யஷ் எனப்படும் நவீன் குமார், கன்னட சினி உலகில் பல படங்கள் நடித்தாலும் ஆல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார். பின்னர், கே.ஜி.எஃப் படம் ஒன்றே, இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இவரை யஷ் என்று அழைக்கப்படுவதை விட, ராக்கி பாய் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். அவர் தன் சட்டை பையில் 100 ரூபாய் கொண்டு ஆரம்பித்து, இப்போது பல லட்சங்களை சம்பாதிக்கும் பெரிய ஸ்டாராக வளர்ந்துவிட்டார். இப்போது விலை உயர்ந்த பல பொருட்களையும், ஆடம்பரமான வீடு வாசல், விடுமுறை காலத்தில் வெளிநாட்டு டூர் என அசத்தி வருகிறார்.


நடிகர் யஷ்ஷிற்கு சுமார் 7 மில்லியன் சொத்து மதிப்பு உள்ளது. அவருக்கு சொந்தமான வாகனங்கள் முதல் ஆடம்பர பங்களா குறித்து பார்ப்போம்.






பெங்களூரு வீடு :


கே.ஜி.எஃப் பட நாயகன், பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு வீட்டை தன் மனைவி ராதிகா பண்டித் மற்றும் குழந்தைகள் ஐரா, யார்தவுடன் வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு, சுமார் 6 கோடி ரூபாயாம்.


யஷ் வைத்துள்ள விலை மதிப்புள்ள கார்கள் :


(Range Rover Evoque) : 


அவர் வைத்திருக்கும் வாகனத்திலே, இதுதான் விலை மதிப்பு மிக்கது. இதன் விலை சுமார் 70 முதல் 80 லட்சம் வரை இருக்கும். இது பார்க்க அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். இதில் ஒரு சன் ரூஃபும் உள்ளது.


(Mercedes GLC 250D) :


நடிகர் யஷ் 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் GLC 250D காரையும் வைத்துள்ளார். இதில் 5 நபர்கள் அமரலாம். இதுபோக, 80 லட்சம் மதிப்புள்ள  Audi Q7,  70 லட்சம் மதிப்புள்ள BMW 520D, 40 லட்சம் மதிப்புள்ள Pajero Sports காரையும் வைத்துள்ளார்.


யஷ் நடிக்கும் விளம்பர படங்கள் : 


நடிகர் யஷ்-ஐ அனைத்து விளம்பரங்களிலும் பார்த்திட முடியாது. விளம்பர படங்களையும் பார்த்து பார்த்துதான் தேர்ந்தெடுப்பார். குச்சி பெர்ஃபியூம் போன்ற பெரிய பிராண்டுகளுக்கும் இவர் நடித்துள்ளார். இவர் மனைவி ராதிகா பண்டித்துடன் சேர்ந்து சமையல்  எண்ணெய் விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஒரு விளம்பரத்தில் நடிக்க சுமார் 60 லட்ச ரூபாய் வரை வசூல் செய்கிறார்.






இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க, பெரும்பாடு பட்டிருக்கிறார் யஷ். திரையுலகில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், சின்ன சின்ன படங்களில் நடித்து பான் இந்திய நடிகராக தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார்.


கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகிய நிலையில், மக்கள் மூன்றாவது பாகத்திற்கு காத்துக்கொண்டுள்ளனர். மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது