Just In





மூளைய கழட்டி வச்சு படம் பாக்குறீங்க...பொங்கிய விடாமுயற்சி நடிகை ரெஜினா
விடாமுயற்சி படத்திற்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் படத்திற்கு ஆதவராக ரெஜினா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித் படம் வெளியாவதால் பயங்கர மாஸ் கமர்சியல் படம் ஒன்றை எதிர்பார்த்து சென்றார்கள் ரசிகர்கள். இதில் சில அஜித் ரசிகர்கள் மற்றும் மற்ற ஆடியன்ஸூக்கு படம் கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
படத்தில் அஜித் தனது வழக்கமான டெம்பிளேட்டில் இல்லாமல் புதிய கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார். பல வருடங்கள் கழித்து விண்டேஜ் அஜித் குமாரை பார்த்த ஃபீல் இப்படத்தில் ஏற்படுகிறது. ஆனால் திரைக்கதையில் இருந்த சொதப்பல்கள் காரணமாக படம் நிறைய பேருக்கு ஒன் டை வாச் என்கிற நிலையில் நின்றுவிட்டது. விடாமுயற்சி படத்திற்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் படத்திற்கு ஆதவராக ரெஜினா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்
மூளைய கழட்டி வச்சு பாக்குற படம் இல்ல
" இது ஒன்றும் வழக்கமான கமர்சியல் படம் இல்லை. இது செம மாஸான ஒரு படம். ஆனால் அதே நேரம் எல்லாருக்கு கனெக்ட் ஆகக்கூடிய ஒரு அம்சம் இதில் இருக்கிறது. மூளைய கழற்றி வைத்துவிட்டு ஃபன்னிற்காக பார்க்கும் படம் இல்லை. அஜித் சாரை ஸ்கிரீனில் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது. அஜித் மட்டுமில்லை த்ரிஷா , இன்னும் நிறைய விஷயங்கள் இந்த படத்திற்காக அமைந்தது. முன்பெல்லாம் நான் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஆனால் இப்போது நல்ல கதைகளை தேடுகிறேன். கமர்சியல் சினிமாவும் நிறைய மாறியிருக்கிறது. " இன்றைய கமர்சியல் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் தாஸ் , யோகி பாபு , பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஆறாவது முறையாக அஜித் த்ரிஷா ஜோடி சேர்கிறார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. விடாமுயற்சி படம் திருப்தியளிக்கவில்லை என்றாலும் குட் பேட் அக்லி நிச்சயம் ஏமாற்றாது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.