சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலே இருக்கும். அந்த வகையில், அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்ராஜ் –துளசியின் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து இருந்து வந்தது.


இந்த தொடரில் சின்ராஜ். – துளசி கதாபாத்திரங்கள் மாறிய பிறகு, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், புதிய நடிகர்களும் தங்களது அனுபவமான நடிப்பால் சின்ராஜ் – துளசி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி வருகின்றனர். தனது சொந்த மாமன் குடும்பமே இன்று பகையாளியாக மாறியதால் தங்கை துளசியிடம் சரியாக பேச முடியாமல் அண்ணன் சின்னராஜ் அவதிப்பட்டு வருகிறார். அவரது அவதியை துளசியின் மாமனார் தங்கை ரசித்து வருகிறார்.




இந்த நிலையில், நேற்றைய எபிசோடில் சின்ராஜூம், துளசியின் கணவர் ராஜபாண்டியும் சிலம்ப போட்டியில் மோதுவது போன்று காட்டப்பட்டிருந்தது. இன்றைய எபிசோடில் ராஜபாண்டி வெற்றி பெற்றது போல காட்டப்பட்டது. இருப்பினும் தனது தங்கையின் கணவன் என்ற ஒரே காரணத்திற்காகவே சின்ராஜ் சிலம்ப போட்டியில் வெற்றியை விட்டுக்கொடுத்திருப்பார். இதை ஏற்க மறுத்த ராஜபாண்டி குடும்பத்தின் முன்பே மீண்டும் சின்ராஜ் அந்த திருவிழா கூட்டத்தில் ஒரு கும்பலையே துவம்சம் செய்து தனது பலத்தை நிரூபிப்பார்.


இன்றைய எபிசோடின் இறுதியில் எனது கணவன் வெற்றி பெற்றது சந்தோஷம் என்றால், அதை விட எனது கணவன் வெற்றி பெற எனது அண்ணன் விட்டுக்கொடுத்தது ரொம்ப சந்தோஷம் என்று துளசி கூறுவது போல இன்றைய எபிசோட் முடிகிறது. இந்த தொடர் முழுவதும் தனி பி.ஜி.எம். எதுவும் போடாமல் அண்ணாத்த படத்தின் பி.ஜி.எம்.-யே பயன்படுத்தி வருகின்றனர்.




இன்றைய எபிசோடில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற உன்கூடவே பொறக்கனும் பாடல் இசையையும் ஒலிக்கவிட்டு, ரசிகர்களை கட்டிப்போட முயற்சித்துள்ளனர். அண்ணாத்த படம் வெளியான பிறகு, வானத்தைப் போல தொடரின் பி.ஜி.எம். முழுவதும் அண்ணாத்த படத்தின் பி.ஜி.எம்.லியே ஒலிபரப்பாவதால் ரசிகர்கள் பலருக்கு வானத்தை போல பி.ஜி.எம்.தான் அண்ணாத்த படத்தில் போட்டுள்ளனரோ என்று சந்தேகப்படும் அளவிற்கு சூழல் மாறியுள்ளது.


அண்ணாத்த, நம்மவீட்டுப்பிள்ளை படங்களின் பின்னணி இசையின் ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடரில் எப்போது மீண்டும் சின்ராஜ் – துளசி எப்போது மீண்டும் பாசமலர்களாக மாற முடியும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண