஜனை உருவாக்குகிறது. 

எண்ணெய் பசை அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம் உள்ள பலர் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் சருமத்தை பளபளப்பாக்குகிறது  என நம்பப்படுகிறது. எனவே ஈரப்பத அளவை அகற்றாமல் சமப்படுத்த உதவும் மாய்ஸ்சரைசர்களை தேர்வு செய்யலாம்.