வயநாடு
வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகள் 6 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த பேரிடரில் 360 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவ படையினர் மொத்தம் 1300 க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
திரைத்துறையைச் சேர்ந்த பலர் கேரள அரசுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் விக்ரம் , நயன்தாரா , உள்ளிட்டவர்கள் நிதி வழங்கினார்கள். மலையாள நடிகர்கள் ஃபகத் ஃபாசில் , மம்மூட்டி , மோகன்லால் ,ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நிதி வழங்கினார்கள்.
உதவிக்கரம் நீட்டிய டோலிவுட் சூப்பர்ஸ்டார்ஸ்
தற்போது தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சீரஞ்சீவி , ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து 1 கோடி நீதி அறிவித்துள்ளார்கள். இவர்களுடன் நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் வழங்கியுள்ளார்.