ஜனநாயகன் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதிகள் மகேந்திரா மோகன் ஶ்ரீவஸ்தவா மற்றும் ஜி அருள்மோகன் முன் இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. படக்குழு மற்றும் தணிக்கை வாரியம் ஆகிய இருதரப்பினரின் வாதங்களை கேட்டபின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தற்போது உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளனர் தலைமை நீதிபதிகள். 

Continues below advertisement

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் மத்திய சென்சார் வாரியம் இப்படத்திற்கு முதலில் U/A 16+ சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தது. தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் படத்தில் ராணுவத்தை தவறாக சித்தரிக்கும் சர்ச்சைகுரிய காட்சிகள் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் படத்தின் தணிக்கை சான்றிதழை நிறுத்தி படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது.  தணிக்கை வாரியத்தின் மறுதணிக்கை  முடிவிற்கு எதிராக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ஜனநாயகன் படத்திற்கு U/A 16+ வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை வாங்கியது.

உச்ச நீதிமன்றம் செல்லுமா தணிக்கை குழு ?

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதிகள் தலைமை நீதிபதிகள் மகேந்திரா மோகன் ஶ்ரீவஸ்தவா மற்றும் ஜி அருள்மோகன் ஆகியோர் விசாரித்தனர். இதில் தணிக்கை வாரியம் மற்றும் கேவிஎன் ப்ரோடக்‌ஷன் இருதரப்பினர் சார்பிலும் அவரவர் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிரான  மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்க இருக்கின்றன. தலைமை நீதிபதிகளின் தீர்ப்பு சாதகமாக அமையாவிட்டால் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. தீர்ப்பு வழங்கிய அதே நாளில் மேல்முறையீடு செய்வது சாத்தியம் இல்லாததால் அடுத்த வாரம் புதன்கிழமை மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம் .