நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்  அண்மையில் வெளியானது. படத்தை குறித்து இரண்டுவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் நயன் - விக்னேஷ் ஜோடி சீரடி, திருப்பதி என ட்ரிப் அடித்துக்கொண்டிருக்கின்றது. படம் வெளியாகும் தினத்தன்று திருப்பதியில் இருந்து இன்ஸ்டாவில் பதிவு செய்த ஜோடி தற்போது மீண்டும் திருப்பதிக்குச் சென்றுள்ளது. 






அதுகுறித்துத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன்,’நாங்கள் உன்னிடம் ப்ளாக்பஸ்டர் வேண்டினோம். கொடுத்துவிட்டாய் வெங்கடேஸ்வரா. உனது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சொல்ல வந்திருக்கிறோம். எங்களுக்குத் தேவை உனது அன்பும் ஆதரவும் தான் திருமலையானே’ எனப் பதிவிட்டுள்ளார். 



முன்னர் சீரடியில் இருந்து பதிவிட்டிருந்த விக்னேஷ் எனது கண்மணியுடன் சீரடியில் எனப் பதிவிட்டிருந்தார்.