நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் நிலையில், இந்த படம் எப்போதும் தொடங்கும், யார் யார் படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தன. அதே சமயம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.


 


 






இந்த நிலையில் பா.ரஞ்சித் - விக்ரம் இணையும் புதியப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், படத்திற்கு  ‘மைதானம்’ என்று தலைப்பிட்டுருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 


 






படப்பிடிப்பு தொடங்குவதற்கான முந்தையப் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில்,ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக கர்நாடகாவில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு தொடர்ந்து கேரளாவிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.