ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கெர்விக் இயக்கிவரும் திரைப்படம் பார்பி. தற்போது வினோதமான குற்றச்சாட்டு ஒன்று இந்தப் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. என்னக் குற்றச்சாட்டுத் தெரியுமா?


குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன்  கதாபாத்திரம் பார்பி. இதுகுறித்த   படத்தை இயக்கி வருகிறார் ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கர்விக். ரையன் காஸ்லிங் மற்றும் மார்கரெட் ராபீ ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மிக வண்ணமயமான ஒரு படமாக எடுக்க விரும்பியிருக்கிறார். பார்பியின் உலகத்தை கண்முன் உருவாக்குவதற்காக இயக்குநரும்  ப்ரோடக்‌ஷன் டிசைனர் சாரா ஆகிய இருவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


படத்தில் வரும் வீடுகள் அனைத்தும் பார்பி பொம்மைகளின் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டு அவற்றுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், கார்கள், சாலைகளுக்கு எல்லாம் பிங்க்  நிற பெயிண்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தற்போது சர்வதேச சந்தையில்  பிங்  நிறப் பெயிண்ட் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு இந்தப் படத்தில் பெயிண்ட் பயன்படுத்தியுள்ளார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ராஸ்கோ என்ற நிறுவனத்திடம் படத்திற்குத் தேவையான மொத்த பெயிண்டையும் வாங்கியுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம். இது குறித்து விளக்கமளித்த ராஸ்கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன் “ பிங் நிற பெயிண்ட தட்டுப்பாடில் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கு முழுக்காரணம் பார்பி படம் அல்ல. ஏற்கனவே கொரோனா மற்றும் சில காரணங்களால் எங்கள் பெயிண்ட் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.


எங்களிடம் மிக குறைவாகவே பெயிண்ட் இருப்பு இருந்தது. இந்த சமயத்தில் தான் பார்பி படத்திற்குத் தேவையான மொத்த பெயிண்டையும் எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது படத்தின் நிர்வாகம். இதன் காரணத்தால் தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது”  என அவர் தெரிவித்தார்.


ஹாலிவுட்டில் பெண்களின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்யும் இயக்குநர்களில் முக்கியமானவர் க்ரெட்டா கெர்விக். இவர் இயக்கிய பிரான்சிஸ் ஹா இன்றுவரை ஆண் பெண் இருதரப்பினராலும் சிலாகிக்கப் படும் திரைப்படம். மேலும்  லுயி மே ஆல்காட் எழுதிய லிட்டில் வுமன் என்கிற நாவலை தனது பார்வையில் புதிய கண்ணோட்டத்தில் இயக்கியிருப்பார் க்ரெட்டா. கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கினார் க்ரெட்டா.


ஒரு உறவு முறிவதை மிக அழகாக சித்தரித்திருப்பார். தற்போது பெண்களுக்கான கார்டூன்கள் என வரையறுக்கப்படும் பார்பீ  குறித்தான கதையை எடுக்கும் க்ரெட்டா அதில் என்ன புதிதாக சொல்லப்போகிறானர் எனபதை பார்க்க மிக ஆர்வமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.