Just In





Radha: அந்த நடிகருடன் காதல்; ஆனால் ராதாவுக்கு போட்டி போட்ட 2 டாப் ஹீரோஸ்? புட்டு புட்டு வைத்த பிரபலம்!
ராதாவுக்காக மாஸ் ஹீரோக்களுக்கு இடையில் சண்டை வரும் என்று, மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கோலோச்சியவர் தான் நடிகை ராதா. இவருடைய மூத்த சகோதரி தான் அம்பிகா. இருவருமே தமிழ் சினிமாவை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். அந்தளவிற்கு ஏராளமான படங்களி நடித்து ஹிட் கொடுத்தார்கள். இவர்களது குடும்பம் கேரளாவில் மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பம்.
இந்த நிலையில் தான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன் ராதாவிற்காக இரு ஹீரோக்கள் சண்டை போட்டது பற்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் அருகிலுள்ள கல்லாறு தான் ராதாவின் சொந்த ஊர். அம்பிகா மற்றும் ராதாவின் அம்மாவன சரசம்மா மாவட்ட அளவில் சிறந்த பேச்சாளர். காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ராதா.

இந்தப் படம் அதிக நாட்கள் ஓடி ஹிட் கொடுத்தது. அதுமட்டுமின்றி சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்பட 8 பிரிவுகளில் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது. ராதாவின் உண்மையான பெயர் உதய சந்திரிகா. படத்திற்காக அவரது பெயரை ராதாவாக மாற்றவே அதுவே அவரது அடையாளமாக மாறிவிட்டது.
ராதாவை தனது கட்டுப்பாட்டில் வைக்க ஆசைப்பட்ட பாரதிராஜா தனது உதவியாளரான சித்ரா லட்சுமணனை அவருக்கு மேனேஜராக்கினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் மற்றும் ராதாவின் கெமிஸ்ட்ரி அதிகளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடித்தார்.
ராதாவின் வெற்றிக்கு அவரது அக்கா அம்பிகாவும் ஒரு காராணமாக இருந்தார். அலைகள் ஓய்வதில்லை படம் மட்டுமின்றி இளஞ்ஜோடிகள், பக்கத்து வீட்டு ரோஜா, வாலிபமே வா வா, நல்ல தம்பி ஆகிய படங்களில் கார்த்திக் மற்றும் ராதா இருவரும் இணைந்து நடித்தனர்.
சினிமாவில் இருவரும் ஒன்றாக நடித்தபோது ஒருவருக்கொருவர் காதலில் விழுந்துள்ளனர். ஒரு கட்டத்தி இருவரும் ஓடிப்போகும் நிலை கூட வந்திருக்கிறது. அப்போது சரசம்மா தான் அவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதையடுத்து சிரஞ்சீவியுடன் காதல் வயப்பட்டுள்ளார். ராதாவை யார் தங்களது கட்டுக்குள் வைப்பது என்று நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் சிரஞ்சீவிக்கும் இடையில் சண்டை கூட வருமாம். இதையெல்லாம் கடந்து 1991 ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவரை திருமணம் செய்தார். அதன் பிறகு தொழிலதிபராகிவிட்டார். இப்போது 5 ஸ்டார் ஹோட்டல் 5 வைத்துள்ளார். இதில் உதய சமுத்திரா என்ற பெயரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலானது UD Shoot என்ற விமான நிலையம் அருகில் உள்ளதாம். இங்கு தான் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தங்குவார்களாம். ஹோட்டல் தவிர, ஸ்கூல், திருமண மண்டபம், ஏஆர்எஸ் ஸ்டுடியோ என்று பல வற்றை ராதா நிர்வாகம் செய்து வருகிறார். இதனுடைய மதிப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.