தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வித்தியாசமான கதைக் களங்களுடன் வரும் இளைஞர்களுடன் முன்னணி கதாநாயகர்களும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர். அந்த வகையில் ரஜினி பா.ரஞ்சித்துடன்  ‘கபாலி’ ‘ காலா’ உள்ளிட்ட படங்களில் இணைந்தார். அதே போல நடிகர் விஜயும் அட்லியுடன் ‘தெறி’  ‘மெர்சல்’  ‘பிகில்’ உள்ளிட்ட படங்களிலும், லோகேஷ் கனகராஜூடன்  ‘மாஸ்டர்’ படத்திலும், நெல்சன் திலீப் குமாருடன் ‘ பீஸ்ட்’ படத்திலும், அஜித் வினோத்தின்  ‘நேர்கொண்ட பார்வை’,  ‘வலிமை’ உள்ளிட்ட படங்களிலும் இணைந்துள்ளனர்.


மேற்கண்ட படங்களில் திரையரங்குகளில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் திலீப் குமார் ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் இயக்குநர்கள் மூவரும் செல்ஃபி எடுத்துக்கொள்ள, அவர்கள் செல்ஃபி எடுப்பதை நடிகர் விஜய் போட்டோ எடுத்துள்ளார். இந்தப் போட்டாவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, புகைப்படம் எடுத்தவர் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.