கணவனுக்காக என் அம்மாவை தெருவில் விடமுடியாது அல்லவா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் விஜேவும் நடிகையுமான மகேஸ்வரி.


ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்த பிரபல பெண் தொகுப்பாளினியான திகழ்ந்தவர் மகேஸ்வரி.  இடையில் திருமணம் ஆனதால் மகேஸ்வரி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார். அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார். இவர் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.


அண்மையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர், நான் என் பணியை சன் மியூஸிக்கில் தான் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் லூசு மாதிரி இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். 16 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எதுக்கெடுத்தாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பேன்.  நான் லைவ் ஷோ செய்யும்போது நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். பொட்டு வைக்காததற்குக் கூட திட்டு வாங்கியிருக்கிறேன். சிரிப்பை கம்மி பண்ணுங்க என்று சொல்வார்கள். ஆனால் இப்போ மீடியா எனக்கு ரொம்ப சொல்லிக் கொடுத்திருக்கு. வாழ்க்கையும் தான். நான் என்றைக்குமே நான் ஒரு செலிப்ரிட்டி என்று நினைத்ததே இல்லை. அப்பா எங்களை விட்டுப் பிரிந்த பின்னர் எனக்கு வாழ்வாதாரமாகத் தான் இந்த வேலை இருந்தது.  சாப்பிடணுமே என்பதற்காகத் தான் நான் வேலைக்குச் சென்றேன்.




எனக்கு திருமணம் ஆனதுகூட என் அறிவுணர்ந்து நடக்கவில்லை. எங்கே என்னை யாராவது ஏமாற்றிவிடுவார்களோ என்று அம்மா ஒருவரை திருமணம் செய்துவைத்தார். ஆனால் அவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை. முக்கியமாக நான் என் அம்மாவை கவனிக்கக் கூடாது என்றார்கள். ஒரு ஆண் திருமணத்திற்குப் பின் மனைவிக்காக அம்மாவை விட்டுக் கொடுப்பது எவ்வளவு பெரிய தவறோ அதேபோன்றதுதான் ஒரு பெண் தன் கணவருக்காக அம்மாவை விட்டுக் கொடுப்பதும். கணவனுக்காக என் அம்மாவை தெருவில் விடமுடியாது அல்லவா. அதனால் விவகாரத்துப் பெற்றேன். இப்போது என் அம்மாவைப் போலவே சிங்கிள் மதராக வாழ்கிறேன்.


என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு யார் மேலேயும் நம்பிக்கை வர மாட்டேங்குது, என்னுடைய பையன், என்னுடைய அம்மா, என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். என்னை புரிந்து கொண்டு, என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருக்கிறது.