தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி தன்னுடைய தோழியை ரிசப்ஷனில் பார்த்து ஷாக்கான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தோழியைச் சந்தித்த ரேவதி:
அதாவது ரேவதியின் தோழி அவளை பார்த்து விடுகிறாள். பிறகு தனது கணவரை அறிமுகம் செய்து வைக்கிறாள். மேலும் உனக்கே இப்போ கல்யாண ஆச்சு? உன் கணவர் எங்கே? என்று கேட்க ரேவதி கார்த்தியை கூப்பிட்டு தனது கணவன் என அறிமுகம் செய்து வைக்கிறாள்.
அதன் பிறகு ரேவதியின் தோழி பார்த்து ரொம்ப நாளாச்சு வெளியே எங்கேயாவது போலாமா? என்று கேட்கிறாள். இந்த சமயத்தில் கார்த்திக் இங்கு இல்லாத நிலையில், ரேவதி என் கணவருக்கு வேலை இருக்கு என்று சொல்லி விடுகிறாள்.
கோபித்துக்கொண்ட ரேவதி:
அதன் பிறகு கார்த்திக் அங்கு வர ரேவதி நேரடியாக கார்த்தியிடம் வெளியே போலாமா? உங்களுக்கு வேலை இருக்கா? என்று கேட்க கார்த்திக் போலாமே நான் ப்ரீ தான் என்று சொல்லி விடுகிறான். இதனால் ரேவதி கார்த்தியிடம் ஏன் வேலை இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே? என்று கோபப்படுகிறாள்.
அதன் பிறகு இவர்கள் எல்லோரும் வெளியே சாப்பிட வருகின்றனர். அப்போது நீங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணீங்க என்று கேள்வி கேட்க கார்த்தி நான் உங்க வீட்டில டிரைவரா வேலை பார்த்தேன் என்று சொல்கிறான்.
முதலுதவி:
அதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதிக்காக சொட்டர் ஒன்றை வாங்கி கொடுக்க, ரேவதி அவர்கள் முன்னால் மறுக்க முடியாமல் வாங்கி கொள்கிறாள். இந்த சமயத்தில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் மீது கார் மோதி விட கார்த்திக் ஓடிப் போய் அந்த குழந்தைக்கு முதல் உதவி கொடுக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.