முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ஏன் முன்னாள் அமைச்சர் கூட கேள்விபட்டிருப்போம். ஆனால் முன்னாள் டிக்டாக் பிரபலம் எனக்கூறிக்கொண்டு சிலர் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவில்லாமல் போய் கொண்டிருக்கிறது. அவர்களின் உலகமே அலாதியானது. தனியானது. அதில் குறிப்பிடும்படியானவர்கள் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து, சூர்யாதேவி, திருச்சி சாதனா, சிக்கந்தர் என்ற சிக்கா என லிஸ்ட் பெரிதாய் போகும். ஆனால் இவர்கள் எப்போது ஒற்றுமையாய் இருப்பார்கள், எப்போது சண்டை போடுவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 


ரவுடிபேபி சூர்யாவுக்கும் சிக்காவுக்கும் சண்டை, சிக்காவுக்கும் சூர்யா தேவிக்கும் சண்டை, சூர்யா தேவிக்கும் ரவுடி பேபி சூர்யாவுக்கும் சண்டை, ரவுடி பேபி சூர்யாவுக்கும் ஜி.பி.முத்துவுக்கும் சண்டை, சிக்காவுக்கும் சாதானாவுக்கும் சண்டை, சாதனாவுக்கும் ரவுடிபேபி சூர்யாவுக்கும் சண்டை... இப்படியே இவர்களுக்குள்ளான சண்டையை எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். அந்த வரிசையில், ஒன்றாக இருந்த ரவுடிபேபி சூர்யாவும்-சிக்காவும் தற்போது பிரிந்து, தனிமையில் தவித்துக் கொண்டிருக்கிறார் சிக்கா. பட்ட காலிலே படும் என்பதைப் போல ,போதாக்குறைக்கு இரு வாரங்களுக்கு முன் வீடு தேடி போய் சிக்காவை செருப்பால் அடித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார் சூர்யா தேவி. 




இப்போது கரெண்ட் டாபிக், ‛சிக்கா-சூர்யா தேவி’ மோதல் தான். அடித்ததோடு இல்லாமல் அடுத்தடுத்து வீடியோக்கள் போட்டு சிக்காவை மேலும் வெறுப்பேற்றி வருகிறார் சூர்யா தேவி. இந்நிலையில் தான் சிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு அழுகாத குறையாக அழுதுள்ளார். அதுமட்டுமல்லால் சூர்யா தேவி மீது நடவடிக்கை இல்லையென்றால் நேரலையில் மீசையை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார் சிக்கா. இதோ அவரது வருத்தப்பட்ட வீடியோ பதிவின் பேச்சு...


 


இரண்டு வாரத்திற்கு முன் நடந்த அந்த துயரமான சம்பவம் உங்க எல்லோருக்கும் தெரியும். என்னை வேதனைபடுத்திய நாள் அது தான். சூர்யா தேவி என்னை செருப்பால் அடித்தார். இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லா ஊடகத்திலும் அது பற்றி செய்தி வந்துள்ளது. புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. காவல்துறை என்னை அழைக்கவும் இல்லை. சூர்யா தேவி, வீட்டில் குழம்பு வைத்துக் கொண்டு எனக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். இதுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை விட கேவலம் எதுவும் இல்லை. வீடு தேடி வந்து செருப்பால் அடித்துவிட்டு அவங்க அவங்க வேலையை பார்க்கிறாங்க. எப்போ வேண்டுமானாலும் வந்து திரும்ப அடிப்பேன் என்று கூறியுள்ளார். இது எனக்கு பாதுகாப்பு இல்லாத தருணம். ஏற்கனவே நான் நொந்து போயுள்ளேன். எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று. யார் தவறுசெய்தாலும் அதை திருத்த வேண்டியது காவல்துறை.




சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுத்து பொதுவான நீதி கிடைக்க உதவவேண்டும். சனிக்கிழமை வரை நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்பேன். இல்லையென்றால், அடுத்த வாரம் போராட்டம் அறிவிப்பேன். அது எதுமாதிரியான போராட்டம் என பின்னர் தெரியும். ஒரு பெண்ணிடம் அடி வாங்கிட்டீயே எதுக்கு உனக்கு மீசை என பலர் கமெண்ட் போடுகின்றனர். சனிக்கிழமை வரை பார்ப்பேன் நடவடிக்கை இல்லையென்றால் ஞாயிறு கிழமை எனது மீசையை நேரலையில் எடுத்துவிடுவேன். அதற்கு மேல் நான் எதற்கு மீசை வைத்திருக்க வேண்டும். இது என்னுடைய கடைசி கட்ட முடிவு . அதன் பின் அடுத்த கட்ட முடிவை அறிவிப்பேன், என பேசியுள்ளார்.


சிக்கா பேசிய வீடியோ இதோ...



சிக்கா மீசை தப்புமா... சூர்யா தேவி விசாரிக்கப்படுவாரா... நேரலை சபதம் தடுக்கப்படுமா... என பல்வேறு தரப்பினரும் இப்போதே நகைக்குரிய வகையில் விவாதிக்க துவங்கியுள்ளனர்.