Vidaamuyarchi Boxoffice: வந்தாச்சு வீக் எண்ட்..! 2 நாட்களில் கல்லா கட்டியதா விடாமுயற்சி? அஜித் படத்தின் மொத்த வசூல் நிலவரம்
Vidaamuyarchi Day 2 Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Vidaamuyarchi Day 2 Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல், இரண்டாவது நாள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
விடாமுயற்சி இரண்டாவது நாள் வசூல் நிலவரம்:
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா, உள்ளிட்டோர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த திரைப்படம் அதன் இரண்டாவது நாளின் முடிவில் இந்தியாவில் மொத்தமாக சுமார் ரூ.32.12 கோடி நிகர வசூல் செய்துள்ளது. அதன்படி, முதல் நாள் வசூலை காட்டிலும், விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. முதல் நாளில் இந்த திரைப்படம், தமிழில் 25.5 கோடி ரூபாய், தெலுங்கில் 0.5 கோடி ரூபாய் என மொத்தம் 26 கோடி ரூபாயை வசூல் செய்தது. ஆனால், இரண்டாவது நாளில் இப்படம் அதிகபட்சமாகவே வெறும் 8 கோடி ரூபாய் வரை மட்டுமே, தமிழ்நாட்டில் வசூலித்துள்ளதாக தெரிகிறது.
உலகளவில் விடாமுயற்சி வசூல்:
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவிலும் விடாமுயற்சி படத்தின் வசூல் இரண்டாவது நாளில் பெரும் சரிவை கண்டுள்ளது.சர்வதேச அளவிலும் இதே சூழல் நிலவுவதாகவே தெரிகிறது. அதன்படி, இரண்டாவது நாள் முடிவில், தேசிய அளவில் 34 முதல் 35 கோடி ரூபாயும், சர்வதேச அளவில் 62.45 கோடி முதல் 63.45 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். முதல் நாளிலேயே இப்படம் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படும், நிலையில் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் சுமார் 60 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
மீண்டு வருமா விடாமுயற்சி?
முதல் இரண்டு நாட்களும் வேலைநாட்கள் என்பதால், படத்தின் வசூல் சரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை என்பது திரைத்துறையினரின் கருத்தாக உள்ளது. இன்று முதல் வார இறுதி தொடங்குவதால், தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகாவே லைகா நிறுவனம் சார்பில் வெளியான படங்கள், பெரிய வெற்றி எதையும் ஈட்டவில்லை. அந்த சூழலை விடாமுயற்சி மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளதால், லைகா நிறுவனத்தின் நிதிநிலை மேலும் மோசமாகலாம் என கூறப்படுகிறது.
விடாமுயற்சி கதைக்களம்
திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ அஜித்தும், த்ரிஷாவும் முடிவு எடுக்கின்றனர். அதற்காக த்ரிஷாவை அவரது வீட்டில் விடுக்க செல்லும்போது, அவர் கடத்தப்படுகிறார். இதையடுத்து தனது மனைவியை அஜித் மீட்டாரா? இல்லையா? அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே படத்தின் ஒன்லைன். பெரும் இடைவெளிக்குப் பிறகு வெளியான விடாமுயற்சி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.