’எனக்கு திருமணம் நடந்தால் குஷி படத்தில் இருப்பதைப்போல் ஒரு வாழ்க்கை  வேண்டும்’ என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 


தமிழ், தெலுங்கு மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வரும் சமந்தா சிட்டேடல் என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான சகுந்தலம் படம் படும் தோல்வி அடைந்த நிலையில், சமந்தா விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துள்ளார். இளம் ஜோடியின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் குஷி படத்தின் 2-வது பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.


ஏற்கெனவே என் ரோஜா நீயே பாடல் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது ஆராத்யா படல் வெளியாகியுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியான இந்த பாடலில் விஜய்தேவரகொண்டாவும், சமந்தாவும் கணவன், மனைவியாக இருந்து காதலை வெளிப்படுத்துகின்றனர்.  தமிழில் ஆராத்யா பாடலுக்கு  சித் ஸ்ரீ மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளார். அதற்கு பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார். 


இந்த நிலையில் ஆராத்யா பாடல் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட விஜய் தேவரகொண்டா, தனக்கு திருமணம் நடபெற்றால், குஷி படத்தில் இருக்கும் கணவன்- மனைவியை போல் சரியான புரிதலுடனும், நெருக்கத்துடனுடம் வாழ வேண்டும் என்பதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ராஷ்மிகா மந்தனாவை விஜய் தேவரகோண்டா காதலிப்பதாக தகவல் கசிந்தாலும், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. 


மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான குஷி படத்தை இயக்குனர் சிவா நிர்வாண் இயக்கியுள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் குஷி படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.