தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தவெக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துகோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில், விஜய் மீது பல குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவாகரத்து பெற காரணம் என்ன? இதனால், தானும் தன் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவால் மனஉளைச்சல்
கணவன் - மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும் திருமண வாழ்க்கை தொடக்க ஆண்டுகளில் இனிமையாகவே சென்றதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்ததாகவும், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகையுடனான திருமணத்தை மீறிய உறவு முறித்துக்கொள்வதாக விஜய் உறுதி அளித்தும் அதன்படி நடக்கவில்லை என்றும் சிறிதும் வருத்தமின்றி நடிகையுடனான உறவை தொடர்பை விஜய் தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.
குழந்தைகளுக்காக விவாகரத்தை தள்ளிவைத்தேன்
2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை வழக்கறிஞர் மூலம் சுமுகமாக பிரிவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விஜய் - சங்கீதா இருதரப்பிலும் வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை என்றும் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்கள் மனதளவில் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே விவாகரத்து கோருவதை தள்ளிவைத்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகையுடன் ஒரே வீட்டில் வசித்தார்
மேலும், 2021இல் இருந்து தன்னை வார்த்தையால் விஜய் அவமானப்படுத்தியதாகவும் தன்னை புறக்கணித்ததாகவும் குறிப்பிட்ட சங்கீதா, ஒரே வீட்டிலேயே நடிகையுடன் தனித்தனியாக வசித்ததாகவும் தனது மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். விஜய் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அந்த நடிகையுடனே செல்வார் என்றும் விஜயுடன் வெளியே செல்லும்போது உடன் இருந்த புகைப்படங்களை நடிகை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்ததாகவும் திருமண வாழ்க்கையில் இருந்து தன்னை ஒதுக்கிவைத்துவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும், குழந்தைகளுக்கும் அவமானம்
தனக்கு மன உளைச்சல் தருவதற்காகவே வேண்டுமென்றெ விஜய் விலகி சென்றதாகவும் நடிகையுடனான புகைப்படங்களுக்கு விஜய் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் நடிகை வெளியிட்ட படங்கள் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தொடர்ந்து அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் சங்கீதா புகார் தெரிவித்துள்ளார்.
நடிகையின் பெயரை தற்போதைக்கு தவிர்க்கிறேன்
நடிகையின் பெயரை வெளியிடாமல் தற்போதைக்கு தவிர்ப்பதாக மனுவில் குறிப்பிட்ட சங்கீதா, நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.