தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ லிஸ்ட்டில் இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி வெரைட்டியான கதாபாத்திரங்கள், நெகடிவ் ஷேட் உள்ள படங்கள் என மாறி மாறி கலக்கி வருகிறார். ஸ்டார் நடிகர்களுடன் வில்லனாக நடிக்க தயங்காதவர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்கள், வெப் சீரிஸ் என கெத்தாக நடித்து ஏராளமான ரசிகர்களை சேர்த்து வெற்றி நடை போட்டு வருகிறார். 


 



பிஸியான நடிகர் :


சைட் ஆர்டிஸ்டாக சினிமாவில் அடியெடுத்து வைத்த விஜய் சேதுபதி தனது வெறித்தனமான நடிப்பால் இன்று மிகவும் பிஸியான ஒரு நடிகராக மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். மாஸ் நடிகராக  இருந்து வரும் விஜய் சேதுபதி தற்போது அதிர்ச்சி அளிக்கும்  விதமாக நான் அந்த நடிகையுடன் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டாராம். இது தான் தற்போது கோலிவுட்டின் டாக்காக இருந்து வருகிறது. யார் அந்த நடிகை? 


க்ரித்தி ஷெட்டி :


விஜய் சேதுபதி ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தின் ஹீரோயினாக நடிகை க்ரித்தி ஷெட்டி கமிட்டாகி உள்ளார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான க்ரித்தி ஷெட்டி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் க்ரித்தி ஷெட்டி. 


ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி :


இந்நிலையில், தனக்கு ஜோடியாக புதிய படத்தில் க்ரித்தி ஷெட்டி கமிட்டான தகவல் அறிந்த விஜய் சேதுபதி, படக்குழுவினரிடம் என்னால் க்ரித்தி ஷெட்டி பேராக நடிக்க முடியாது என்று பிடிவாதமாக கூறிவிட்டாராம். இதைக் கேட்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


 



இது தான் காரணமா?


தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' திரைப்படத்தில் க்ரித்தி ஷெட்டியின் அப்பாவாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.  இந்நிலையில் “அப்பாவாக அந்த பெண்ணுடன் நடித்த என்னால் எப்படி ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க முடியும். அவளுக்கு என்னுடைய மகனின் வயது தான் இருக்கும். க்ரித்தியை நான் என் மகளாக தான் பார்க்கிறேன். என்னால் அவருடன் ஆவலுடன் சேர்ந்து ரொமான்டிக்காக நடிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 


மகள் வயது நடிகைகள போட்டி போட்டு தன்னுடன் நடிக்க வைக்கும் நடிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதியில் இந்த செயல் கோலிவுட், டோலிவுட் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.