நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இது தைப்பொங்கல் அல்ல 


வரும் ஜனவரி 15 ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பண்டிகை வருகிறது என்றாலும், இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது என சொல்லலாம். காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக களமிறங்குவதால் எந்த படம் ஹிட்டாக போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. 






வாரிசு பொங்கல்


இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.






பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பக்கா பேமிலி என்டெர்டெயின்மென்ட் ஆக உருவாகியுள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 13 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் ட்ரெய்லர் தெலுங்கு படத்தின் சாயல் போன்று இருப்பதாகவும், பார்த்து பார்த்து சலித்த கதையை வம்சி கையில் எடுத்திருப்பதாகவும் ஒரு பக்கம் விமர்சனம் எழுந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப கதையில் விஜய் நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. 


வாரிசு vs துணிவு 


வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் அஜித் நடித்த துணிவு படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் வாரிசு படமும் அதே ஜனவரி 11 ஆம் தேதி தான் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.