கோலிவுட் வட்டாரத்தில்  ஏகப்பட்ட சர்ச்சைகளுடன் வலம் வரும் நடிகை வனிதா விஜயகுமார். பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்துக்கொண்ட விவகாரத்தில் இவருக்கும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இடையில் கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டது. சில நாட்கள் கழித்து மீண்டும் லக்‌ஷ்மி  ராமகிருஷ்ணன் அந்த சம்பவம் தொடர்பாக வனிதாவை சாடியிருந்தார். இப்படியாக இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, வனிதா தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வனிதா, பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ’பிக்கப்’ என்ற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த வனிதா, அவர்களின் கேள்விகளுக்கு பளீச் பதில் கொடுத்துள்ளார்


 





கே: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ பங்கேற்குறாங்களாமே?


ஐயோ! அந்தம்மா பெரிய பணக்காரி ! இதல்லாம் அவங்களுக்கு தேவையில்லை என்றார்.



கே: ஜாதகப்படி உங்க அடுத்த கணவரின் பெயர் “s" ல தொடங்கும்னு சொன்னீங்க!  அந்த ‘s' யாரு ?


அவர் யார் என எனக்கே தெரியாது. பிறகு உங்களுக்கு எப்படி பதிலளிப்பேன் என்றார்  மேலும் நான் ஒரு விஷயத்தை ஆழமாக நம்புகிறேன். நாளை என்ன நடக்க போகிறது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. இன்று இந்த நொடி எப்படி வாழ்கிறோம் என்பதுதான் வாழ்க்கை. நான் நாளை பற்றிய எதிர்பார்ப்புகள் மட்டுமே எனக்கு இருக்கின்றது.


கே: வனிதா வாழ்க்கையில இன்னொருத்தர எதிர்பார்க்கலாமா?


அதெல்லாம் சொல்ல முடியாதுங்க! அது சஸ்பென்ஸ் கதை மாதிரி என்றார் சிரித்தபடி 



கே:சின்னத்திரை நடிகைகள் அதிக கவர்ச்சியுடன் புகைப்படம் வெளியிடுவது , வெள்ளித்திரை வாய்ப்பிற்கா?


கவர்ச்சி என்பது பார்க்கும் கண்ணோட்டங்களையும் , கவர்ச்சி காட்ட விரும்பும் நபரின் எண்ணத்தையும் பொருத்தது. இதுக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. நடிப்பு துறை சாராத பல பெண்களும் இன்று கவர்ச்சி காட்டத்தான் செய்கிறார்கள் . அதற்கு பெயர் ஃபேஷன் . தங்களுக்கு பொருத்தமாக இருந்தால் எதை வேண்டுமானாலும் அணியலாம். கவர்ச்சி காட்டி எந்தவொரு நடிகையும் சினிமா வாய்ப்பை பெற்றதாக எனக்கு தெரியவில்லை மற்றபடி வாய்ப்பு என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்றுதான் என்றார்.


 




கே: நீங்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாவது ஏன்?


நான் எப்போதும் சொல்வது போலதான், சர்ச்சை என்பது வேறு பரபரப்பு என்பது வேறு. அதை நான் சர்ச்சையாகவே பார்ப்பதில்லை என பதிலளித்தார் வனிதா.


கே:ரியாலிட்டி ஷோ மக்களுக்கு தேவையான ஒன்றா?


என்னை பொறுத்தவரை இது எல்லாமே பொழுதுபோக்குதான். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகத்தில் ஒடிடி போன்ற தளங்கள் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகளும் கிடைக்கிறது. இவையெல்லாம் வரவேற்க்கத்தக்க ஒன்றுதான்.


கே:திரில்லர் படத்தில் ஒப்பந்தமாக காரணம் என்ன?


எனக்கு திரில்லர் கதைகள் ரொம்ப பிடிக்கும். அடுத்து என்ன?அடுத்து என்ன? என சுவாரஸ்யம் இருக்கும் .  என் வாழ்க்கையும் அப்படியானதுதானே என்றார் சிரித்தபடி